ETV Bharat / state

சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு நாளை வகுப்புகள் தொடக்கம்

author img

By

Published : Sep 29, 2021, 7:41 PM IST

சட்டக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் நாளைமுதல் தொடங்கப்படும் எனத் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு நாளை வகுப்புகள் தொடக்கம்
சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு நாளை வகுப்புகள் தொடக்கம்

சென்னை: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் இயங்கிவரும் சீர்மிகு சட்டப்பள்ளியில் 2021-2022ஆம் கல்வியாண்டில் ஐந்தாண்டு சட்டப்படிப்புகளான பி.ஏ. எல்.எல்.பி. (BA LLB), பி.காம். எல்.எல்.பி. (B.com LLB), பி.பி.ஏ. எல்.எல்.பி. (BBA LLB), பி.சி.ஏ. எல்.எல்.பி. (BCA LLB) முதலாமாண்டு மாணவர்களுக்கு அறிமுக விழா பெருங்குடியில் உள்ள பல்கலைக்கழக வளாகக் கலையரங்கில் இன்று (செப். 29) நடைபெற்றது.

இவ்விழாவில் சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கிருபாகரன் கலந்துகொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "ஒழுக்கம், கற்றல், கடமையிலிருந்து தவறாமல் இருத்தல், பெரியோர் - ஆசிரியர்களுக்கு பணிதல், வாழ்க்கையில் தர்மத்தை குறிக்கோளாக வைத்திருத்தல் வேண்டும்.

சட்டப்படிப்பின் முக்கியத்துவத்தையும், சட்டம் சார்ந்த வழிகாட்டு நெறிமுறைகளையும் எதிர்காலச் சவால்களையும் மாணவர்களுக்கு எடுத்துரைத்து, இத்துறையைத் தேர்வுசெய்துள்ள தாங்கள் சிறந்து விளங்க வாழ்த்துகள்" என்று தெரிவித்தார்.

இவ்விழாவில் பல்கலைக்கழகப் பதிவாளர் ரஞ்சித் ஓமன் ஆப்ரகாம், பேராசிரியர் வே. பாலாஜி, நிர்வாகப் பணியாளர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு அரசின் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நாளைமுதல் (செப். 30) வகுப்புகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: 'சிங்காரச் சென்னை 2.0' - இந்தாண்டுக்கு மட்டும் ரூ.500 கோடி ஒதுக்கீடு

சென்னை: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் இயங்கிவரும் சீர்மிகு சட்டப்பள்ளியில் 2021-2022ஆம் கல்வியாண்டில் ஐந்தாண்டு சட்டப்படிப்புகளான பி.ஏ. எல்.எல்.பி. (BA LLB), பி.காம். எல்.எல்.பி. (B.com LLB), பி.பி.ஏ. எல்.எல்.பி. (BBA LLB), பி.சி.ஏ. எல்.எல்.பி. (BCA LLB) முதலாமாண்டு மாணவர்களுக்கு அறிமுக விழா பெருங்குடியில் உள்ள பல்கலைக்கழக வளாகக் கலையரங்கில் இன்று (செப். 29) நடைபெற்றது.

இவ்விழாவில் சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கிருபாகரன் கலந்துகொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "ஒழுக்கம், கற்றல், கடமையிலிருந்து தவறாமல் இருத்தல், பெரியோர் - ஆசிரியர்களுக்கு பணிதல், வாழ்க்கையில் தர்மத்தை குறிக்கோளாக வைத்திருத்தல் வேண்டும்.

சட்டப்படிப்பின் முக்கியத்துவத்தையும், சட்டம் சார்ந்த வழிகாட்டு நெறிமுறைகளையும் எதிர்காலச் சவால்களையும் மாணவர்களுக்கு எடுத்துரைத்து, இத்துறையைத் தேர்வுசெய்துள்ள தாங்கள் சிறந்து விளங்க வாழ்த்துகள்" என்று தெரிவித்தார்.

இவ்விழாவில் பல்கலைக்கழகப் பதிவாளர் ரஞ்சித் ஓமன் ஆப்ரகாம், பேராசிரியர் வே. பாலாஜி, நிர்வாகப் பணியாளர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு அரசின் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நாளைமுதல் (செப். 30) வகுப்புகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: 'சிங்காரச் சென்னை 2.0' - இந்தாண்டுக்கு மட்டும் ரூ.500 கோடி ஒதுக்கீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.