ETV Bharat / state

பாஜக உடன் கூட்டணி வதந்தி: முற்றுப்புள்ளி வைத்த ஸ்டாலின் - அழகிரி சந்திப்பு

author img

By

Published : Jan 19, 2020, 2:14 PM IST

மு.க. ஸ்டாலின் - கே.எஸ். அழகிரி சந்திப்பு கூட்டணி தொடர்பாக நீண்ட நாள்களாக இருந்து வந்த பல வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

DMK Alliance with BJP rumors ends by MK Stalin meets KS Azhagiri
DMK Alliance with BJP rumors ends by MK Stalin meets KS Azhagiri

உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்ட இடஒதுக்கீடு விவகாரத்தில் திமுக - காங்கிரஸ் கட்சிகள் இடையே கருத்து வேறுபாடு நிலவிவந்தது. இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வதந்திகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.

திமுக அரசியல் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் ஆலோசனைப்படி, திமுக தனது கூட்டணியை மாற்றியமைக்கப் போகின்றது என்ற வதந்தியும் கடந்த சில தினங்களாகப் பேசப்பட்டு வந்தது. அதன்படி வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் போன்ற தகவல்களும் வெளியாகி பரபரப்பைக் கிளப்பின. அதேபோல் ரஜினியின் அரசியல் வருகையைப் பொறுத்து கூட்டணிகள் மாறும் என்றும் பல அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் 'திமுக கூட்டணி உடையும் என நான் முன்பே கூறியிருந்தேன்' என்று பேட்டியளித்தார். இதற்கு மத்தியில் திமுக பொருளாளர் துரைமுருகன், 'காங்கிரஸ் கூட்டணியை விட்டு செல்ல வேண்டும் என்றால் செல்லட்டும், காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு வங்கியே கிடையாது' எனக் கடுமையாகச் சாடியிருந்தார். இதற்கு காங்கிரஸ் எம்.பி., ஜெயகுமார் 'தலை இருக்கும் போது வால் ஆடக்கூடாது' என்று காரசாரமாகப் பதிலடி கொடுத்தார்.

அதேபோல் விருதுநகர் காங்கிரஸ் எம்.பி., மாணிக் தாகூர் 'திமுக கட்சிக்குள் ஸ்டாலின் முதலமைச்சர் ஆகக் கூடாது என சதி வேலைகள் நடக்கின்றன' என்று திடீர் புயலைக் கிளப்பினார். இவ்வாறு இரு கட்சிகளின் இரண்டாம் கட்ட தலைவர்களும் மாறிமாறி கருத்து தெரிவித்து கூட்டணி விரிசலை பெரிதாக்கிக்கொண்டே வந்தனர். இதுவே இரண்டு கட்சிகளுக்கும் கூட்டணியில் தொடர விருப்பம் இல்லையோ என்ற கேள்வியை மக்கள் மத்தியில் எழுப்பியது.

இதற்கிடையே டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தை திமுக புறக்கணித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே நாள் காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து கூட்டணி பற்றி ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக கூட்டணி குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

இத்தகைய பரபரப்பான சூழலில் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்துப் பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகின்றது. சந்திப்புக்குப் பின் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களிடம் பேசுகையில், 'திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆரோக்கியமாக உள்ளது. 2021 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னரும் எங்களது கூட்டணி தொடரும்' எனவும் அழுத்திக் கூறினார்.

இந்தக் கருத்து இவ்வளவு நாள்கள் நீடித்துவந்த குழப்பங்கள், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது. மேலும், இரு கட்சிகளின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் கருத்து கூறக் கூடாது என்றும் முடிவெடுக்கப்பட்டதாக அழகிரி தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: 'கூட்டணி என்றால் ஊடலும் கூடலும் இருக்கத்தான் செய்யும்' - கே.எஸ். அழகிரி

உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்ட இடஒதுக்கீடு விவகாரத்தில் திமுக - காங்கிரஸ் கட்சிகள் இடையே கருத்து வேறுபாடு நிலவிவந்தது. இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வதந்திகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.

திமுக அரசியல் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் ஆலோசனைப்படி, திமுக தனது கூட்டணியை மாற்றியமைக்கப் போகின்றது என்ற வதந்தியும் கடந்த சில தினங்களாகப் பேசப்பட்டு வந்தது. அதன்படி வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் போன்ற தகவல்களும் வெளியாகி பரபரப்பைக் கிளப்பின. அதேபோல் ரஜினியின் அரசியல் வருகையைப் பொறுத்து கூட்டணிகள் மாறும் என்றும் பல அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் 'திமுக கூட்டணி உடையும் என நான் முன்பே கூறியிருந்தேன்' என்று பேட்டியளித்தார். இதற்கு மத்தியில் திமுக பொருளாளர் துரைமுருகன், 'காங்கிரஸ் கூட்டணியை விட்டு செல்ல வேண்டும் என்றால் செல்லட்டும், காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு வங்கியே கிடையாது' எனக் கடுமையாகச் சாடியிருந்தார். இதற்கு காங்கிரஸ் எம்.பி., ஜெயகுமார் 'தலை இருக்கும் போது வால் ஆடக்கூடாது' என்று காரசாரமாகப் பதிலடி கொடுத்தார்.

அதேபோல் விருதுநகர் காங்கிரஸ் எம்.பி., மாணிக் தாகூர் 'திமுக கட்சிக்குள் ஸ்டாலின் முதலமைச்சர் ஆகக் கூடாது என சதி வேலைகள் நடக்கின்றன' என்று திடீர் புயலைக் கிளப்பினார். இவ்வாறு இரு கட்சிகளின் இரண்டாம் கட்ட தலைவர்களும் மாறிமாறி கருத்து தெரிவித்து கூட்டணி விரிசலை பெரிதாக்கிக்கொண்டே வந்தனர். இதுவே இரண்டு கட்சிகளுக்கும் கூட்டணியில் தொடர விருப்பம் இல்லையோ என்ற கேள்வியை மக்கள் மத்தியில் எழுப்பியது.

இதற்கிடையே டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தை திமுக புறக்கணித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே நாள் காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து கூட்டணி பற்றி ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக கூட்டணி குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

இத்தகைய பரபரப்பான சூழலில் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்துப் பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகின்றது. சந்திப்புக்குப் பின் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களிடம் பேசுகையில், 'திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆரோக்கியமாக உள்ளது. 2021 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னரும் எங்களது கூட்டணி தொடரும்' எனவும் அழுத்திக் கூறினார்.

இந்தக் கருத்து இவ்வளவு நாள்கள் நீடித்துவந்த குழப்பங்கள், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது. மேலும், இரு கட்சிகளின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் கருத்து கூறக் கூடாது என்றும் முடிவெடுக்கப்பட்டதாக அழகிரி தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: 'கூட்டணி என்றால் ஊடலும் கூடலும் இருக்கத்தான் செய்யும்' - கே.எஸ். அழகிரி

Intro:Body:திமுக பாஜக உடன் கூட்டணி அமைக்க போகின்றது போன்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்டாலின் - கே.எஸ்.அழகிரி சந்திப்பு.

உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்ட இடஒதுக்கீடு பிரச்சனையில் திமுக - காங்கிரஸ் கட்சிகள் இடையே கருத்து வேறுப்பாடு நிலவி வந்தது. இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வதந்திகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்.

திமுக அரசியல் ஆலோசகராக பிரசாத் கிஷோர் ஆலோசனை படி திமுக தனது கூட்டணியை மாற்றி அமைக்க போகின்றது என்ற வதந்தி கடந்த சில தினங்களாக பேசப்பட்டு வந்தது. அதன்படி வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக பாஜக கூட்டணி அமைக்கும் என்று வதந்திகள் பரப்பப்பட்டது. அதே போல் ரஜினி அரசியல் வருகை பொறுத்து கூட்டணிகள் மாறும் என்று பல அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் 'நான் முன்பே கூறியிருந்தேன் திமுக கூட்டணி உடையும்' என்று பேட்டி அளித்தார். இதற்கு மத்தியில் திமுக பொருளாளர் துரைமுருகன், 'காங்கிரஸ் கூட்டணி விட்டு செல்ல வேண்டும் என்றால் செல்லட்டும், காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு வங்கியே கிடையாது' என கடுகையாக சாடியிருந்தார். இதற்கு காங்கிரஸ் எம்.பி ஜெயகுமார் 'தலை இருக்கும் போது வால் ஆடக்கூடாது' என தெரிவித்தார். அதே போல் காங்கிரஸ் விருதுநகர் எம்.பி மாணிக் தாகூர் 'திமுக கட்சிக்கு உள் ஸ்டாலின் முதல்வர் ஆக கூடாது என சதி வேலைகள் நடக்கின்றது' என புயலை கிளப்பினார். இவ்வாறு இரு கட்சிகளின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மாறி மாறி கருத்து தெரிவித்து கூட்டணி விரிசலை பெரிது ஆக்கி வந்தனர். இதுவே இரண்டு கட்சிகளுக்கும் கூட்டணியில் தொடர விருப்பம் இல்லையோ என்ற கேள்வியை முன்வைத்தது.

இதற்கிடையில் டெல்லியில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தை திமுக புறக்கணித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே நாள் காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து கூட்டணி பற்றி ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக கூட்டணி பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது என கூறப்படுகின்றது.

இந்நிலையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசியது முக்கியத்துவம் வாய்ந்தாக பார்கப்படுகின்றது. பின்னர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக - காங்கிரஸ் கூட்டணி ஹேல்த்தியாக உள்ளது, சட்டமன்ற தேர்தல் ஏன் அதன் பின்னரும் கூட்டணி தொடரும் என தெளிவாக கூறினார். இந்த கருத்து இவ்வளவு நாட்கள் நீடித்து வந்த குழப்பங்கள், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது. Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.