ETV Bharat / state

சென்னையில் 110 பேருக்கு கரோனா பாதிப்பு!

author img

By

Published : Apr 6, 2020, 11:30 PM IST

சென்னை: 110 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது என மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

corona
corona

மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள கரோனா வைரஸ் கண்காணிப்பு குறித்த தகவலில், தமிழ்நாட்டில் 2 லட்சத்து 10 ஆயிரத்து 538 பயணிகளுக்கு விமான நிலையங்களில் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 90 ஆயிரத்து 824 பயணிகள் நேற்று வரை வீட்டில் 28 நாட்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறையின் தொடர் கண்காணிப்பில் இருக்க வைக்கப்பட்டனர்.

அவ்வாறு 28 நாட்கள் தொடர் கண்காணிப்பினை இன்று 19,824 பேர் முடித்துள்ளனர். இது தவிர 91 ஆயிரத்து 851 பயணிகள் 28 நாட்கள் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். மேலும் தொற்று அதிக அளவில் பரவியுள்ள நாடுகளிலிருந்து வந்த 205 பயணிகள் விமான நிலையங்களின் அருகில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் தனிமைப் படுத்தப்பட்டு அரசு கண்காணிப்பில் உள்ளனர்.

மருத்துவமனையில் தனி வார்டில் 1,766 பயணிகள் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார்கள். இதில், 5015 பேரின் ரத்தப்பரிசோதனை மாதிரிகள் பெறப்பட்டுள்ளன. இவர்களில் 621 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 4,099 பேருக்கு நோய்தொற்று இல்லை என்பது உறுதியாகிள்ளது. 295 நபர்களின் இரத்தம், சளி பரிசோதனை ஆய்வகங்களில் செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று ஒரே நாளில் 50 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 8 நோயாளிகள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜாமஅத் மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் 1,427 பேர் கண்டறியப்பட்டனர். அவர்கள் மற்றும் அவர்களோடு தொடர்புடையவர்கள் என 1,475 பேருக்கு ரத்தப்பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. டெல்லி கருத்தரங்கில் கலந்துகொண்டவர்களில் நேற்று வரை 526 பேருக்கும், இன்று 48 பேருக்கும் என மொத்தம் 574 பேருக்கு நோய்த் தொற்று உறுதியாகியுள்ளது.

தற்போது, தீவிர செயற்கை சுவாசம் அளிப்பதற்கான 3,371 வெண்டிலேட்டர்களும், 22,049 படுக்கைகளுடன் கூடிய தனி வார்டுகளும் தயார் நிலையில் உள்ளன. மேலும் இன்று நடத்தப்பட்ட பரிசோதனையில் ஏற்கனவே சென்னையில் நோய்த் தொற்று உள்ள ஒருவருடன் தொடர்புடைய 9 பேருக்கும், டெல்லி கருத்தரங்கில் கலந்து கொண்ட சென்னையைச் சேர்ந்த மூன்று பேருக்கும், டெல்லி கருத்தரங்கில் கலந்துகொண்ட திருச்சியைச் சேர்ந்த 13 பேர் உள்பட 50 பேருக்கும் நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது.

கரோனா தொற்று உறுதியாகியுள்ள 33 மாவட்டங்களின் நிலவரம்

வரிசை எண்மாவட்டம்கரோனா பாதிப்பு
1சென்னை 110
2திருநெல்வேலி38
3திண்டுக்கல் 45
4ஈரோடு 32
5திருச்சிராப்பள்ளி30
6கோயம்புத்தூர்59
7ராணிப்பேட்டை25
8செங்கல்பட்டு24
9தேனி 23
10கரூர் 23
11மதுரை19
12விழுப்புரம்16
13கடலூர் 13
14திருவாரூர்12
15சேலம் 12
16திருவள்ளூர்12
17விருதுநகர் 11
18தூத்துக்குடி11
19நாகப்பட்டினம் 11
20திருப்பத்தூர் 11
21திருவண்ணாமலை9
22தஞ்சாவூர் 8
23நாமக்கல்28
24கன்னியாகுமரி 6
25காஞ்சிபுரம்6
26சிவகங்கை5
27வேலூர்5
28நீலகிரி4
29ராமநாதபுரம்2
30கள்ளக்குறிச்சி2
31அரியலூர்1
32பெரம்பலூர் 1
33திருப்பூர்7

மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள கரோனா வைரஸ் கண்காணிப்பு குறித்த தகவலில், தமிழ்நாட்டில் 2 லட்சத்து 10 ஆயிரத்து 538 பயணிகளுக்கு விமான நிலையங்களில் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 90 ஆயிரத்து 824 பயணிகள் நேற்று வரை வீட்டில் 28 நாட்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறையின் தொடர் கண்காணிப்பில் இருக்க வைக்கப்பட்டனர்.

அவ்வாறு 28 நாட்கள் தொடர் கண்காணிப்பினை இன்று 19,824 பேர் முடித்துள்ளனர். இது தவிர 91 ஆயிரத்து 851 பயணிகள் 28 நாட்கள் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். மேலும் தொற்று அதிக அளவில் பரவியுள்ள நாடுகளிலிருந்து வந்த 205 பயணிகள் விமான நிலையங்களின் அருகில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் தனிமைப் படுத்தப்பட்டு அரசு கண்காணிப்பில் உள்ளனர்.

மருத்துவமனையில் தனி வார்டில் 1,766 பயணிகள் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார்கள். இதில், 5015 பேரின் ரத்தப்பரிசோதனை மாதிரிகள் பெறப்பட்டுள்ளன. இவர்களில் 621 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 4,099 பேருக்கு நோய்தொற்று இல்லை என்பது உறுதியாகிள்ளது. 295 நபர்களின் இரத்தம், சளி பரிசோதனை ஆய்வகங்களில் செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று ஒரே நாளில் 50 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 8 நோயாளிகள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜாமஅத் மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் 1,427 பேர் கண்டறியப்பட்டனர். அவர்கள் மற்றும் அவர்களோடு தொடர்புடையவர்கள் என 1,475 பேருக்கு ரத்தப்பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. டெல்லி கருத்தரங்கில் கலந்துகொண்டவர்களில் நேற்று வரை 526 பேருக்கும், இன்று 48 பேருக்கும் என மொத்தம் 574 பேருக்கு நோய்த் தொற்று உறுதியாகியுள்ளது.

தற்போது, தீவிர செயற்கை சுவாசம் அளிப்பதற்கான 3,371 வெண்டிலேட்டர்களும், 22,049 படுக்கைகளுடன் கூடிய தனி வார்டுகளும் தயார் நிலையில் உள்ளன. மேலும் இன்று நடத்தப்பட்ட பரிசோதனையில் ஏற்கனவே சென்னையில் நோய்த் தொற்று உள்ள ஒருவருடன் தொடர்புடைய 9 பேருக்கும், டெல்லி கருத்தரங்கில் கலந்து கொண்ட சென்னையைச் சேர்ந்த மூன்று பேருக்கும், டெல்லி கருத்தரங்கில் கலந்துகொண்ட திருச்சியைச் சேர்ந்த 13 பேர் உள்பட 50 பேருக்கும் நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது.

கரோனா தொற்று உறுதியாகியுள்ள 33 மாவட்டங்களின் நிலவரம்

வரிசை எண்மாவட்டம்கரோனா பாதிப்பு
1சென்னை 110
2திருநெல்வேலி38
3திண்டுக்கல் 45
4ஈரோடு 32
5திருச்சிராப்பள்ளி30
6கோயம்புத்தூர்59
7ராணிப்பேட்டை25
8செங்கல்பட்டு24
9தேனி 23
10கரூர் 23
11மதுரை19
12விழுப்புரம்16
13கடலூர் 13
14திருவாரூர்12
15சேலம் 12
16திருவள்ளூர்12
17விருதுநகர் 11
18தூத்துக்குடி11
19நாகப்பட்டினம் 11
20திருப்பத்தூர் 11
21திருவண்ணாமலை9
22தஞ்சாவூர் 8
23நாமக்கல்28
24கன்னியாகுமரி 6
25காஞ்சிபுரம்6
26சிவகங்கை5
27வேலூர்5
28நீலகிரி4
29ராமநாதபுரம்2
30கள்ளக்குறிச்சி2
31அரியலூர்1
32பெரம்பலூர் 1
33திருப்பூர்7
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.