ETV Bharat / state

ஒரே நாளில் ஆயிரத்தை தொட்ட கரோனா பாதிப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் ஒரேநாளில் 1149 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

author img

By

Published : May 31, 2020, 8:21 PM IST

cm palanisamy
cm palanisamy

இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் உள்ள 72 ஆய்வகங்களில் 12 ஆயிரத்து 807 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், முதல் முறையாக ஆயிரத்து 149 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்த 1054 நபர்களுக்கும், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 95 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில், இதுவரை கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 333 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 9 ஆயிரத்து 400 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்களில் இன்று 757 பேர் உள்பட 12,757 பேர் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தும் முகாம்களில் 6 ஆயிரத்து 710 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் சிகிச்சை பலனின்றி 13 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.

இதன் மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 173ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று 804 பேருக்கும், செங்கல்பட்டில் 85 பேருக்கும், திருவள்ளூரில் 45 பேருக்கும், திருவண்ணாமலையில் 45 பேருக்கும் என 22 மாவட்டங்களில் நோய் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு விவரம்

வரிசை எண்மாவட்டங்கள் பாதிப்பு எண்ணிக்கை
1சென்னை14,802
2செங்கல்பட்டு1,177
3திருவள்ளூர்948
4கடலூர்461
5திருவண்ணாமலை419
6காஞ்சிபுரம் 407
7அரியலூர்365
8திருநெல்வேலி352
9விழுப்புரம்346
10மதுரை269
11கள்ளக்குறிச்சி246
12தூத்துக்குடி226
13சேலம்176
14கோயம்புத்தூர்146
15பெரம்பலூர் 141
16திண்டுக்கல்139
17விருதுநகர்123
18திருப்பூர்114
19தேனி109
20ராணிப்பேட்டை98
21தஞ்சாவூர்89
22திருச்சி88
23தென்காசி 86
24ராமநாதபுரம்84
25கரூர்81
26நாமக்கல்78
27ஈரோடு71
28கன்னியாகுமரி67
29நாகப்பட்டினம்60
30திருவாரூர் 47
31வேலூர்43
32சிவகங்கை33
33திருப்பத்தூர்32
34கிருஷ்ணகிரி28
35புதுக்கோட்டை26
36நீலகிரி 14
37தருமபுரி8


மேலும், விமானங்கள் மூலம் வருகை தந்த இரண்டாயிரத்து 731 பயணிகளில் இரண்டாயிரத்து 703 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. மே 29, 30 ஆகிய தேதிகளில் விமானங்கள் மூலம் வந்த 311 நபர்களின் பரிசோதனை ஆய்வகத்தில் நடைபெற்று வருகின்றன. இரண்டாயிரத்து 351 பேருக்கு நோய் தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது. ரயில்களின் மூலம் வந்த 10 ஆயிரத்து 232 பயணிகளில் 9 ஆயிரத்து 607 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

கடந்த 26ஆம் தேதி முதல் வருகை தந்த பயணிகள் ஆயிரத்து 815 பேர் பரிசோதனை ஆய்வகத்தில் உள்ளனர். ரயிலில் வந்த 221 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி ஆகிய விமான நிலையங்களில் 158 உள்நாட்டு விமானங்கள் மூலம் தமிழ்நாடு வந்த 9 ஆயிரத்து 927 நபர்களில் 20 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. விமானம், ரயில், சொந்த வாகனம், பேருந்து என தமிழ்நாட்டிற்கு வந்த 99 ஆயிரத்து 651 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் ஆயிரத்து 570 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் உள்ள 72 ஆய்வகங்களில் 12 ஆயிரத்து 807 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், முதல் முறையாக ஆயிரத்து 149 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்த 1054 நபர்களுக்கும், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 95 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில், இதுவரை கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 333 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 9 ஆயிரத்து 400 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்களில் இன்று 757 பேர் உள்பட 12,757 பேர் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தும் முகாம்களில் 6 ஆயிரத்து 710 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் சிகிச்சை பலனின்றி 13 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.

இதன் மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 173ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று 804 பேருக்கும், செங்கல்பட்டில் 85 பேருக்கும், திருவள்ளூரில் 45 பேருக்கும், திருவண்ணாமலையில் 45 பேருக்கும் என 22 மாவட்டங்களில் நோய் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு விவரம்

வரிசை எண்மாவட்டங்கள் பாதிப்பு எண்ணிக்கை
1சென்னை14,802
2செங்கல்பட்டு1,177
3திருவள்ளூர்948
4கடலூர்461
5திருவண்ணாமலை419
6காஞ்சிபுரம் 407
7அரியலூர்365
8திருநெல்வேலி352
9விழுப்புரம்346
10மதுரை269
11கள்ளக்குறிச்சி246
12தூத்துக்குடி226
13சேலம்176
14கோயம்புத்தூர்146
15பெரம்பலூர் 141
16திண்டுக்கல்139
17விருதுநகர்123
18திருப்பூர்114
19தேனி109
20ராணிப்பேட்டை98
21தஞ்சாவூர்89
22திருச்சி88
23தென்காசி 86
24ராமநாதபுரம்84
25கரூர்81
26நாமக்கல்78
27ஈரோடு71
28கன்னியாகுமரி67
29நாகப்பட்டினம்60
30திருவாரூர் 47
31வேலூர்43
32சிவகங்கை33
33திருப்பத்தூர்32
34கிருஷ்ணகிரி28
35புதுக்கோட்டை26
36நீலகிரி 14
37தருமபுரி8


மேலும், விமானங்கள் மூலம் வருகை தந்த இரண்டாயிரத்து 731 பயணிகளில் இரண்டாயிரத்து 703 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. மே 29, 30 ஆகிய தேதிகளில் விமானங்கள் மூலம் வந்த 311 நபர்களின் பரிசோதனை ஆய்வகத்தில் நடைபெற்று வருகின்றன. இரண்டாயிரத்து 351 பேருக்கு நோய் தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது. ரயில்களின் மூலம் வந்த 10 ஆயிரத்து 232 பயணிகளில் 9 ஆயிரத்து 607 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

கடந்த 26ஆம் தேதி முதல் வருகை தந்த பயணிகள் ஆயிரத்து 815 பேர் பரிசோதனை ஆய்வகத்தில் உள்ளனர். ரயிலில் வந்த 221 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி ஆகிய விமான நிலையங்களில் 158 உள்நாட்டு விமானங்கள் மூலம் தமிழ்நாடு வந்த 9 ஆயிரத்து 927 நபர்களில் 20 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. விமானம், ரயில், சொந்த வாகனம், பேருந்து என தமிழ்நாட்டிற்கு வந்த 99 ஆயிரத்து 651 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் ஆயிரத்து 570 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.