ETV Bharat / state

கல்கி ஆசிரம சோதனை நிறைவு: ரூ.800 கோடி, 4000 ஏக்கர் நிலம்...! - வாயைப் பிளக்கும் பக்தர்கள்

சென்னை: கல்கி ஆசிரமத்தில் நடைபெற்ற வருமானவரித் துறையினரின் சோதனை நிறைவுபெற்றுள்ள நிலையில், 800 கோடி ரூபாய்க்கு அதிகமான வருமானம் கணக்கில் காட்டப்படாதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பினாமி சொத்துகள், ஹவாலா பரிமாற்றம், கணக்கில் காட்டப்படாத நான்காயிரம் ஏக்கர் நிலம், வெளிநாட்டு முதலீடுகளும் சிக்கியுள்ளதாக வருமானவரித் துறை தெரிவித்துள்ளது.

author img

By

Published : Oct 21, 2019, 6:26 PM IST

பணம்

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே வரதய்யபாளையத்தில் அமைந்துள்ள கல்கி ஆசிரமத்தின் நிறுவனர் விஜயகுமார். இவர், தன்னை கல்கியின் அவதாரம் என பிரகடனப்படுத்திக்கொண்டு, இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் ஆசிரமங்கள், ஆன்மிகப் பயிற்சி வகுப்புகள் நடத்திவருகிறார்.

கல்கி விஜயகுமார், அவரது மகன் கிருஷ்ணாவினால் 'வெல்னஸ் குரூப்' என்ற பெயரில் ரியல் எஸ்டேட் எனப்படும் மனை வணிகம், கட்டுமான நிறுவனங்கள் நிர்வகிக்கப்படுகின்றன. இந்நிலையில், வரி ஏய்ப்பு புகாரில் வரதய்யபாளையம், ஹைதராபாத், பெங்களூரு, சென்னை என கல்கி ஆசிரமம் தொடர்புடைய 40 இடங்களில் வருமானவரித் துறை அலவலர்கள் ஆறு நாள்களாக சோதனை நடத்தினர்.

வெளிநாட்டு கரன்சிகள்
வெளிநாட்டு கரன்சிகள்

நேற்று இரவுடன் முடிவடைந்த இந்தச் சோதனையில், கணக்கில் காட்டப்படாத ரொக்கம் 44 கோடி ரூபாய், 20 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள், 90 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கணக்கில் காட்டப்படாத நான்காயிரம் ஏக்கர் நிலம், துபாய், ஆப்பிரிக்கா, பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள் உள்ளிட்ட வெளிநாடுகளில் செய்யப்பட்டுள்ள 100 கோடி ரூபாய் முதலீடுகள், ஹவாலா பரிமாற்றங்கள், பினாமி சொத்துகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் வருமானவரித் துறை தெரிவித்துள்ளது.

பணம் இருந்து பெட்டிகள்
பணம் இருந்து பெட்டிகள்

மேலும், 800 கோடி ரூபாய்க்கு அதிகமான வருமானம் கணக்கில் காட்டப்படாதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்கி ஆசிரமம் தொடர்புடைய முக்கிய நபர்களான கிருஷ்ணாவும், பிரீத்தாவும் சோதனைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும், எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லவில்லை என்பதோடு, ஆவணங்களில் கையெழுத்திட மறுத்துவிட்டதாகவும் வருமானவரித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தச் சோதனையால் பகவானை நம்பியுள்ள பக்தர்கள் மிகுந்த குழப்பத்தில் உள்ளனர்.

கல்கி ஆசிரமத்தில் கைப்பற்றப்பட்ட பணம்

இதையும் படிங்க:கல்கி ஆசிரமத்தில் 2ஆவது நாளாக தொடரும் சோதனை!

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே வரதய்யபாளையத்தில் அமைந்துள்ள கல்கி ஆசிரமத்தின் நிறுவனர் விஜயகுமார். இவர், தன்னை கல்கியின் அவதாரம் என பிரகடனப்படுத்திக்கொண்டு, இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் ஆசிரமங்கள், ஆன்மிகப் பயிற்சி வகுப்புகள் நடத்திவருகிறார்.

கல்கி விஜயகுமார், அவரது மகன் கிருஷ்ணாவினால் 'வெல்னஸ் குரூப்' என்ற பெயரில் ரியல் எஸ்டேட் எனப்படும் மனை வணிகம், கட்டுமான நிறுவனங்கள் நிர்வகிக்கப்படுகின்றன. இந்நிலையில், வரி ஏய்ப்பு புகாரில் வரதய்யபாளையம், ஹைதராபாத், பெங்களூரு, சென்னை என கல்கி ஆசிரமம் தொடர்புடைய 40 இடங்களில் வருமானவரித் துறை அலவலர்கள் ஆறு நாள்களாக சோதனை நடத்தினர்.

வெளிநாட்டு கரன்சிகள்
வெளிநாட்டு கரன்சிகள்

நேற்று இரவுடன் முடிவடைந்த இந்தச் சோதனையில், கணக்கில் காட்டப்படாத ரொக்கம் 44 கோடி ரூபாய், 20 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள், 90 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கணக்கில் காட்டப்படாத நான்காயிரம் ஏக்கர் நிலம், துபாய், ஆப்பிரிக்கா, பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள் உள்ளிட்ட வெளிநாடுகளில் செய்யப்பட்டுள்ள 100 கோடி ரூபாய் முதலீடுகள், ஹவாலா பரிமாற்றங்கள், பினாமி சொத்துகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் வருமானவரித் துறை தெரிவித்துள்ளது.

பணம் இருந்து பெட்டிகள்
பணம் இருந்து பெட்டிகள்

மேலும், 800 கோடி ரூபாய்க்கு அதிகமான வருமானம் கணக்கில் காட்டப்படாதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்கி ஆசிரமம் தொடர்புடைய முக்கிய நபர்களான கிருஷ்ணாவும், பிரீத்தாவும் சோதனைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும், எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லவில்லை என்பதோடு, ஆவணங்களில் கையெழுத்திட மறுத்துவிட்டதாகவும் வருமானவரித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தச் சோதனையால் பகவானை நம்பியுள்ள பக்தர்கள் மிகுந்த குழப்பத்தில் உள்ளனர்.

கல்கி ஆசிரமத்தில் கைப்பற்றப்பட்ட பணம்

இதையும் படிங்க:கல்கி ஆசிரமத்தில் 2ஆவது நாளாக தொடரும் சோதனை!

Intro:Body:கல்கி பகவான் ஆசிரமம் மற்றும் நிறுவனத்தில் நடைப்பெற்ற வருமான வரி சோதனையானது நேற்று இரவு முடிவடைந்துள்ளது.

இந்த சோதனையில் விஜயகுமாரின் மகன் கிருஷ்ணா மற்றும் பிரித்தா ஆகிய முக்கிய நபர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை எனவும் கணக்கில் காட்டப்படாத 800 கோடிக்கும் அதிகமான பினாமி சொத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

மேலும் 44கோடி பணம்,90கிலோ தங்கம்,20கோடி மதிப்புள்ள வெளிநாட்டு ரூபாய்கள்,4000ஏக்கர் நிலம் கைப்பற்றப்பட்டுள்ளது.

பின்னர் பல கோடி ரூபாய் முறைக்கேடான பணபரிவர்த்தனை செய்துள்ளதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது.மேலும் துபாய்,ஆப்பிரிக்கா,பிரிட்டிஷ் போன்ற இடங்களில் 100கோடிரூபாய் வரை முதலீடு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளதுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.