ETV Bharat / state

க. அன்பழகன் மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்

author img

By

Published : Mar 7, 2020, 11:30 AM IST

சென்னை: திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

க.அன்பழகன் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்
க.அன்பழகன் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சரும், முதுபெரும் அரசியல்வாதியும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான பேராசிரியர் க. அன்பழகன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி இன்று அதிகாலை காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

பேராசிரியர் க. அன்பழகன் தனது இளம் வயதிலேயே அரசியலில் அதிக ஆர்வம் கொண்டவர். கருணாநிதியின் அரசியல் பயணத்தின் நெடுகிலும் உற்ற தோழராகவும், திராவிட இயக்கக் கொள்கைகளிலிருந்து விலகாத உறுதிமிக்க மூத்த அரசியல்வாதியாகவும் விளங்கியவர்.

இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஆரம்ப காலம் முதலே முக்கியப் பங்கு வகித்தவர் என்ற பெருமைக்குரியவர். க. அன்பழகன் 1957ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினராக முதன்முறையாகப் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டப்பேரவையில் அடியெடுத்து வைத்தவர்.

43 ஆண்டுகளாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராகவும், அரைநூற்றாண்டு காலத்திற்கும் மேலாக தமிழ்நாட்டு அரசியலில் தடம்பதித்துவந்தவர். ஒன்பது முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற பெருமைக்குரியவர்.

அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டப்பேரவை உறுப்பினர் ஆகிய பதவிகளில் திறம்பட பணியாற்றியவர். அரசியல்வாதி, ஆசிரியர், மேடை பேச்சாளர், எழுத்தாளர், தொழிற்சங்கவாதி, சமூக சீர்திருத்தவாதி போன்ற பல பரிமாணங்களை கொண்டு தனது பன்முகத் தன்மையை வெளிப்படுத்தியவர்.

பேராசிரியர் க. அன்பழகன் மறைவு தமிழ்நாட்டிற்கு பேரிழப்பாகும். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், திராவிட முன்னேற்றக் கழக கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா சாந்தியடையவும் நான் பிரார்த்திக்கிறேன்,.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ‘இனமான இமயம் உடைந்துவிட்டது!’ - பேராசிரியருக்கு ஸ்டாலின் கண்ணீர் கவிதை

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சரும், முதுபெரும் அரசியல்வாதியும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான பேராசிரியர் க. அன்பழகன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி இன்று அதிகாலை காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

பேராசிரியர் க. அன்பழகன் தனது இளம் வயதிலேயே அரசியலில் அதிக ஆர்வம் கொண்டவர். கருணாநிதியின் அரசியல் பயணத்தின் நெடுகிலும் உற்ற தோழராகவும், திராவிட இயக்கக் கொள்கைகளிலிருந்து விலகாத உறுதிமிக்க மூத்த அரசியல்வாதியாகவும் விளங்கியவர்.

இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஆரம்ப காலம் முதலே முக்கியப் பங்கு வகித்தவர் என்ற பெருமைக்குரியவர். க. அன்பழகன் 1957ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினராக முதன்முறையாகப் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டப்பேரவையில் அடியெடுத்து வைத்தவர்.

43 ஆண்டுகளாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராகவும், அரைநூற்றாண்டு காலத்திற்கும் மேலாக தமிழ்நாட்டு அரசியலில் தடம்பதித்துவந்தவர். ஒன்பது முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற பெருமைக்குரியவர்.

அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டப்பேரவை உறுப்பினர் ஆகிய பதவிகளில் திறம்பட பணியாற்றியவர். அரசியல்வாதி, ஆசிரியர், மேடை பேச்சாளர், எழுத்தாளர், தொழிற்சங்கவாதி, சமூக சீர்திருத்தவாதி போன்ற பல பரிமாணங்களை கொண்டு தனது பன்முகத் தன்மையை வெளிப்படுத்தியவர்.

பேராசிரியர் க. அன்பழகன் மறைவு தமிழ்நாட்டிற்கு பேரிழப்பாகும். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், திராவிட முன்னேற்றக் கழக கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா சாந்தியடையவும் நான் பிரார்த்திக்கிறேன்,.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ‘இனமான இமயம் உடைந்துவிட்டது!’ - பேராசிரியருக்கு ஸ்டாலின் கண்ணீர் கவிதை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.