ETV Bharat / state

தமிழ்நாட்டில் இன்று 1,573 பேருக்கு கரோனா உறுதி

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 1,573 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

author img

By

Published : Aug 25, 2021, 8:13 PM IST

கரோனா உறுதி
கரோனா உறுதி

சென்னை: சுகாதாரத்துறை இன்று (ஆக.25) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 386 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாட்டில் இருந்த ஆயிரத்து 572 நபர்களுக்கும், கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த ஒருவருக்கும் என 1,573 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 4 கோடியே 4 லட்சத்து 78 ஆயிரத்து 188 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த 26 லட்சத்து 5 ஆயிரத்து 647 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 18 ஆயிரத்து 352 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 797 பேர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 25 லட்சத்து 52 ஆயிரத்து 507 என உயர்ந்துள்ளது.

தனியார் மருத்துவமனையில் 6 நோயாளிகளும் அரசு மருத்துமனையில் 21 நோயாளிகளும் என 27 பேர் இறந்துள்ளனர். இறந்தவர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்து 788 என உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவல் விகிதம் 1.04 விழுக்காடு என அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் 2.1 விழுக்காடு, மிகக் குறைந்த அளவாக மதுரை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் 0.2 விழுக்காடு என்ற அளவில் நோய்த்தொற்று பரவல் உள்ளது.

சென்னை மாவட்டத்தில் 23 ஆயிரத்து 172 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது . அவர்களில் 165 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நோய் பரவல் 0.7 விழுக்காடு என உள்ளது.

அதேபோல் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 11 ஆயிரத்து 788 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டதில் 190 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நோய் பரவல் 1.6 விழுக்காடு என உள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டம் வாரியாக மொத்த பாதிப்பு விவரம்:

சென்னை - 5,43,065

கோயம்புத்தூர் - 2,34,820

செங்கல்பட்டு - 1,64,740

திருவள்ளூர் - 1,15,403

சேலம் - 95,763

திருப்பூர் - 89,880

ஈரோடு - 97,707

மதுரை - 73,917

காஞ்சிபுரம் - 72,623

திருச்சிராப்பள்ளி - 74,019

தஞ்சாவூர் - 70,412

கன்னியாகுமரி - 60,829

கடலூர் - 62,062

தூத்துக்குடி - 55,422

திருநெல்வேலி - 48,366

திருவண்ணாமலை - 53,158

வேலூர் - 48,752

விருதுநகர் - 45,717

தேனி - 43,168

விழுப்புரம் - 44,648

நாமக்கல் - 48,517

ராணிப்பேட்டை - 42,467

கிருஷ்ணகிரி - 41,972

திருவாரூர் - 38,843

திண்டுக்கல் - 32,452

புதுக்கோட்டை - 28,951

திருப்பத்தூர் - 28,526

தென்காசி - 27,018

நீலகிரி - 31,582

கள்ளக்குறிச்சி - 29,953

தருமபுரி - 26,714

கரூர் - 23,047

மயிலாடுதுறை - 21,704

ராமநாதபுரம் - 20,168

நாகப்பட்டினம் - 19,521

சிவகங்கை - 19,292

அரியலூர் - 16,258

பெரம்பலூர் - 11,661

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1,020

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,082

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

இதையும் படிங்க: மருத்துவப் படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 27% ஒதுக்கீடு அனுமதிக்கத்தக்கது - உயர் நீதிமன்றம்

சென்னை: சுகாதாரத்துறை இன்று (ஆக.25) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 386 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாட்டில் இருந்த ஆயிரத்து 572 நபர்களுக்கும், கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த ஒருவருக்கும் என 1,573 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 4 கோடியே 4 லட்சத்து 78 ஆயிரத்து 188 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த 26 லட்சத்து 5 ஆயிரத்து 647 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 18 ஆயிரத்து 352 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 797 பேர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 25 லட்சத்து 52 ஆயிரத்து 507 என உயர்ந்துள்ளது.

தனியார் மருத்துவமனையில் 6 நோயாளிகளும் அரசு மருத்துமனையில் 21 நோயாளிகளும் என 27 பேர் இறந்துள்ளனர். இறந்தவர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்து 788 என உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவல் விகிதம் 1.04 விழுக்காடு என அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் 2.1 விழுக்காடு, மிகக் குறைந்த அளவாக மதுரை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் 0.2 விழுக்காடு என்ற அளவில் நோய்த்தொற்று பரவல் உள்ளது.

சென்னை மாவட்டத்தில் 23 ஆயிரத்து 172 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது . அவர்களில் 165 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நோய் பரவல் 0.7 விழுக்காடு என உள்ளது.

அதேபோல் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 11 ஆயிரத்து 788 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டதில் 190 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நோய் பரவல் 1.6 விழுக்காடு என உள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டம் வாரியாக மொத்த பாதிப்பு விவரம்:

சென்னை - 5,43,065

கோயம்புத்தூர் - 2,34,820

செங்கல்பட்டு - 1,64,740

திருவள்ளூர் - 1,15,403

சேலம் - 95,763

திருப்பூர் - 89,880

ஈரோடு - 97,707

மதுரை - 73,917

காஞ்சிபுரம் - 72,623

திருச்சிராப்பள்ளி - 74,019

தஞ்சாவூர் - 70,412

கன்னியாகுமரி - 60,829

கடலூர் - 62,062

தூத்துக்குடி - 55,422

திருநெல்வேலி - 48,366

திருவண்ணாமலை - 53,158

வேலூர் - 48,752

விருதுநகர் - 45,717

தேனி - 43,168

விழுப்புரம் - 44,648

நாமக்கல் - 48,517

ராணிப்பேட்டை - 42,467

கிருஷ்ணகிரி - 41,972

திருவாரூர் - 38,843

திண்டுக்கல் - 32,452

புதுக்கோட்டை - 28,951

திருப்பத்தூர் - 28,526

தென்காசி - 27,018

நீலகிரி - 31,582

கள்ளக்குறிச்சி - 29,953

தருமபுரி - 26,714

கரூர் - 23,047

மயிலாடுதுறை - 21,704

ராமநாதபுரம் - 20,168

நாகப்பட்டினம் - 19,521

சிவகங்கை - 19,292

அரியலூர் - 16,258

பெரம்பலூர் - 11,661

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1,020

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,082

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

இதையும் படிங்க: மருத்துவப் படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 27% ஒதுக்கீடு அனுமதிக்கத்தக்கது - உயர் நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.