ETV Bharat / state

எமர்ஜென்சி விளக்கில் தங்கம் கடத்தல் - சென்னை விமான நிலையத்தில் சிக்கிய குருவிகள்! - Customs dept Seized 63 lakh worth gold

சென்னை: சவூதி அரேபியா, துபாய் ஆகிய நாடுகளிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 63 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறை அலுவலர்கள் விமான நிலையத்தில் பறிமுதல்செய்தனர்.

Seize
Seize
author img

By

Published : Jan 12, 2020, 10:28 AM IST

சென்னை விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருள்கள் கொண்டுவரப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து சுங்கத்துறை அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, சவுதி அரேபியாவிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த கேரள மாநிலம் குரும்பலன்கோடு பகுதியைச் சேர்ந்த அப்துல் ரகுமான் என்பவரை சுங்கத்துறை அலுவலர்கள் சோதனை செய்தனர்.

அவர் வைத்திருந்த இரண்டு எமர்ஜென்சி விளக்குகள் மீது சுங்கத்துறை அலுவலர்களுக்கு சந்தேகம் எழுந்தது. அதில், தங்க தகடுகள் மறைத்து வைத்து கொண்டு வந்ததை அலுவலர்கள் கண்டுபிடித்தனர். இதையடுத்து, ரூ. 24 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள 593 கிராம் தங்கத்தை கைப்பற்றிய அலுவலர்கள் அப்துல் ரகுமானை கைது செய்தனர்.

தங்கம் பறிமுதல்
தங்கம் பறிமுதல்

இதேபோல், துபாயிலிருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த யாசின்(30), சென்னை புதூரை சேர்ந்த முகமதி பனீஸ்(35) ஆகியோரை சுங்கத்துறை அலுவலர்கள் நிறுத்தி விசாரித்தனர். அப்போது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த அலுவலர்கள், இருவரிடமும் சோதனை செய்ததில் அவர்கள் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவர்களிடமிருந்து, ரூ. 38 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள 944 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்

கேரள இளைஞர் உள்பட மூன்று பேரிடமிருந்து ரூ. 63 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 537 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை செய்துவருகின்றனர்.

இதையும் படிங்க: ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் தர்ணா போராட்டம்

சென்னை விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருள்கள் கொண்டுவரப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து சுங்கத்துறை அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, சவுதி அரேபியாவிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த கேரள மாநிலம் குரும்பலன்கோடு பகுதியைச் சேர்ந்த அப்துல் ரகுமான் என்பவரை சுங்கத்துறை அலுவலர்கள் சோதனை செய்தனர்.

அவர் வைத்திருந்த இரண்டு எமர்ஜென்சி விளக்குகள் மீது சுங்கத்துறை அலுவலர்களுக்கு சந்தேகம் எழுந்தது. அதில், தங்க தகடுகள் மறைத்து வைத்து கொண்டு வந்ததை அலுவலர்கள் கண்டுபிடித்தனர். இதையடுத்து, ரூ. 24 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள 593 கிராம் தங்கத்தை கைப்பற்றிய அலுவலர்கள் அப்துல் ரகுமானை கைது செய்தனர்.

தங்கம் பறிமுதல்
தங்கம் பறிமுதல்

இதேபோல், துபாயிலிருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த யாசின்(30), சென்னை புதூரை சேர்ந்த முகமதி பனீஸ்(35) ஆகியோரை சுங்கத்துறை அலுவலர்கள் நிறுத்தி விசாரித்தனர். அப்போது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த அலுவலர்கள், இருவரிடமும் சோதனை செய்ததில் அவர்கள் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவர்களிடமிருந்து, ரூ. 38 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள 944 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்

கேரள இளைஞர் உள்பட மூன்று பேரிடமிருந்து ரூ. 63 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 537 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை செய்துவருகின்றனர்.

இதையும் படிங்க: ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் தர்ணா போராட்டம்

Intro:சவூதி அரேபியா, துபாயில் இருந்து வந்த கடத்தி வந்த ரூ. 63 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
Body:சவூதி அரேபியா, துபாயில் இருந்து வந்த கடத்தி வந்த ரூ. 63 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் இருந்தனர். அப்போது சவூதி அரேபியாவில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த கேரள மாநிலம் குரும்பலன்கோடு பகுதியை சேர்ந்த அப்துல் ரகுமான்(40) என்பவர் வந்தார். இவரது உடமைகளை சோதனை செய்தபோது 2 எம்ர்ஜென்சி விளக்குகள் வைத்திருந்தார். இவற்றின் மீது சந்தேகம் கொண்ட சுங்கத்துறை அதிகாரிகள் அவற்றை பரிசோதனை செய்தபோது தங்க தகடுகள் மறைத்து வைத்து கொண்டு வந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து ரூ. 24 லட்சத்தி 30 ஆயிரம் மதிப்புள்ள 593 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

அதுப்போல் துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த யாசின்(30) சென்னை புதூரை சேர்ந்த முகமதி பனீஸ்(35) ஆகியோரை சுங்கத்துறை அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தனர். அப்போது முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடமைகளை சோதனை செய்தபோது எதுவுமில்லை. பின்னர் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்த போது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். 2 பேரிடம் இருந்து ரூ. 38 லட்சத்தி 70 ஆயிரம் மதிப்புள்ள 944 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

கேரள வாலிபர் உள்பட 3 பேரிடம் இருந்து ரூ. 63 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 537 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கேரளாவை சேர்ந்த அப்துல் ரகுமான் கைது செய்யப்பட்டார். மேலும் யாருக்காக கடத்தி வந்தனர், இதன் பின்னணியில் யார் உள்ளனர் என அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.