ETV Bharat / state

இந்து - முஸ்லீம் சர்ச்சையை ஏற்படுத்துமா காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்? - இயக்குநர் முத்தையா கூறியது என்ன!

author img

By

Published : May 20, 2023, 7:18 AM IST

நடிகர் ஆர்யா நடிப்பில் வெளிவர உள்ள காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் பேசிய நடிகர் ஆர்யா கிராமத்து கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்தார்.

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் ட்ரெய்லர் வெளியீட்டு விழா
காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் ட்ரெய்லர் வெளியீட்டு விழா

சென்னை: கொம்பன், மருது, விருமன் என கிராமத்து கதைகளை இயக்கி புகழ் பெற்றவர் இயக்குனர் முத்தையா. இவரது படங்களில் மண் வாசம் வீசும். இவர் தற்போது ஆர்யாவை வைத்து ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்தப் படம் ஜூன் மாதம் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர் முத்தையா, நடிகர் ஆர்யா, சித்தி இத்னானி, விஜி சந்திரசேகர், ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய நடிகை சித்தி இத்னானி "எனது முதல் படமான வெந்து தணிந்தது காடு படத்திற்கு கொடுத்த ஆதரவுக்கு நன்றி. அதேபோல் இந்த படத்துக்கும் கொடுங்கள்" என்று கூறினார்.

பின்னர் பேசிய இயக்குனர் முத்தையா, "வந்துள்ள பத்திரிகையாளர்களுக்கு நன்றி. எனது ஒவ்வொரு படத்திலும் உறவுகளைப் பற்றி சொல்லி உள்ளேன். இதில் உறவுகளிடம் நன்றியுடன் இருக்க வேண்டும் என்று சொல்லி உள்ளேன். நன்றி இருந்தால் உறவுகளிடம் பிரச்சனை இருக்காது என்று சொல்லி உள்ளேன். கொம்பன் படத்துக்கு பிறகு மீண்டும் கதைக்களம் இராமநாதபுரம் தான். இந்தப் படம் யார் மனதும் புண்படுத்தும் படி இருக்காது" என்றார்.

மேலும் பேசிய அவர் "ஒருவர் மனதை புண்படுத்தும் படி என் வாழ்க்கையில் நான் அப்படி ஒரு போதும் செய்யமாட்டேன். உறவுகளிடம் நன்றி இருக்க வேண்டும் என்பதை மண்மணம் மாறாமல் சொல்லியுள்ளேன். சில நல்ல விஷயங்கள் கிராமத்திலும் இருக்கிறது. நகரத்து கதைகளும் பண்ண ஆசை இருக்கிறது. விரைவில் அதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன் என்றார். மேலும் இதனை நீங்கள் தான் சப்போர்ட் செய்ய வேண்டும். இப்படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் சிறப்பாக செய்து உள்ளனர்.

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் ட்ரெய்லர் வெளியீட்டு விழா
காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் ட்ரெய்லர் வெளியீட்டு விழா

பிரபுவின் கதாபாத்திரம் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக இருக்கும். எனக்கு தயாரிப்பாளர்கள் மிகவும் ஒத்துழைப்பு கொடுத்து உள்ளனர். படம் நன்றாக வந்துள்ளது" என்றார். இவரைத் தொடர்ந்து பேசிய நடிகர் ஆர்யா, "இயக்குனர் முத்தையாவுக்கு நன்றி. நீண்ட நாட்களாக கிராமத்து ஆக்சன் கதையில் நடிக்க வேண்டும் என்ற ஆசையாக இருந்தது. அதனால் இப்படத்தை நடிக்க சம்மதித்தேன். முத்தையா போன்ற இயக்குனர் படங்களில் நடிக்க எனக்கு மிகவும் பிடிக்கும்" என்றார்.

"மேலும் உறவுகளின் உணர்வுகளை அழகாக படமாக்குபவர் இயக்குனர் முத்தையா. இப்படத்தில் நான் நடித்தது எனக்கு மிகவும் அதிர்ஷ்டமாக பார்க்கிறேன். முத்தையா படங்களில் கதாநாயகி கதாபாத்திரம் மிகவும் ஆழமாக இருக்கும். என்னை விட நாயகிக்கு தான் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் இயக்குனர். படத்தின் டப்பிங்கின் போது என் படத்தில் ஹீரோ கத்தி பேசணும், இல்லனா கத்தில பேசணும் என்று இயக்குனர் சொன்னார்.

இரண்டு மாதங்கள் கோவில்பட்டியில் இருந்து படம் எடுத்தோம். மற்ற நடிகர்கள் எல்லாம் வந்து வந்து செல்வார்கள். ஆனால் நான் மட்டும் அங்கேயே இருந்தேன். ஜிவி‌யிடம் நான்தான் இந்த படத்தில் ஹீரோவுக்கு இவ்வளவு ஹெவியா பாட்டு போட்டு இருக்க என்று கேட்டேன்” என்று கலகலப்பாக பேசினார்.

இதையும் படிங்க: மலேசியாவில் பிரம்மாண்டமாக தொடங்கிய விஜய் சேதுபதியின் புதிய படம்!

சென்னை: கொம்பன், மருது, விருமன் என கிராமத்து கதைகளை இயக்கி புகழ் பெற்றவர் இயக்குனர் முத்தையா. இவரது படங்களில் மண் வாசம் வீசும். இவர் தற்போது ஆர்யாவை வைத்து ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்தப் படம் ஜூன் மாதம் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர் முத்தையா, நடிகர் ஆர்யா, சித்தி இத்னானி, விஜி சந்திரசேகர், ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய நடிகை சித்தி இத்னானி "எனது முதல் படமான வெந்து தணிந்தது காடு படத்திற்கு கொடுத்த ஆதரவுக்கு நன்றி. அதேபோல் இந்த படத்துக்கும் கொடுங்கள்" என்று கூறினார்.

பின்னர் பேசிய இயக்குனர் முத்தையா, "வந்துள்ள பத்திரிகையாளர்களுக்கு நன்றி. எனது ஒவ்வொரு படத்திலும் உறவுகளைப் பற்றி சொல்லி உள்ளேன். இதில் உறவுகளிடம் நன்றியுடன் இருக்க வேண்டும் என்று சொல்லி உள்ளேன். நன்றி இருந்தால் உறவுகளிடம் பிரச்சனை இருக்காது என்று சொல்லி உள்ளேன். கொம்பன் படத்துக்கு பிறகு மீண்டும் கதைக்களம் இராமநாதபுரம் தான். இந்தப் படம் யார் மனதும் புண்படுத்தும் படி இருக்காது" என்றார்.

மேலும் பேசிய அவர் "ஒருவர் மனதை புண்படுத்தும் படி என் வாழ்க்கையில் நான் அப்படி ஒரு போதும் செய்யமாட்டேன். உறவுகளிடம் நன்றி இருக்க வேண்டும் என்பதை மண்மணம் மாறாமல் சொல்லியுள்ளேன். சில நல்ல விஷயங்கள் கிராமத்திலும் இருக்கிறது. நகரத்து கதைகளும் பண்ண ஆசை இருக்கிறது. விரைவில் அதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன் என்றார். மேலும் இதனை நீங்கள் தான் சப்போர்ட் செய்ய வேண்டும். இப்படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் சிறப்பாக செய்து உள்ளனர்.

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் ட்ரெய்லர் வெளியீட்டு விழா
காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் ட்ரெய்லர் வெளியீட்டு விழா

பிரபுவின் கதாபாத்திரம் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக இருக்கும். எனக்கு தயாரிப்பாளர்கள் மிகவும் ஒத்துழைப்பு கொடுத்து உள்ளனர். படம் நன்றாக வந்துள்ளது" என்றார். இவரைத் தொடர்ந்து பேசிய நடிகர் ஆர்யா, "இயக்குனர் முத்தையாவுக்கு நன்றி. நீண்ட நாட்களாக கிராமத்து ஆக்சன் கதையில் நடிக்க வேண்டும் என்ற ஆசையாக இருந்தது. அதனால் இப்படத்தை நடிக்க சம்மதித்தேன். முத்தையா போன்ற இயக்குனர் படங்களில் நடிக்க எனக்கு மிகவும் பிடிக்கும்" என்றார்.

"மேலும் உறவுகளின் உணர்வுகளை அழகாக படமாக்குபவர் இயக்குனர் முத்தையா. இப்படத்தில் நான் நடித்தது எனக்கு மிகவும் அதிர்ஷ்டமாக பார்க்கிறேன். முத்தையா படங்களில் கதாநாயகி கதாபாத்திரம் மிகவும் ஆழமாக இருக்கும். என்னை விட நாயகிக்கு தான் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் இயக்குனர். படத்தின் டப்பிங்கின் போது என் படத்தில் ஹீரோ கத்தி பேசணும், இல்லனா கத்தில பேசணும் என்று இயக்குனர் சொன்னார்.

இரண்டு மாதங்கள் கோவில்பட்டியில் இருந்து படம் எடுத்தோம். மற்ற நடிகர்கள் எல்லாம் வந்து வந்து செல்வார்கள். ஆனால் நான் மட்டும் அங்கேயே இருந்தேன். ஜிவி‌யிடம் நான்தான் இந்த படத்தில் ஹீரோவுக்கு இவ்வளவு ஹெவியா பாட்டு போட்டு இருக்க என்று கேட்டேன்” என்று கலகலப்பாக பேசினார்.

இதையும் படிங்க: மலேசியாவில் பிரம்மாண்டமாக தொடங்கிய விஜய் சேதுபதியின் புதிய படம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.