ETV Bharat / state

ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவதற்கு பயிற்சி

author img

By

Published : Jul 6, 2022, 10:45 PM IST

இடைநிலை ஆசிரியர்களுக்கான தாள் ஒன்று தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்தவர்களுக்கு, கம்ப்யூட்டர் மூலம் தேர்வு எழுதுவதற்கான பயிற்சி மேற்கொள்வதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

கம்ப்யூட்டர் மூலம் ஆசிரியர் தேர்வு எழுதுவதற்கு பயிற்சி
கம்ப்யூட்டர் மூலம் ஆசிரியர் தேர்வு எழுதுவதற்கு பயிற்சி

சென்னை: ஆசிரியர் தகுதி தேர்வு தாள் ஒன்று மற்றும் இரண்டு ஆகியவற்றை எழுதுவதற்கு மார்ச் மாதம் 7ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து மார்ச் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் 13ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மேலும் தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று 18 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு எழுத பயிற்சி: இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு 2002 ஆம் ஆண்டிற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. முதலில் மார்ச் மாதம் 14ஆம் தேதி முதல் விண்ணப்பங்களை பதிவேற்றலாம் என தெரிவிக்கப்பட்டது. மேலும் விண்ணப்பதாரர்களின் கோரிக்கையை ஏற்று ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி வரை விண்ணப்பங்களை பதிவு செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டது.

மேலும் இவர்களுக்கான கம்ப்யூட்டர் வழி தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி தற்பொழுது ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை இடைநிலை ஆசிரியருக்கான தாள் ஒன்றுக்கு மட்டும் முதற்கட்டமாக தேர்வுகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்களுக்கான தேர்வுகள் கம்ப்யூட்டர் மூலம் மட்டுமே நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

கம்ப்யூட்டர் மூலம் தேர்வு எழுத பயிற்சி தேர்வு மேற்கொள்ள விரும்பும் தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பயிற்சியினை மேற்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. தேர்விற்கு 15 நாள்களுக்கு முன்னர் விண்ணப்பித்தவர்கள் பயிற்சி மேற்கொள்ள வாய்ப்பு வழங்கப்படும். அவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்ளலாம்.

பயிற்சி மேற்கொள்வது குறித்த அறிவிப்பு மற்றும் தேர்வு கால அட்டவணை மற்றும் அனுமதி சீட்டு வழங்கும் விவரம் ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படும் என அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்கள் நியமனம் - போட்டி தேர்வு அட்டவனை வெளியீடு

சென்னை: ஆசிரியர் தகுதி தேர்வு தாள் ஒன்று மற்றும் இரண்டு ஆகியவற்றை எழுதுவதற்கு மார்ச் மாதம் 7ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து மார்ச் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் 13ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மேலும் தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று 18 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு எழுத பயிற்சி: இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு 2002 ஆம் ஆண்டிற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. முதலில் மார்ச் மாதம் 14ஆம் தேதி முதல் விண்ணப்பங்களை பதிவேற்றலாம் என தெரிவிக்கப்பட்டது. மேலும் விண்ணப்பதாரர்களின் கோரிக்கையை ஏற்று ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி வரை விண்ணப்பங்களை பதிவு செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டது.

மேலும் இவர்களுக்கான கம்ப்யூட்டர் வழி தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி தற்பொழுது ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை இடைநிலை ஆசிரியருக்கான தாள் ஒன்றுக்கு மட்டும் முதற்கட்டமாக தேர்வுகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்களுக்கான தேர்வுகள் கம்ப்யூட்டர் மூலம் மட்டுமே நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

கம்ப்யூட்டர் மூலம் தேர்வு எழுத பயிற்சி தேர்வு மேற்கொள்ள விரும்பும் தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பயிற்சியினை மேற்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. தேர்விற்கு 15 நாள்களுக்கு முன்னர் விண்ணப்பித்தவர்கள் பயிற்சி மேற்கொள்ள வாய்ப்பு வழங்கப்படும். அவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்ளலாம்.

பயிற்சி மேற்கொள்வது குறித்த அறிவிப்பு மற்றும் தேர்வு கால அட்டவணை மற்றும் அனுமதி சீட்டு வழங்கும் விவரம் ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படும் என அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்கள் நியமனம் - போட்டி தேர்வு அட்டவனை வெளியீடு

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.