ETV Bharat / state

கரோனாவின் புதிய உச்சம்: 40 ஆயிரத்தை கடந்துச் செல்லும் பாதிப்பு

author img

By

Published : Jun 12, 2020, 8:24 PM IST

சென்னை: கரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டில் இதுவரை 40 ஆயிரத்து 698 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

tamilnadu
tamilnadu

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு உச்சம் தொட்டு வருகிறது. ஜூன் 1ஆம் தேதி முதல் பாதிப்பு எண்ணிக்கை நாள்தோறும் சராசரியாக ஆயிரத்தை எட்டி வருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் கரோனா பாதிப்பு மிக மோசமான நிலையை அடைந்துள்ளது. இந்தச் சூழலில் சுகாதாரத்துறைச் செயலாளராக பணியாற்றிய பீலா ராஜேஷ் மாற்றப்பட்டு, பேரிடர் காலங்களிலும் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையிலும் அனுபவம் வாய்ந்த ராதாகிருஷ்ணன் மீண்டும் சுகாதாரத் துறைச் செயலாளராக பொறுப்பேற்றுள்ளார்.

இன்று (ஜூன் 12) ஒரே நாளில் பரிசோதனை செய்யப்பட்ட 16 ஆயிரத்து 889 மாதிரிகளில், ஆயிரத்து 982 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கரோனா பாதிப்பாளர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்து 698ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று 18 பேர் உயிரிழந்த நிலையில், இறந்தவர்களின் எண்ணிக்கை 367ஆக அதிகரித்துள்ளது. தற்போது மருத்துவமனைகளில் 18 ஆயிரத்து 281 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அதபோன்று, இன்று ஒரே நாளில் 342 பேர் குணமடைந்து வீட்டிற்கு திரும்பியுள்ளதையடுத்து, குணமடைந்தோரின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 47ஆக உயர்ந்துள்ளது.

வழக்கம்போல் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து காணப்பட்டாலும், சென்னையில் இன்று ஆயிரத்து 477 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் மாவட்டம் வாரியாக பாதிப்பு

வரிசை எண் மாவட்டம் பாதிப்பு
1 சென்னை 28,924
2செங்கல்பட்டு2,569
3திருவள்ளூர் 1,752
4காஞ்சிபுரம் 650
5திருவண்ணாமலை 586
6கடலூர்521
7திருநெல்வேலி 425
8விழுப்புரம் 408
9தூத்துக்குடி 397
10மதுரை394
11அரியலூர்391
12கள்ளக்குறிச்சி319
13சேலம்217
14திண்டுக்கல்198
15ராணிப்பேட்டை189
16கோயம்புத்தூர்173
17விருதுநகர்161
18திருச்சிராப்பள்ளி148
19பெரம்பலூர்143
20தஞ்சாவூர்140
21தேனி138
22ராமநாதபுரம்135
23வேலூர்129
24திருப்பூர்115
25தென்காசி115
26கன்னியாகுமரி109
27நாகப்பட்டினம்106
28திருவாரூர்105
29நாமக்கல்92
30கரூர்88
31ஈரோடு72
32சிவகங்கை62
33புதுக்கோட்டை51
34திருப்பத்தூர்43
35கிருஷ்ணகிரி38
36தருமபுரி24
37நீலகிரி14

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு உச்சம் தொட்டு வருகிறது. ஜூன் 1ஆம் தேதி முதல் பாதிப்பு எண்ணிக்கை நாள்தோறும் சராசரியாக ஆயிரத்தை எட்டி வருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் கரோனா பாதிப்பு மிக மோசமான நிலையை அடைந்துள்ளது. இந்தச் சூழலில் சுகாதாரத்துறைச் செயலாளராக பணியாற்றிய பீலா ராஜேஷ் மாற்றப்பட்டு, பேரிடர் காலங்களிலும் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையிலும் அனுபவம் வாய்ந்த ராதாகிருஷ்ணன் மீண்டும் சுகாதாரத் துறைச் செயலாளராக பொறுப்பேற்றுள்ளார்.

இன்று (ஜூன் 12) ஒரே நாளில் பரிசோதனை செய்யப்பட்ட 16 ஆயிரத்து 889 மாதிரிகளில், ஆயிரத்து 982 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கரோனா பாதிப்பாளர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்து 698ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று 18 பேர் உயிரிழந்த நிலையில், இறந்தவர்களின் எண்ணிக்கை 367ஆக அதிகரித்துள்ளது. தற்போது மருத்துவமனைகளில் 18 ஆயிரத்து 281 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அதபோன்று, இன்று ஒரே நாளில் 342 பேர் குணமடைந்து வீட்டிற்கு திரும்பியுள்ளதையடுத்து, குணமடைந்தோரின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 47ஆக உயர்ந்துள்ளது.

வழக்கம்போல் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து காணப்பட்டாலும், சென்னையில் இன்று ஆயிரத்து 477 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் மாவட்டம் வாரியாக பாதிப்பு

வரிசை எண் மாவட்டம் பாதிப்பு
1 சென்னை 28,924
2செங்கல்பட்டு2,569
3திருவள்ளூர் 1,752
4காஞ்சிபுரம் 650
5திருவண்ணாமலை 586
6கடலூர்521
7திருநெல்வேலி 425
8விழுப்புரம் 408
9தூத்துக்குடி 397
10மதுரை394
11அரியலூர்391
12கள்ளக்குறிச்சி319
13சேலம்217
14திண்டுக்கல்198
15ராணிப்பேட்டை189
16கோயம்புத்தூர்173
17விருதுநகர்161
18திருச்சிராப்பள்ளி148
19பெரம்பலூர்143
20தஞ்சாவூர்140
21தேனி138
22ராமநாதபுரம்135
23வேலூர்129
24திருப்பூர்115
25தென்காசி115
26கன்னியாகுமரி109
27நாகப்பட்டினம்106
28திருவாரூர்105
29நாமக்கல்92
30கரூர்88
31ஈரோடு72
32சிவகங்கை62
33புதுக்கோட்டை51
34திருப்பத்தூர்43
35கிருஷ்ணகிரி38
36தருமபுரி24
37நீலகிரி14
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.