ETV Bharat / state

சிட்லபாக்கம் அரசு சேவை இல்லத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆய்வு...!

author img

By

Published : Aug 22, 2022, 7:43 AM IST

சென்னை சிட்லபாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு சேவை இல்லத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆய்வு மேற்கொண்டார்.

சிட்லபாக்கம் அரசு சேவை இல்லத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு  திடீர் ஆய்வு...!
சிட்லபாக்கம் அரசு சேவை இல்லத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு திடீர் ஆய்வு...!

சென்னை: தாம்பரம் அடுத்த சிட்லபாக்கத்தில் ஐந்து தளங்கள் கொண்ட புதிய கட்டடம், தமிழ்நாடு சமூக நலவாழ்வு துறையின் கீழ் வேலை செய்யும் பெண்களுக்கான அரசு விடுதி சுமார் 22 கோடி திட்ட மதிப்பில் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இதனை நேற்று(ஆக.21) தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு செய்தார்.

அப்போது பணிகளை துரிதப்படுத்தவும் அறிவுறுத்தினார். மேலும் யாரும் எதிர்பார்க்காத வகையில் சமூக நலத் துறை சார்பில் அரசு சேவை இல்லத்தில் தங்கி இருந்த 200-க்கும் மேற்பட்ட மாணவிகளுடன் கலந்துரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். மேலும், மாணவிகளுக்கு எங்கிருந்து உணவு வருகிறது என அலுவலர்களிடம் கேட்டறிந்த தலைமைச் செயலாளர் இறையன்பு, உடனே உணவு தயாரிக்கும் இடத்திற்குச் சென்று சமையல் செய்பவர்களிடம் சமையல் குறித்து கேட்டறிந்து அதன் தரத்தையும் உறுதி செய்தார்.

அத்துடன் மாணவிகள் தங்கி உள்ள அறைகளில் ஆய்வு செய்த தலைமை செயலாளர் இறையன்பு, அறைகளில் சேதம் அடைந்த ஜன்னல்கள் கதவுகளைப் பார்வையிட்டு விடுமுறை நாட்களில் விடுதி அறைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக நலத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: மருத்துவர் இல்ல திருமண விழாவில் மு.க. ஸ்டாலின்

சென்னை: தாம்பரம் அடுத்த சிட்லபாக்கத்தில் ஐந்து தளங்கள் கொண்ட புதிய கட்டடம், தமிழ்நாடு சமூக நலவாழ்வு துறையின் கீழ் வேலை செய்யும் பெண்களுக்கான அரசு விடுதி சுமார் 22 கோடி திட்ட மதிப்பில் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இதனை நேற்று(ஆக.21) தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு செய்தார்.

அப்போது பணிகளை துரிதப்படுத்தவும் அறிவுறுத்தினார். மேலும் யாரும் எதிர்பார்க்காத வகையில் சமூக நலத் துறை சார்பில் அரசு சேவை இல்லத்தில் தங்கி இருந்த 200-க்கும் மேற்பட்ட மாணவிகளுடன் கலந்துரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். மேலும், மாணவிகளுக்கு எங்கிருந்து உணவு வருகிறது என அலுவலர்களிடம் கேட்டறிந்த தலைமைச் செயலாளர் இறையன்பு, உடனே உணவு தயாரிக்கும் இடத்திற்குச் சென்று சமையல் செய்பவர்களிடம் சமையல் குறித்து கேட்டறிந்து அதன் தரத்தையும் உறுதி செய்தார்.

அத்துடன் மாணவிகள் தங்கி உள்ள அறைகளில் ஆய்வு செய்த தலைமை செயலாளர் இறையன்பு, அறைகளில் சேதம் அடைந்த ஜன்னல்கள் கதவுகளைப் பார்வையிட்டு விடுமுறை நாட்களில் விடுதி அறைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக நலத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: மருத்துவர் இல்ல திருமண விழாவில் மு.க. ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.