ETV Bharat / state

தேர்தலுக்குப்பின் சுழன்று அடிக்கும் கரோனா: தற்காத்துக் கொள்வது எப்படி?

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டவர்களும், அவர்களுக்காகப் பரப்புரை மேற்கொண்டவர்களும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தொடர்ந்து கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். இதனால், நாட்டில் தடுப்பூசி போடும் திட்டம் மக்களுக்குப் போதிய அளவு பலன் அளித்ததா என்ற கேள்வி அதிகளவு எழுந்துள்ளது.

author img

By

Published : Apr 13, 2021, 12:15 PM IST

Updated : Apr 13, 2021, 2:26 PM IST

doctors creat awareness to vaccination and control corona spread
doctors creat awareness to vaccination and control corona spread

திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி, பொதுச்செயலாளர் துரைமுருகன், அம்பத்தூர் திமுக வேட்பாளர் ஜோசப் சாமுவேல், சிவகங்கை கம்யூனிஸ்ட் வேட்பாளர் குணசேகரன், அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலை ஆகியோருக்குத் தேர்தல் பரப்புரையை அடுத்து கரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.

ஆயிரம் விளக்குத் தொகுதியில் போட்டியிட்ட பாஜகவைச் சேர்ந்த குஷ்புவின் கணவர் சுந்தர். சிக்கும் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி காலமானார்.

இதேபோல் தேர்தல் களத்தில் பணியாற்றிய தி.நகர் தொகுதி திமுக வேட்பாளர் கருணாநிதி, பல்லடம் அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தன், திருப்பூர் வடக்கு கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுப்பிரமணியன், புதுச்சேரி நெடுங்காடு தனித்தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாரிமுத்து எனத் தொடர்ந்து பெரும்பாலான வேட்பாளர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.

இவர்களுக்கே கரோனாவெனில்?

இவர்களில் பலர் இரண்டு தவணை கரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள். இருப்பினும் இவர்கள் கரோனா பிடியிலிருந்து தப்பவில்லை. இதையடுத்து, தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அனைவரும் தங்களைத் தனிமைப்படுத்தி கரோனா தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ள வேண்டும் எனச் சுகாதாரத் துறை தரப்பில் வேண்டுகோள்விடுக்கப்பட்டுள்ளது.

அனைத்துப் பாதுகாப்பு நெறிமுறைகளையும் பின்பற்றி பரப்புரை மேற்கொண்ட அரசியல் தலைவர்களே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளபோது, தேர்தல் பரப்புரையின்போது கூட்டம் கூட்டமாகக் குவிந்த மக்களின் நிலை என்ன என்ற கேள்வி தன்னிச்சையாக எழுகிறது. இது முதல் அலை கரோனா பாதிப்பைவிட அதிகளவு பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தை உண்டாக்கியுள்ளது.

இரண்டாம் அலை

கரோனா பரவலின் தாக்கம் இரண்டாம் அலையாக உருவாக தேர்தல் நேரத்தில் முகக் கவசங்கள் இன்றியும், போதிய இடைவெளிகளைப் பின்பற்றாமலும் மக்கள் கூட்டம் கூட்டமாகத் தேர்தல் பொதுக்கூட்டங்களில் பங்கேற்றதுமே முக்கியக் காரணம் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்தாண்டு நவம்பர் மாதத்திற்குப்பின் தொற்று குறைய தொடங்கியபின் மக்கள் கரோனாவை மறந்து இயல்புவாழ்க்கைக்கு முழுமையாகத் திரும்பினர். கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள மக்கள் போதிய ஆர்வம் காட்டவில்லை. முதலில் முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

தொடர்ந்து 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. ஆனால் தடுப்பூசி குறித்த அச்சம் நிலவியதால் நாட்டிலேயே மிகக் குறைந்த எண்ணிக்கையிலானவர்களுக்குத் தமிழ்நாட்டில் மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இங்கிலாந்தில் உருமாறிய கரோனா தாக்கம் முதலில் கடுமையான விதிகளின் காரணமாகக் கட்டுப்படுத்தப்பட்டது. கோயில் திருவிழாக்கள், தேர்தல் பரப்புரை காரணமாக மின்னல் வேகத்தில் தற்போது மீண்டும் கரோனா தொற்று மக்களிடம் பரவிவருகிறது.

ஏழு மாதங்களுக்குப் பின் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,000ஆக அதிகரித்துள்ளது. இது மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால் கடந்த காலத்தைப் போல தீவிர நடவடிக்கைகளை அரசு எடுக்கத் தொடங்கியுள்ளது.

தடுப்பூசி காலத்தின் கட்டாயமா?

கரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், உச்சபட்சமாக ஒரு லட்சத்து 68 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. சிகிச்சைப் பெறுவோர் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்துள்ளது.

தமிழ்நாட்டில் 600 மையங்களில் தொடங்கிய தடுப்பூசி பணி இதுவரை 1.50 கோடி பேருக்குப் போடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இதுவரை 37 லட்சம் பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார் மருத்துவர் சாந்தி

இந்தியா முழுவதும் 10 கோடி பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். ஆனால் தமிழ்நாட்டில் இதுவரை 10 விழுக்காடுகூட தடுப்பூசி செலுத்திக்கொள்ள யாரும் முன்வரவில்லை. தடுப்பூசி தொடர்பான அச்சமூட்டும் தகவல் வெளிவருவதால் 45 வயதிற்கு மேற்பட்டோர் தடுப்பூசி எடுத்துக்கொள்ள ஆர்வம் காட்டவில்லை.

பகுத்தறிவு பேசுகிற, அறிவியலை நம்புகிற தமிழ்நாட்டில் பெரும்பாலான மக்கள் தடுப்பூசி செலுத்த தயக்கம் காட்டுவது வருத்தமளிக்கிறது. தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி, 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசு முயற்சிக்க வேண்டும்.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதைக் குறைத்து உள்நாட்டில் அதிக அளவில் தடுப்பூசி உற்பத்திசெய்து போதிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். உள்நாட்டியிலேயே தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனம் 3,000 கோடி ரூபாய் நிதி கோரியுள்ளது. மத்திய அரசு வழங்கி உற்பத்தியை அதிகரிப்பது குறித்து அவசரகால முடிவு எடுக்க வேண்டும் என்கிறார் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் மருத்துவர் சாந்தி.

மேலும், அவர் பேசுகையில், தடுப்பூசி போடுவது தொற்றின் வேகத்தைக் குறைக்கும். அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். வீண் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்கிறார்.

தடுப்பூசி உடலில் நோயெதிர்ப்புச் சக்தியாக மட்டுமே செயல்படுகிறது, மக்கள் முழுமையாகத் தடுப்பூசி எடுத்துக்கொண்டாலும், போதிய இடைவெளி, முகக் கவசம் அணிந்தால் மட்டுமே தொற்று எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த இயலும்.

தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார் மருத்துவர் ஆனந்த்குமார்

இந்தியாவைப் பொறுத்தவரை கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் நல்ல நோயெதிர்ப்புச் சக்தியை அளிக்கின்றன. பொதுமக்கள் எந்த ஒரு அச்சமின்ற தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

கரோனா நீண்டகாலம் இருக்கும் என்பதால் தடுப்பூசி மட்டுமே தீர்வு. இது குறித்து பரவும் போலி செய்திகளை மக்கள் யாரும் நம்ப வேண்டாம் எனத் தெரிவிக்கிறார் கரோனா சிறப்புப் பிரிவு அலுவலர் ஆனந்த்குமார்.

திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி, பொதுச்செயலாளர் துரைமுருகன், அம்பத்தூர் திமுக வேட்பாளர் ஜோசப் சாமுவேல், சிவகங்கை கம்யூனிஸ்ட் வேட்பாளர் குணசேகரன், அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலை ஆகியோருக்குத் தேர்தல் பரப்புரையை அடுத்து கரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.

ஆயிரம் விளக்குத் தொகுதியில் போட்டியிட்ட பாஜகவைச் சேர்ந்த குஷ்புவின் கணவர் சுந்தர். சிக்கும் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி காலமானார்.

இதேபோல் தேர்தல் களத்தில் பணியாற்றிய தி.நகர் தொகுதி திமுக வேட்பாளர் கருணாநிதி, பல்லடம் அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தன், திருப்பூர் வடக்கு கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுப்பிரமணியன், புதுச்சேரி நெடுங்காடு தனித்தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாரிமுத்து எனத் தொடர்ந்து பெரும்பாலான வேட்பாளர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.

இவர்களுக்கே கரோனாவெனில்?

இவர்களில் பலர் இரண்டு தவணை கரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள். இருப்பினும் இவர்கள் கரோனா பிடியிலிருந்து தப்பவில்லை. இதையடுத்து, தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அனைவரும் தங்களைத் தனிமைப்படுத்தி கரோனா தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ள வேண்டும் எனச் சுகாதாரத் துறை தரப்பில் வேண்டுகோள்விடுக்கப்பட்டுள்ளது.

அனைத்துப் பாதுகாப்பு நெறிமுறைகளையும் பின்பற்றி பரப்புரை மேற்கொண்ட அரசியல் தலைவர்களே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளபோது, தேர்தல் பரப்புரையின்போது கூட்டம் கூட்டமாகக் குவிந்த மக்களின் நிலை என்ன என்ற கேள்வி தன்னிச்சையாக எழுகிறது. இது முதல் அலை கரோனா பாதிப்பைவிட அதிகளவு பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தை உண்டாக்கியுள்ளது.

இரண்டாம் அலை

கரோனா பரவலின் தாக்கம் இரண்டாம் அலையாக உருவாக தேர்தல் நேரத்தில் முகக் கவசங்கள் இன்றியும், போதிய இடைவெளிகளைப் பின்பற்றாமலும் மக்கள் கூட்டம் கூட்டமாகத் தேர்தல் பொதுக்கூட்டங்களில் பங்கேற்றதுமே முக்கியக் காரணம் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்தாண்டு நவம்பர் மாதத்திற்குப்பின் தொற்று குறைய தொடங்கியபின் மக்கள் கரோனாவை மறந்து இயல்புவாழ்க்கைக்கு முழுமையாகத் திரும்பினர். கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள மக்கள் போதிய ஆர்வம் காட்டவில்லை. முதலில் முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

தொடர்ந்து 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. ஆனால் தடுப்பூசி குறித்த அச்சம் நிலவியதால் நாட்டிலேயே மிகக் குறைந்த எண்ணிக்கையிலானவர்களுக்குத் தமிழ்நாட்டில் மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இங்கிலாந்தில் உருமாறிய கரோனா தாக்கம் முதலில் கடுமையான விதிகளின் காரணமாகக் கட்டுப்படுத்தப்பட்டது. கோயில் திருவிழாக்கள், தேர்தல் பரப்புரை காரணமாக மின்னல் வேகத்தில் தற்போது மீண்டும் கரோனா தொற்று மக்களிடம் பரவிவருகிறது.

ஏழு மாதங்களுக்குப் பின் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,000ஆக அதிகரித்துள்ளது. இது மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால் கடந்த காலத்தைப் போல தீவிர நடவடிக்கைகளை அரசு எடுக்கத் தொடங்கியுள்ளது.

தடுப்பூசி காலத்தின் கட்டாயமா?

கரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், உச்சபட்சமாக ஒரு லட்சத்து 68 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. சிகிச்சைப் பெறுவோர் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்துள்ளது.

தமிழ்நாட்டில் 600 மையங்களில் தொடங்கிய தடுப்பூசி பணி இதுவரை 1.50 கோடி பேருக்குப் போடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இதுவரை 37 லட்சம் பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார் மருத்துவர் சாந்தி

இந்தியா முழுவதும் 10 கோடி பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். ஆனால் தமிழ்நாட்டில் இதுவரை 10 விழுக்காடுகூட தடுப்பூசி செலுத்திக்கொள்ள யாரும் முன்வரவில்லை. தடுப்பூசி தொடர்பான அச்சமூட்டும் தகவல் வெளிவருவதால் 45 வயதிற்கு மேற்பட்டோர் தடுப்பூசி எடுத்துக்கொள்ள ஆர்வம் காட்டவில்லை.

பகுத்தறிவு பேசுகிற, அறிவியலை நம்புகிற தமிழ்நாட்டில் பெரும்பாலான மக்கள் தடுப்பூசி செலுத்த தயக்கம் காட்டுவது வருத்தமளிக்கிறது. தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி, 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசு முயற்சிக்க வேண்டும்.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதைக் குறைத்து உள்நாட்டில் அதிக அளவில் தடுப்பூசி உற்பத்திசெய்து போதிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். உள்நாட்டியிலேயே தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனம் 3,000 கோடி ரூபாய் நிதி கோரியுள்ளது. மத்திய அரசு வழங்கி உற்பத்தியை அதிகரிப்பது குறித்து அவசரகால முடிவு எடுக்க வேண்டும் என்கிறார் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் மருத்துவர் சாந்தி.

மேலும், அவர் பேசுகையில், தடுப்பூசி போடுவது தொற்றின் வேகத்தைக் குறைக்கும். அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். வீண் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்கிறார்.

தடுப்பூசி உடலில் நோயெதிர்ப்புச் சக்தியாக மட்டுமே செயல்படுகிறது, மக்கள் முழுமையாகத் தடுப்பூசி எடுத்துக்கொண்டாலும், போதிய இடைவெளி, முகக் கவசம் அணிந்தால் மட்டுமே தொற்று எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த இயலும்.

தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார் மருத்துவர் ஆனந்த்குமார்

இந்தியாவைப் பொறுத்தவரை கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் நல்ல நோயெதிர்ப்புச் சக்தியை அளிக்கின்றன. பொதுமக்கள் எந்த ஒரு அச்சமின்ற தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

கரோனா நீண்டகாலம் இருக்கும் என்பதால் தடுப்பூசி மட்டுமே தீர்வு. இது குறித்து பரவும் போலி செய்திகளை மக்கள் யாரும் நம்ப வேண்டாம் எனத் தெரிவிக்கிறார் கரோனா சிறப்புப் பிரிவு அலுவலர் ஆனந்த்குமார்.

Last Updated : Apr 13, 2021, 2:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.