ETV Bharat / state

பள்ளி மாணவிக்கு சக மாணவன் மஞ்சள் கயிறு கட்டிய விவகாரம் சிறார் நீதிக் குழுமத்துக்கு மாற்றம்

author img

By

Published : Dec 27, 2022, 6:49 AM IST

Updated : Dec 27, 2022, 11:38 AM IST

கடலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவிக்கு சக மாணவன் மஞ்சள் கயிற்றை கட்டிய வழக்கை சிறார் நீதிக் குழுமத்துக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

MHC
MHC

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பள்ளி மாணவிக்கு சக மாணவன் மஞ்சள் கயிற்றை கட்டிய விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணையை சிறார் நீதிக் குழுமத்துக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் பள்ளி மாணவிக்கு, சக மாணவன் மஞ்சள் கயிறு கட்டிய விவகாரம் தொடர்பான வழக்கு, நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மாணவன் கைதுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், போக்ஸோ மற்றும் சிறார் குற்றங்களை காவல்துறை கையாள்வது குறித்தும் புதிய விதிகளை வகுக்க ஆலோசனைகளை கோரியுள்ளனர்.

மாணவிக்கு மஞ்சள் கயிறு கட்டியது தொடர்பாக காவல்துறை பதிவு செய்த வழக்கின் விசாரணையை கடலூர் சிறார் நீதிக் குழுமத்துக்கு மாற்றி உத்தரவிட்ட நீதிபதிகள், போக்ஸோ மற்றும் சிறார் குற்றங்களை காவல்துறை கையாள்வது குறித்தும் அவ்வப்போது உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டியுள்ளதால், இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு அமர்வு அமைக்கவும் தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்தனர். மேலும், அந்த சிறப்பு அமர்வில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இடம் பெற வேண்டுமெனவும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பள்ளி மாணவிக்கு சக மாணவன் மஞ்சள் கயிற்றை கட்டிய விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணையை சிறார் நீதிக் குழுமத்துக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் பள்ளி மாணவிக்கு, சக மாணவன் மஞ்சள் கயிறு கட்டிய விவகாரம் தொடர்பான வழக்கு, நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மாணவன் கைதுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், போக்ஸோ மற்றும் சிறார் குற்றங்களை காவல்துறை கையாள்வது குறித்தும் புதிய விதிகளை வகுக்க ஆலோசனைகளை கோரியுள்ளனர்.

மாணவிக்கு மஞ்சள் கயிறு கட்டியது தொடர்பாக காவல்துறை பதிவு செய்த வழக்கின் விசாரணையை கடலூர் சிறார் நீதிக் குழுமத்துக்கு மாற்றி உத்தரவிட்ட நீதிபதிகள், போக்ஸோ மற்றும் சிறார் குற்றங்களை காவல்துறை கையாள்வது குறித்தும் அவ்வப்போது உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டியுள்ளதால், இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு அமர்வு அமைக்கவும் தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்தனர். மேலும், அந்த சிறப்பு அமர்வில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இடம் பெற வேண்டுமெனவும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: அரசு வேலை ஆசை - ரூ.2 லட்சம் மோசடி செய்த உதயநிதி நற்பணி மன்றத் தலைவர்

Last Updated : Dec 27, 2022, 11:38 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.