ETV Bharat / state

'இதற்கே பயப்படுகிற ரஜினி நல்லாட்சி கொடுப்பேன் என்பது ஏமாற்று வேலை' - கவுதமன்

author img

By

Published : Feb 23, 2020, 7:44 AM IST

சென்னை: அறவழியில் போராடிய இஸ்லாமிய பெண்கள் மீது தடியடி நடத்திய பிறகும், ரஜினிகாந்த் மௌனம் காப்பதென்பது அவரின் நேர்மையற்ற போக்கைக் காட்டுகிறது என தமிழ்ப் பேரரசு கட்சித் தலைவர் கவுதமன் கூறியுள்ளார்.

director gowthaman comment on rajini politics
இதற்கே பயப்படுகிற ரஜினி, அரசியலுக்கு வந்து நல்லாட்சி கொடுப்பேன் என்பது ஏமாற்று - வ.கவுதமன்

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தமிழ்ப் பேரரசு கட்சித் தலைவர் கவுதமன், “ இஸ்லாமியர்களுக்கு ஒரு பாதிப்பு என்றால் முதல் ஆளாக குரல் கொடுப்பேன் எனக் கூறியிருந்த நடிகர் ரஜினிகாந்த், அறவழியில் போராடிய இஸ்லாமிய பெண்கள் மீது தாக்குதல் நடத்திய பிறகும் குரல் கொடுக்கவில்லை என்பது அவரின் நேர்மையற்ற போக்கைக் காட்டுகிறது.

director gowthaman comment on rajini politicsகவுதமன் பேட்டி

ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக ரஜினிகாந்தை நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், ரஜினிகாந்த் நேரில் ஆஜராகாமல் எழுத்துப்பூர்வமாக பதிலளிக்க அனுமதி கேட்டுள்ளார். இதற்கே பயப்படுகிற ரஜினிகாந்த் தமிழ்நாடு முதலமைச்சராகி எம்ஜிஆர் வழியில் ஆட்சி கொடுப்பேன் என்பது எந்த வகையில் சரியான கூற்றாக இருக்க முடியும். மக்களைப் பார்த்து பயப்படுகின்ற ரஜினிகாந்த், மக்கள் பாதிக்கப்படும் பொழுது மக்களுக்காகக் குரல் கொடுக்காமால், எப்படி நல்லாட்சி தருவார். ஸ்டெர்லைட் விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் நேரில் ஆஜராக வேண்டும்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் வண்ணாரப்பேட்டையில் நடத்திய போராட்டத்தில் பெண்கள் மீது தடியடி தாக்குதல் நடத்தியது மிகக்கொடுமையான வன்முறையாகும்.

பல வன்முறைகளைக் கடந்து 9 நாள்களாக வண்ணாரப்பேட்டையில் போராட்டம் தொடர்ந்து வருகின்ற நிலையில், தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றாதது அறமற்ற போக்காகும். கேரளா, தெலங்கானா, பாண்டிச்சேரி உள்பட அண்டை மாநிலங்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய பிறகும் தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்றாமல் பிடிவாதமாக இருப்பது சரியான போக்கு அல்ல. தமிழர்கள் நடத்திய போராட்டங்களை மதித்து குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் ” என இவ்வாறு கூறினார்.

இதையும் படிங்க : ஸ்டாலின் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு கைப்பாவை - பாஜக

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தமிழ்ப் பேரரசு கட்சித் தலைவர் கவுதமன், “ இஸ்லாமியர்களுக்கு ஒரு பாதிப்பு என்றால் முதல் ஆளாக குரல் கொடுப்பேன் எனக் கூறியிருந்த நடிகர் ரஜினிகாந்த், அறவழியில் போராடிய இஸ்லாமிய பெண்கள் மீது தாக்குதல் நடத்திய பிறகும் குரல் கொடுக்கவில்லை என்பது அவரின் நேர்மையற்ற போக்கைக் காட்டுகிறது.

director gowthaman comment on rajini politicsகவுதமன் பேட்டி

ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக ரஜினிகாந்தை நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், ரஜினிகாந்த் நேரில் ஆஜராகாமல் எழுத்துப்பூர்வமாக பதிலளிக்க அனுமதி கேட்டுள்ளார். இதற்கே பயப்படுகிற ரஜினிகாந்த் தமிழ்நாடு முதலமைச்சராகி எம்ஜிஆர் வழியில் ஆட்சி கொடுப்பேன் என்பது எந்த வகையில் சரியான கூற்றாக இருக்க முடியும். மக்களைப் பார்த்து பயப்படுகின்ற ரஜினிகாந்த், மக்கள் பாதிக்கப்படும் பொழுது மக்களுக்காகக் குரல் கொடுக்காமால், எப்படி நல்லாட்சி தருவார். ஸ்டெர்லைட் விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் நேரில் ஆஜராக வேண்டும்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் வண்ணாரப்பேட்டையில் நடத்திய போராட்டத்தில் பெண்கள் மீது தடியடி தாக்குதல் நடத்தியது மிகக்கொடுமையான வன்முறையாகும்.

பல வன்முறைகளைக் கடந்து 9 நாள்களாக வண்ணாரப்பேட்டையில் போராட்டம் தொடர்ந்து வருகின்ற நிலையில், தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றாதது அறமற்ற போக்காகும். கேரளா, தெலங்கானா, பாண்டிச்சேரி உள்பட அண்டை மாநிலங்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய பிறகும் தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்றாமல் பிடிவாதமாக இருப்பது சரியான போக்கு அல்ல. தமிழர்கள் நடத்திய போராட்டங்களை மதித்து குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் ” என இவ்வாறு கூறினார்.

இதையும் படிங்க : ஸ்டாலின் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு கைப்பாவை - பாஜக

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.