ETV Bharat / state

மங்களகரமான கோலத்தை அலங்கோலப்படுத்தும் திமுக - அமைச்சர் குற்றச்சாட்டு - Minister Pandiyarajan meets press meet

சென்னை: கோலம் என்பது மங்களத்தின் அடையாளம் அதை எதிர்ப்பின் அடையாளமாக திமுக மாற்ற முயற்சித்தும் அவை சரியாக சென்றடையவில்லை என்று அமைச்சர் பாண்டியராஜன் குற்றம்சாட்டினார்.

minister pandiayarajan
minister pandiayarajan
author img

By

Published : Dec 31, 2019, 5:27 PM IST

சென்னை ஆவடியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் பாண்டியராஜன், "குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கனிமொழி அறிக்கை விட்டும் அனைத்து இடங்களிலும் 10 விழுக்காடு வீடுகளில்கூட கோலம் போடவில்லை. 2 விழுக்காடு வீடுகளில் மட்டும்தான் கோலம் போடப்பட்டுள்ளது . இது அவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும்.

திமுகவை சாடி பேசிய அமைச்சர் பாண்டியராஜன்

திமுகவை சாடி பேசிய அமைச்சர் பாண்டியராஜன்

இதுபோல், எதிர்ப்பை சொல்வதை யாரும் விரும்புவதில்லை என்று நினைக்கிறேன். இதேபோல் CAA, NRC-யால் கைதானவர்கள் மொத்தம் 8000 பேர்தான். ஆனால், 2 லட்சம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக திமுகவினர் தெரிவிக்கின்றனர். கைதாகி வெளியே வந்து பிறகு CAB, NRCயை எதிர்க்கும் நபர்கள் 8,000 பேர்தான். இது ஒன்றும் பெரிய எண்ணிக்கை கிடையாது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து 12 கட்சிகள் இணைந்து நடத்திய ஒரு பேரணியில் மொத்தமே 8,000 பேர் இருந்தனர். இது ஒன்றும் தவறான சட்டம் அல்ல. இதனால் யாருக்கும் எந்த பிரச்னையும் கிடையாது. என்னைப் பொறுத்தவரை இது தேவையற்ற பயத்தை கிளப்பிவிடக்கூடிய ஒரு விஷயமாக பார்க்கிறேன்.

கோலம் என்பது மங்களத்தின் அடையாளம். அதை எதிர்ப்பின் அடையாளமாக திமுக மாற்றுவது முறையானதல்ல" என்றார்.

இதையும் படிங்க: 'வாழ்வில் வசந்தம் மலரட்டும்' - முதலமைச்சர் புத்தாண்டு வாழ்த்து

சென்னை ஆவடியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் பாண்டியராஜன், "குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கனிமொழி அறிக்கை விட்டும் அனைத்து இடங்களிலும் 10 விழுக்காடு வீடுகளில்கூட கோலம் போடவில்லை. 2 விழுக்காடு வீடுகளில் மட்டும்தான் கோலம் போடப்பட்டுள்ளது . இது அவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும்.

திமுகவை சாடி பேசிய அமைச்சர் பாண்டியராஜன்

திமுகவை சாடி பேசிய அமைச்சர் பாண்டியராஜன்

இதுபோல், எதிர்ப்பை சொல்வதை யாரும் விரும்புவதில்லை என்று நினைக்கிறேன். இதேபோல் CAA, NRC-யால் கைதானவர்கள் மொத்தம் 8000 பேர்தான். ஆனால், 2 லட்சம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக திமுகவினர் தெரிவிக்கின்றனர். கைதாகி வெளியே வந்து பிறகு CAB, NRCயை எதிர்க்கும் நபர்கள் 8,000 பேர்தான். இது ஒன்றும் பெரிய எண்ணிக்கை கிடையாது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து 12 கட்சிகள் இணைந்து நடத்திய ஒரு பேரணியில் மொத்தமே 8,000 பேர் இருந்தனர். இது ஒன்றும் தவறான சட்டம் அல்ல. இதனால் யாருக்கும் எந்த பிரச்னையும் கிடையாது. என்னைப் பொறுத்தவரை இது தேவையற்ற பயத்தை கிளப்பிவிடக்கூடிய ஒரு விஷயமாக பார்க்கிறேன்.

கோலம் என்பது மங்களத்தின் அடையாளம். அதை எதிர்ப்பின் அடையாளமாக திமுக மாற்றுவது முறையானதல்ல" என்றார்.

இதையும் படிங்க: 'வாழ்வில் வசந்தம் மலரட்டும்' - முதலமைச்சர் புத்தாண்டு வாழ்த்து

Intro:Body:கோலம் என்பது மங்கலத்தின் அடையாளம் அதை எதிர்ப்பின் அடையாளமாக திமுக மாற்றுவது மக்களிடம் சரியாக சென்றடைய வில்லை என்று அமைச்சர் பாண்டியராஜன் ஆவடியில் பேட்டி.


இஸ்லாமிய இயக்கமான ஜியா அமைப்பின் தலைமை ஹாஜியே கூறியிருக்கிறார் குடியுரிமை கொடுக்கக்கூடாது என்று கூறியிருக்கிறார்.

கனிமொழி எம்.பி மூலம் அறிக்கை விட்டும் அனைத்து இடங்களிலும் கோலம் போடச் சொல்லி 10 விழுக்காடு வீடுகளில் கூட கோலம் போட வில்லை அவர்களுக்கு அது ஒரு பாடமாக இருக்கும்.

மக்கள் என்ன செய்தியை சொல்கிறார்கள் என்றால் ஒரு 2% வீடுகளில் மட்டும்தான் கோலம் போடப்பட்டுள்ளதாகவும்.

அந்த தீர்ப்பை எதிர்த்து 98 விழுக்காடு மக்கள் அதை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பது தான் தோன்றுகிறது.

இந்த மாதிரி எதிர்ப்பை சொல்வதை யாரும் விரும்புவதில்லை என்று நினைக்கிறேன்.

உள்ளாட்சித் தேர்தல் என் 3 ஆண்டுகள் ஏன் வரவில்லை என்று பா. சிதம்பரம் பேசியது அதிகமாக கவனிக்கப்பட்டது.

ஆனால் அதை எந்த இடத்திலும் திமுக கேள்வி கேட்க முடியவில்லை. அவர்களுக்கு நம்பகத்தன்மை இல்லை என்று நான் நினைக்கிறேன்.

திமுக காலகட்டத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் வன்முறை வெடித்து நடந்தது என்பது அவர்களுக்கு தெரியும் என்றும்.

தற்போது அமைதியாக தேர்தல் நடக்கிறது என்பதை மக்கள் ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றியை எங்களுக்கு அளிப்பார்கள் என நான் நம்புகிறேன்.



இதேபோல் CAA NRC யை கைதானவர்கள் மொத்தம் 8000 பேர் தான்.

திமுக வினர் கூறுகின்றனர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளார்கள் 2 லட்சம் பேர் 3 லட்சம் பேர் என சொல்லிக் கொண்டு திரிந்தது வருகிறார்கள்.

கைதாகி வெளியே வந்துபிறகு CAB NRC யை நாங்கள் எதிர்பார்க்கிறோம் என சொன்னவர்கள் 8000 பேர் தான் அது.

ஒன்றும் பெரிய எண்ணிக்கை கிடையாது அதுவும் 12 கட்சிகள் இணைந்து நடத்திய ஒரு பேரணியில் மொத்தமே 8000 பேர் இருந்துள்ளனர்.

அவ்வளவுதான் எதிர்ப்பு என்பதை காட்டுகிறது

இது ஒன்றும் தவறான சட்டம் அல்ல இதனால் எந்த இந்திய குடியுரிமை குடிமக்களுக்கும் எந்த பிரச்சினையும் கிடையாது.

இன்று இந்தியாவில் உள்ள 18 கோடி இந்திய முஸ்லிம்கள் யாருக்கும் எந்த பிரச்சினையும் கிடையாது புதிதாக வந்திருக்கிற 19 லட்சம் பங்களாதேஷ் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு தான் இந்த பிரச்சனை

அதிலும்கூட 5 சமுதாயங்களை சேர்ந்தவர்கள் சிறுபான்மையினராக இருந்து வந்தவர்களுக்கு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அனுமதிக்க பிறகு ஐந்து ஆண்டுகளுக்கு பதிவு செய்யலாம் ஒரு மாற்றி இருக்கிறார்கள் அந்த ஐந்து சமுதாயங்களை எண்ணிக்கை 2 லட்சம் பேர்தான் மீதமுள்ள 19 லட்சம் பேர் அங்கிருந்து வந்த இஸ்லாமியர்கள் தான்


என்னைப் பொருத்தவரை இது தேவையில்லாத தேவையற்ற பயத்தை கிளப்பிவிட கூடிய ஒரு விஷயம்
அதனால்தான் எந்த வடிவமாக இருந்தாலும் கோலமாக இருந்தாலும் பேரணியாக இருந்தாலும்
அது என்னைப் பொருத்தவரை அது ஒரு தேவையில்லாத ஆர்ப்பாட்டம் தேவையில்லாத ஒரு போராட்டம் தேவை இல்லாத ஒரு எதிர்ப்பு என்று நினைக்கிறேன் புரிஞ்சவங்க யாருமே அதை எதிர்க்க மாட்டார்கள் நினைக்கிறேன் என்னுடைய நம்பிக்கையாக இருக்கிறது.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.