ETV Bharat / state

சென்னையில் பட்டப்பகலில் துணிகரம் - ஆடிட்டர் வீட்டில் ரூ.7.50 லட்சம் பணம், 15 சவரன் நகை கொள்ளை

சென்னையில் பட்டப்பகலில் தனியார் ஆடிட்டர் வீட்டில் புகுந்து மனைவி, மகளை கத்தியால் வெட்டி 7.50 லட்சம் பணம், 15 சவரன் நகை கொள்ளை அடித்த சம்பவம் தொடர்பாக, கார் ஒட்டுநர் உட்பட 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

சென்னையில் பட்டப்பகலில் துணிகரம் - ஆடிட்டர் வீட்டில் ரூ.7.50 லட்சம் பணம், 15 சவரன் நகை கொள்ளை
சென்னையில் பட்டப்பகலில் துணிகரம் - ஆடிட்டர் வீட்டில் ரூ.7.50 லட்சம் பணம், 15 சவரன் நகை கொள்ளை
author img

By

Published : Jul 22, 2023, 9:06 AM IST

சென்னை: மேற்கு சைதாப்பேட்டை ரெட்டி குப்பம் தெருவில் வசிப்பவர் தாணுமல்லையா பெருமாள் (69). இவருக்கு திருமணமாகி ராமலட்சுமி(65) என்ற மனைவியும், அருணா(34) என்ற மகளும் உள்ளனர். மேலும் பெருமாள், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நிலையில் தற்பொழுது தனியார் நிறுவனத்தில் ஆடிட்டராக வேலை பார்த்து வருகின்றார்.

மேலும் இவரது வீட்டில் பெரம்பூரை சேர்ந்த உசேன்(38) என்பவர் கடந்த 8 ஆண்டுகளாக கார் ஓட்டுநராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் இன்று காலை இவரது வீட்டிற்கு வந்த கார் ஓட்டுநர் உசேன் தனது குழந்தைக்கு பிறந்த நாள் என்றும் அழைப்பிதழ் கொடுக்க வந்துள்ளதாக தெரிவித்து உள்ளார். உடனே பெருமாள் கதவை திறந்து ஓட்டுநரை உள்ளே அழைத்த உடன் உசேன் தான் வாங்கி வந்த சுவிட் பாக்ஸை கொடுத்த நேரத்தில் உள்ளே நுழைந்த அவனது கூட்டாளிகள் மகள் அருணா கழுத்தில் கத்தியை வைத்து தங்களுக்கு பணம் வேண்டும் என கத்திமுனையில் மிரட்டல் விடுத்தனர்.

இதனால் பதறிப் போன பெருமாள் 10 ஆயிரம் தருகிறேன், எனது மகளை விட்டு் விடுமாறு கெஞ்சினார். அதற்கு செவி சாய்க்காத உசேன் மற்றும் அவனது கூட்டாளிகள் தங்களுக்கு லட்சக்கணக்கில் பணம் வேண்டும், இல்லையென்றால் உங்களை கொலை செய்து விடுவோம் என மிரட்டி அவரை தாக்க முயன்றனர். உடனே பெருமாள் மனைவி ராமலட்சுமி அவர்களை தடுக்க வந்த போது அந்த கும்பல் கத்தியால் அவரது கையை வெட்டியது.

இதனால் பதறிய பெருமாள் பீரோவில் இருந்த 2.40 லட்ச ரூபாயை கொண்டு வந்து கொள்ளை கும்பலிடம் கொடுத்து உள்ளார். இருப்பினும் அந்த கும்பல் பீரோவை திறந்து அதில் இருந்த 15 சவரன் தங்க நகையை எடுத்துக்கொண்டு பெருமாள் வங்கி கணக்கில் இருந்து 5 லட்ச ரூபாயை ஜி பே மூலம் விஜய் என்பவரது வங்கி கணக்கிற்கு மாற்றம் செய்ய சொல்லி மிரட்டி பணத்தை பெற்றுக்கொண்டனர்.

பின்னர் அந்த கும்பல் அவர்களது செல்போனை எடுத்து ஒரு அறையில் போட்டு விட்டு போலீசுக்கு தகவல் தெரிவித்தால் கொலை செய்து விடுவோம் என மிரட்டி விட்டு ரூ.7.40 லட்சம்பணம், 15 சவரன் நகையுடன் தப்பி சென்றனர். இதனையடுத்து பெருமாள் குடும்பத்தினர் கூச்சலிட்டதை அடுத்து அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவர்களை மீட்டு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த குமரன் நகர் போலீசார், பெருமாளிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய கார் ஓட்டுநர் உசேன் மற்றும் அவனது கூட்டாளிகளை தனிப்படை அமைத்து தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: வேலூர் திருவள்ளுவர் பல்கலை. மதிப்பெண் பட்டியலில் மீண்டும் குளறுபடி!

சென்னை: மேற்கு சைதாப்பேட்டை ரெட்டி குப்பம் தெருவில் வசிப்பவர் தாணுமல்லையா பெருமாள் (69). இவருக்கு திருமணமாகி ராமலட்சுமி(65) என்ற மனைவியும், அருணா(34) என்ற மகளும் உள்ளனர். மேலும் பெருமாள், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நிலையில் தற்பொழுது தனியார் நிறுவனத்தில் ஆடிட்டராக வேலை பார்த்து வருகின்றார்.

மேலும் இவரது வீட்டில் பெரம்பூரை சேர்ந்த உசேன்(38) என்பவர் கடந்த 8 ஆண்டுகளாக கார் ஓட்டுநராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் இன்று காலை இவரது வீட்டிற்கு வந்த கார் ஓட்டுநர் உசேன் தனது குழந்தைக்கு பிறந்த நாள் என்றும் அழைப்பிதழ் கொடுக்க வந்துள்ளதாக தெரிவித்து உள்ளார். உடனே பெருமாள் கதவை திறந்து ஓட்டுநரை உள்ளே அழைத்த உடன் உசேன் தான் வாங்கி வந்த சுவிட் பாக்ஸை கொடுத்த நேரத்தில் உள்ளே நுழைந்த அவனது கூட்டாளிகள் மகள் அருணா கழுத்தில் கத்தியை வைத்து தங்களுக்கு பணம் வேண்டும் என கத்திமுனையில் மிரட்டல் விடுத்தனர்.

இதனால் பதறிப் போன பெருமாள் 10 ஆயிரம் தருகிறேன், எனது மகளை விட்டு் விடுமாறு கெஞ்சினார். அதற்கு செவி சாய்க்காத உசேன் மற்றும் அவனது கூட்டாளிகள் தங்களுக்கு லட்சக்கணக்கில் பணம் வேண்டும், இல்லையென்றால் உங்களை கொலை செய்து விடுவோம் என மிரட்டி அவரை தாக்க முயன்றனர். உடனே பெருமாள் மனைவி ராமலட்சுமி அவர்களை தடுக்க வந்த போது அந்த கும்பல் கத்தியால் அவரது கையை வெட்டியது.

இதனால் பதறிய பெருமாள் பீரோவில் இருந்த 2.40 லட்ச ரூபாயை கொண்டு வந்து கொள்ளை கும்பலிடம் கொடுத்து உள்ளார். இருப்பினும் அந்த கும்பல் பீரோவை திறந்து அதில் இருந்த 15 சவரன் தங்க நகையை எடுத்துக்கொண்டு பெருமாள் வங்கி கணக்கில் இருந்து 5 லட்ச ரூபாயை ஜி பே மூலம் விஜய் என்பவரது வங்கி கணக்கிற்கு மாற்றம் செய்ய சொல்லி மிரட்டி பணத்தை பெற்றுக்கொண்டனர்.

பின்னர் அந்த கும்பல் அவர்களது செல்போனை எடுத்து ஒரு அறையில் போட்டு விட்டு போலீசுக்கு தகவல் தெரிவித்தால் கொலை செய்து விடுவோம் என மிரட்டி விட்டு ரூ.7.40 லட்சம்பணம், 15 சவரன் நகையுடன் தப்பி சென்றனர். இதனையடுத்து பெருமாள் குடும்பத்தினர் கூச்சலிட்டதை அடுத்து அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவர்களை மீட்டு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த குமரன் நகர் போலீசார், பெருமாளிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய கார் ஓட்டுநர் உசேன் மற்றும் அவனது கூட்டாளிகளை தனிப்படை அமைத்து தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: வேலூர் திருவள்ளுவர் பல்கலை. மதிப்பெண் பட்டியலில் மீண்டும் குளறுபடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.