ETV Bharat / state

எம்பிபிஎஸ், பிடிஎஸ் சிறப்பு பிரிவினருக்கு ஜூலை 27ஆம் தேதி கலந்தாய்வு!

author img

By

Published : Jul 24, 2023, 11:00 PM IST

தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் சிறப்பு பிரிவினருக்கான நேரடி மாணவர் சேர்க்கைக்கான இட ஒதுக்கீட்டு கலந்தாய்வு வரும் 27ஆம் தேதி சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடைபெறும் என மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

எம்பிபிஎஸ் பிடிஎஸ் சிறப்பு பிரிவினருக்கு  ஜூலை 27 கலந்தாய்வு
எம்பிபிஎஸ் பிடிஎஸ் சிறப்பு பிரிவினருக்கு ஜூலை 27 கலந்தாய்வு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் தனியார் பல்கலைக் கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு ஜூன் 28 ஆம் தேதி முதல் ஜூலை 12 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவர்களுக்கான தரவரிசை பட்டியல் ஜூலை 16ஆம் தேதி வெளியிடப்பட்டது.

அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு 40 ஆயிரத்து 200 மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பில் 6ஆயிரத்து 326 இடங்களும், பிடிஎஸ் படிப்பில் ஆயிரத்து 868 இடங்களும் உள்ளன. இந்த இடங்களில் சேர்வதற்கு 25 ஆயிரத்து 856 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

அதே போல் 2023 - 24 ஆம் கல்வி ஆண்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீட்டில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிப்பில் சேர்வதற்கு 2ஆயிரத்து 993 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் 91 மாணவர்களும் 2ஆயிரத்து 92 மாணவிகளும் அடங்குவர்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் படிப்பில் 473 இடங்களும், பிடிஎஸ் படிப்பில் 133 இடங்களும் நிரப்பப்பட உள்ளது. அதேபோல் விளையாட்டு பிரிவிற்கு 179 வீரர்களும், முன்னாள் படை வீரர் ஒதுக்கீட்டு பிரிவிற்கு 41 மாணவர்களும், மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டு பிரிவிற்கு 98 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன.

இந்நிலையில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை மாணவர்கள் தேர்வு செய்ய தங்களின் விருப்ப பதிவு ஜூலை 25 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை பதிவு செய்யலாம் எனவும், இவர்களுக்கான முடிவுகள் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாணவர்கள் ஆகஸ்ட் 8 ஆம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும் எனவும் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரகம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் சேர்வதற்கான கலந்தாய்வு 27ஆம் தேதி கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மருத்துவமனையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 9.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மூன்று கட்டங்களாக இந்த கலந்தாய்வுக்கு மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். தரவரிசை என் ஒன்று முதல் ஆயிரத்து 398 வரை இடம் பெற்றுள்ள மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

நீட் தேர்வு மதிப்பெண் 569 முதல் 285 வரை பெற்ற மாணவர்கள் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டுள்ளனர். கலந்தாய்விற்காக அழைப்பு கடிதம் மாணவர்களுக்கு தனியாக அனுப்பப்படாது எனவும், அரசு பள்ளி மாணவர்கள் கலந்தாய்வுக்காக எந்த வித கட்டணமும் செலுத்த தேவையில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

கலந்தாய்வு துவங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக மாணவர்கள் கலந்தாய்வு நடைபெறும் இடத்திற்கு வர வேண்டும். கலந்தாய்விற்கு வரும் மாணவர்கள் நீட் 2023 தேர்வு நுழைவு சீட்டு மற்றும் மதிப்பெண் சான்றிதழ், 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 11 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாணவர்கள் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்ததற்கான மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அளிக்கப்பட்ட சான்றிதழ், மாணவரின் மாற்று சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஜாதி சான்றிதழ், தாய் அல்லது தந்தையின் ஜாதி சான்றிதழ் கொண்டு வர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட மாணவர்கள் அனைவருக்கும் இடம் ஒதுக்கப்படும் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் கிடையாது எனவும் கலந்தாய்வு அட்டவணையில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் மாணவர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் அப்பொழுது உள்ள காலி இடங்களின் அடிப்படையில் தான் இடம் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் கூறியுள்ளனர். கலந்தாய்வு நடைபெறும் இடத்தில் செல்போன் உள்ளிட்ட எந்த வித தகவல் தொடர்பு சாதனங்களும் அனுமதிக்கப்படாது எனவும் கூறியுள்ளனர்.

அதே போல் ஜூலை 27ஆம் தேதி விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு நேரடி கலந்தாய்வு சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடைபெறுவதாக கூறிப்பிடப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர் பிரிவில் தரவரிசை பட்டியல் ஒன்று முதல் 25 வரை பெற்ற மாணவர்களுக்கு காலை 8 மணிக்கு கலந்தாய்வு நடைபெறும் எனவும் அதேபோல் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு காலை 8:30 மணிக்கு தர வரிசையில் ஒன்று முதல் 25 வரை பெற்ற மாணவர்களுக்கும், காலை 9 மணி முதல் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கும் கலந்தாய்வு தொடங்கும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர்களில் தகுதி பெற்றவர்களின் பட்டியல் www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என கூரப்பட்டுள்ளது. கலந்தாய்விற்கான அழைப்பு கடிதம் மாணவர்களுக்கு தனியாக அனுப்பப்படாது எனவும் , கலந்தாய்வு கட்டணமாக 500 ரூபாய் எடுத்து வர வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கலந்தாய்விற்கு வரும் மாணவர்கள் கலந்தாய்வு கட்டணத்துடன் அவர்களுக்கான கல்வி கட்டணத்தையும் உடனடியாக எடுத்து வர வேண்டும் என அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் மோசடி - விசாரணை நடத்தக்கோரி அதிமுக முன்னாள் எம்பி நீதிமன்றத்தில் வழக்கு!

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் தனியார் பல்கலைக் கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு ஜூன் 28 ஆம் தேதி முதல் ஜூலை 12 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவர்களுக்கான தரவரிசை பட்டியல் ஜூலை 16ஆம் தேதி வெளியிடப்பட்டது.

அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு 40 ஆயிரத்து 200 மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பில் 6ஆயிரத்து 326 இடங்களும், பிடிஎஸ் படிப்பில் ஆயிரத்து 868 இடங்களும் உள்ளன. இந்த இடங்களில் சேர்வதற்கு 25 ஆயிரத்து 856 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

அதே போல் 2023 - 24 ஆம் கல்வி ஆண்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீட்டில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிப்பில் சேர்வதற்கு 2ஆயிரத்து 993 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் 91 மாணவர்களும் 2ஆயிரத்து 92 மாணவிகளும் அடங்குவர்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் படிப்பில் 473 இடங்களும், பிடிஎஸ் படிப்பில் 133 இடங்களும் நிரப்பப்பட உள்ளது. அதேபோல் விளையாட்டு பிரிவிற்கு 179 வீரர்களும், முன்னாள் படை வீரர் ஒதுக்கீட்டு பிரிவிற்கு 41 மாணவர்களும், மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டு பிரிவிற்கு 98 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன.

இந்நிலையில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை மாணவர்கள் தேர்வு செய்ய தங்களின் விருப்ப பதிவு ஜூலை 25 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை பதிவு செய்யலாம் எனவும், இவர்களுக்கான முடிவுகள் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாணவர்கள் ஆகஸ்ட் 8 ஆம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும் எனவும் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரகம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் சேர்வதற்கான கலந்தாய்வு 27ஆம் தேதி கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மருத்துவமனையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 9.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மூன்று கட்டங்களாக இந்த கலந்தாய்வுக்கு மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். தரவரிசை என் ஒன்று முதல் ஆயிரத்து 398 வரை இடம் பெற்றுள்ள மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

நீட் தேர்வு மதிப்பெண் 569 முதல் 285 வரை பெற்ற மாணவர்கள் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டுள்ளனர். கலந்தாய்விற்காக அழைப்பு கடிதம் மாணவர்களுக்கு தனியாக அனுப்பப்படாது எனவும், அரசு பள்ளி மாணவர்கள் கலந்தாய்வுக்காக எந்த வித கட்டணமும் செலுத்த தேவையில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

கலந்தாய்வு துவங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக மாணவர்கள் கலந்தாய்வு நடைபெறும் இடத்திற்கு வர வேண்டும். கலந்தாய்விற்கு வரும் மாணவர்கள் நீட் 2023 தேர்வு நுழைவு சீட்டு மற்றும் மதிப்பெண் சான்றிதழ், 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 11 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாணவர்கள் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்ததற்கான மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அளிக்கப்பட்ட சான்றிதழ், மாணவரின் மாற்று சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஜாதி சான்றிதழ், தாய் அல்லது தந்தையின் ஜாதி சான்றிதழ் கொண்டு வர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட மாணவர்கள் அனைவருக்கும் இடம் ஒதுக்கப்படும் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் கிடையாது எனவும் கலந்தாய்வு அட்டவணையில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் மாணவர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் அப்பொழுது உள்ள காலி இடங்களின் அடிப்படையில் தான் இடம் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் கூறியுள்ளனர். கலந்தாய்வு நடைபெறும் இடத்தில் செல்போன் உள்ளிட்ட எந்த வித தகவல் தொடர்பு சாதனங்களும் அனுமதிக்கப்படாது எனவும் கூறியுள்ளனர்.

அதே போல் ஜூலை 27ஆம் தேதி விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு நேரடி கலந்தாய்வு சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடைபெறுவதாக கூறிப்பிடப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர் பிரிவில் தரவரிசை பட்டியல் ஒன்று முதல் 25 வரை பெற்ற மாணவர்களுக்கு காலை 8 மணிக்கு கலந்தாய்வு நடைபெறும் எனவும் அதேபோல் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு காலை 8:30 மணிக்கு தர வரிசையில் ஒன்று முதல் 25 வரை பெற்ற மாணவர்களுக்கும், காலை 9 மணி முதல் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கும் கலந்தாய்வு தொடங்கும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர்களில் தகுதி பெற்றவர்களின் பட்டியல் www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என கூரப்பட்டுள்ளது. கலந்தாய்விற்கான அழைப்பு கடிதம் மாணவர்களுக்கு தனியாக அனுப்பப்படாது எனவும் , கலந்தாய்வு கட்டணமாக 500 ரூபாய் எடுத்து வர வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கலந்தாய்விற்கு வரும் மாணவர்கள் கலந்தாய்வு கட்டணத்துடன் அவர்களுக்கான கல்வி கட்டணத்தையும் உடனடியாக எடுத்து வர வேண்டும் என அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் மோசடி - விசாரணை நடத்தக்கோரி அதிமுக முன்னாள் எம்பி நீதிமன்றத்தில் வழக்கு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.