ETV Bharat / state

வேண்டுதலை நிறைவேற்றும் அய்யனாருக்கு சிமெண்ட் பொம்மைகள்! - கடலூரில் பக்தர்கள் செய்யும் அதிசயம்

சென்னை: நினைத்த வரத்தை நிறைவேற்றும் அழகுமுத்து அய்யனாருக்கு பக்தர்கள் தங்களது காணிக்கையாக சிமெண்ட் பொம்மைகளை வைப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

cement toll
author img

By

Published : Oct 29, 2019, 11:53 PM IST

கடலூர் மாவட்டம் தென்னம்பாக்கம் கிராமத்தில் முன்னூறு வருடத்திற்கு முன்பு அழகுமுத்து சித்தர் என்பவர் இந்தக் கிராமத்திற்கு வந்து சென்றதாகக் கூறப்படுகிறது. அவர், இங்குள்ள அய்யனார் ஆலயத்தில் தங்கி பொதுமக்களுக்கு உபதேசம் செய்ததால் பின்னாளில் அந்த ஆலயம் அழகுமுத்து அய்யனார் ஆலயம் என அழைக்கப்படுகிறது.

இந்த ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் பிரார்த்தனைகள் வெற்றிபெற்றால் நேர்த்திக்கடனாக சிமெண்ட் பொம்மைகளை காணிக்கையாக வைப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில், அழகுமுத்து அய்யனார் ஆலயத்தைச் சுற்றி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சிமெண்ட் பொம்மைகள் காணப்படுகின்றன. சிமெண்ட் பொம்மைகள் கொண்ட அழகுமுத்து அய்யனார் ஆலயத்திற்கு வெளிநாட்டினரும் வந்து செல்கின்றனர்.

சிமெண்ட் பொம்மைகள்

இதுகுறித்து கோயிலில் சேவை செய்துவரும் முதியவர் கோதண்டபாணி கூறுகையில், மக்களின் நம்பிக்கையின் காரணமாக உருவங்கள் வடிவமைக்கப்பட்டு 300 ஆண்டுகளாக சிமெண்ட் பொம்மைகள் வைக்கப்பட்டு வருகிறது.

இக்கிராம மக்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். இந்த ஆலயத்தில் உயிர் பலி கிடையாது என்று தெரிவித்தார்.

கடலூர் மாவட்டம் தென்னம்பாக்கம் கிராமத்தில் முன்னூறு வருடத்திற்கு முன்பு அழகுமுத்து சித்தர் என்பவர் இந்தக் கிராமத்திற்கு வந்து சென்றதாகக் கூறப்படுகிறது. அவர், இங்குள்ள அய்யனார் ஆலயத்தில் தங்கி பொதுமக்களுக்கு உபதேசம் செய்ததால் பின்னாளில் அந்த ஆலயம் அழகுமுத்து அய்யனார் ஆலயம் என அழைக்கப்படுகிறது.

இந்த ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் பிரார்த்தனைகள் வெற்றிபெற்றால் நேர்த்திக்கடனாக சிமெண்ட் பொம்மைகளை காணிக்கையாக வைப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில், அழகுமுத்து அய்யனார் ஆலயத்தைச் சுற்றி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சிமெண்ட் பொம்மைகள் காணப்படுகின்றன. சிமெண்ட் பொம்மைகள் கொண்ட அழகுமுத்து அய்யனார் ஆலயத்திற்கு வெளிநாட்டினரும் வந்து செல்கின்றனர்.

சிமெண்ட் பொம்மைகள்

இதுகுறித்து கோயிலில் சேவை செய்துவரும் முதியவர் கோதண்டபாணி கூறுகையில், மக்களின் நம்பிக்கையின் காரணமாக உருவங்கள் வடிவமைக்கப்பட்டு 300 ஆண்டுகளாக சிமெண்ட் பொம்மைகள் வைக்கப்பட்டு வருகிறது.

இக்கிராம மக்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். இந்த ஆலயத்தில் உயிர் பலி கிடையாது என்று தெரிவித்தார்.

Intro: வேண்டுதலை நிறைவேற்றும் சாமிக்கு வியக்க வைக்கும் இலட்சக்கணக்கான சிமெண்ட் பொம்மைகள்


Body:புதுச்சேரி அருகே உள்ள கடலூர் மாவட்டம் சேர்ந்த தென்னம்பாக்கம் கிராமம் இக்கிராமத்தில் முன்னூறு வருடத்துக்கு முன்பு அழகுமுத்து சித்தர் வந்துள்ளார் அவர் இங்குள்ள அய்யனார் ஆலயத்தில் இருந்துள்ளார் பொதுமக்களுடன் உபதேசம் செய்த அவர் நாளடைவில் அவ் ஆலயம் அழகுமுத்து அய்யனார் ஆலயம் என அழைக்கப்பட்டது

இவ்வாலயத்தில் பிரார்த்தனைகள் வெற்றிபெற்றால் அதற்கான பொதுமக்கள் தங்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறிய பிறகு நேர்த்திக்கடனாக சிமெண்ட் பொம்மைகளை பக்தர்கள் வைக்கின்றனர் மருத்துவர் பொறியாளர் காவல்துறை அதிகாரியாக வேண்டி அவர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றிய பிறகு அதேபோன்று தாங்கள் அணிந்த உடையுடன் கொண்ட பொம்மையை நேர்த்திக் கடனாக வழங்கி உள்ளனர் சொந்த செலவில் உருவம் கொண்ட சிலைகள் வடிவமைக்கப்பட்டு கோவில் அருகே வைக்கப்படுகிறது மண்ணால் செய்யப்பட்ட பொம்மைகளும் வைக்கப்பட்டிருந்தன நாளடைவில் காலப் போக்கில் சிமெண்ட் செம்மண் உள்ளிட்டவையில் செய்யப்பட்ட பொம்மைகள் வர்ணம் தீட்டி வைக்கப்பட்டு கோவிலில் அருகே உள்ள நிலத்தில் வைக்கப்படுகிறது இந்த கோயிலை சுற்றி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பிரார்த்தனை பொம்மைகள் வைக்கப்பட்டு வருவதால் பொம்மை கோயில் என சிறுவர்களால் பெரிதும் அழைக்கப்பட்டு வருகிறது

இவ்வாறு சேகரிக்கப்பட்டு வரும் பிராத்தனை பொம்மைகள் காவல்துறையில் பணி வேண்டும் என்றும் வேண்டுதலுக்கும் குழந்தைகள் படிப்பு திருமணம் குழந்தை பேறு வீடு கட்டி முடிக்கப்பட்டது விமான பயணம் உள்ளிட்டவை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டால் அந்த நம்பிக்கையின் பேரில் இந்த கோவிலில் பொம்மைகளாக கடந்த 300 ஆண்டுகளாக வைக்கப்பட்டு வருகிறது தற்போது ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட பொம்மைகள் கோயிலை சுற்றி சேர்த்துள்ளது தற்போது இதன் வரலாற்றுக்கான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் வரவு அதிகரித்துள்ளது

இதுகுறித்து கோயிலில் சேவை செய்துவரும் முதியவர் கோதண்டபாணி கூறுகையில்

இக்கோயில் 300 ஆண்டுகள் முன் சித்தர் அழகுமுத்து வந்ததால் அவர் பொதுமக்கள் நன்கு பழகி வந்தனர் இதனால் ஆலயம் வேண்டுதல் பொது மக்களுக்கு கோரிக்கைகள் நிவர்த்தி செய்யப்படுகிறது அது நம்பிக்கையின் காரணமாக உருவங்கள் வடிவமைக்கப்பட்டு 300 ஆண்டுகளாக வைக்கப்பட்டு வருகின்றன தற்போது ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பொம்மை உருவங்கள் கோவிலை சுற்றி பிரார்த்தனை வெற்றி பெற்றதை அடுத்து வைக்கப்பட்டு வருகின்றன இதனால் இவ்வூரில் மக்கள் ஒற்றுமையாக உள்ளனர் தற்கொலை என்ற நிகழ்வு இங்கு நடைபெறுவது இல்லை என்றும் இவ்வாலயத்தில் உயிர் பலி கிடையாது என்றும் அவர் தெரிவித்தார்



Conclusion:வேண்டுதலை நிறைவேற்றும் சாமிக்கு வியக்க வைக்கும் இலட்சக்கணக்கான சிமெண்ட் பொம்மைகள்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.