இன்று (ஜனவரி 14) பிறந்தநாள் கொண்டாடவிருக்கும் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு நேற்று அதிமுக தொண்டர்கள், பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஓ. பன்னீர்செல்வம், உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும், பத்திரிகையாளர்களுக்கும் தனது பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்தபின் மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றார். பின்னர் அங்கிருந்து தனது சொந்த ஊரான தேனிக்குச் சென்றார்.
இதையும் படிங்க: காங்கிரஸ் கூட்டத்தில் திமுக ஆப்சென்ட் - கூட்டணியில் அதிகரிக்கும் விரிசல்