சென்னை: டெல்டா மண்டலம், தென் மண்டலம், மேற்கு மண்டலம், வடக்கு மண்டலம் என 4 மண்டலங்களைத் தொடர்ந்து சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களின் 12 ஆயிரம் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறைக் கூட்டம் இன்று (நவ.5) திருவள்ளூரில் உள்ள கலைஞர் திடலில் நடைபெற்றது.
-
#Live: திருவள்ளூர் - சென்னை மண்டல வாக்குச்சாவடிப் பொறுப்பாளர்கள் பயிற்சிப் பாசறைக் கூட்டம்https://t.co/rXkm9bWYXs
— M.K.Stalin (@mkstalin) November 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#Live: திருவள்ளூர் - சென்னை மண்டல வாக்குச்சாவடிப் பொறுப்பாளர்கள் பயிற்சிப் பாசறைக் கூட்டம்https://t.co/rXkm9bWYXs
— M.K.Stalin (@mkstalin) November 5, 2023#Live: திருவள்ளூர் - சென்னை மண்டல வாக்குச்சாவடிப் பொறுப்பாளர்கள் பயிற்சிப் பாசறைக் கூட்டம்https://t.co/rXkm9bWYXs
— M.K.Stalin (@mkstalin) November 5, 2023
இந்த நிகழ்ச்சியில் தி.மு.க தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உரையுடன் தொடங்குவதாக இருந்த நிலையில் நேற்று (நவ.4) மு.க.ஸ்டாலினுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவர்கள் அவரை ஓய்வெடுக்கும்படி அறிவுறுத்தி உள்ளனர். இந்நிலையில் காணொளி காட்சி வாயிலாகச் சிறிது நேரம் தொண்டர்களிடையே மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.