ETV Bharat / state

கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் பராமரிப்பு: கண்காணிக்கும் பொறுப்பை குழந்தை பாதுகாப்புக் குழுக்கள் வசம் ஒப்படைக்க வலியுறுத்தல்

author img

By

Published : May 30, 2021, 5:17 PM IST

சென்னை: கரோனா தொற்றால் பெற்றோரை இழந்து, ஆதரவின்றித் தவிக்கும் குழந்தைகளுக்கான திட்டத்தினை செயல்படுத்தும் மாவட்டப் பணிகள் குழுவில், மாவட்ட குழந்தைகள் நலக் குழும உறுப்பினர், சைல்டு லைன் உதவும் அமைப்பினரையும் இணைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பேராசிரியர் ஆண்ரூ சேசுராஜ்
பேராசிரியர் ஆண்ரூ சேசுராஜ்

தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகத்தின் மாநில அமைப்பாளர், பேராசிரியர் ஆண்ரூ சேசுராஜ் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், 'கரோனா பெருந்தொற்றுக்கு பெற்றோரை இழந்த குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள அறிவிப்புகளை தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் வரவேற்கிறது.

உறுதியாகும் குழந்தைகளின் பாதுகாப்பு

பெற்றோரை இழந்த குழந்தைகளைக் குடும்பச் சூழலிலேயே பராமரிக்க அவர்களுக்கு 18 வயது முடியும் வரை மாதம் ரூ.3000 உதவித்தொகை அறிவித்து இருப்பது நல்லதொரு அறிவிப்பு. இதனால் குழந்தைகள் அவசியமில்லாமல் விடுதிகளில் சேர்க்கப்படுவது தவிர்க்கப்படும். குடும்ப பண்பாட்டுச் சூழலில் தொடர்ந்து குழந்தைகள் வளர வழிவகுக்கும்.

இந்த திட்டத்தினைச் செயல்படுத்த மாவட்டப் பணிக்குழுக்களை உருவாக்கும் அறிவிப்பையும் வரவேற்கிறோம். அந்தக் குழுவில் மாவட்டக் குழந்தை நலக் குழும உறுப்பினர், சைல்டுலைன், குழந்தைகளுக்குப் பணியாற்றி வரும் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும்.

கண்காணிக்கும் பொறுப்பு

இந்தத் திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்படும் குழந்தைகளையும், குடும்பங்களையும் தொடர் கண்காணிப்பு செய்யும் பொறுப்பினை ஏற்கெனவே உள்ள கிராம மற்றும் வார்டு அளவிலான குழந்தைப் பாதுகாப்பு குழுக்கள் வசம் ஒப்படைக்க வேண்டும்.

ஒவ்வொரு குழந்தைக்கும் ஒருங்கிணைந்த முழுமையான மேம்பாட்டிற்கு வழிகாட்டும் வகையில், அந்தப் பகுதியில் உள்ள பணி செய்யும் தொண்டு நிறுவனத்துடன் வழிகாட்டும் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்.

குழந்தைகள் வாழத் தகுதியான ஒரு சூழலை உருவாக்க அரசின் ஒவ்வொரு முயற்சிக்கும் ஆதரவளித்து, தோள் கொடுப்போம்’எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆப்ஜெக்டிவ் டைப் கேள்விகள்- பள்ளிக்கல்வித்துறைக்கு கடிதம்

தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகத்தின் மாநில அமைப்பாளர், பேராசிரியர் ஆண்ரூ சேசுராஜ் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், 'கரோனா பெருந்தொற்றுக்கு பெற்றோரை இழந்த குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள அறிவிப்புகளை தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் வரவேற்கிறது.

உறுதியாகும் குழந்தைகளின் பாதுகாப்பு

பெற்றோரை இழந்த குழந்தைகளைக் குடும்பச் சூழலிலேயே பராமரிக்க அவர்களுக்கு 18 வயது முடியும் வரை மாதம் ரூ.3000 உதவித்தொகை அறிவித்து இருப்பது நல்லதொரு அறிவிப்பு. இதனால் குழந்தைகள் அவசியமில்லாமல் விடுதிகளில் சேர்க்கப்படுவது தவிர்க்கப்படும். குடும்ப பண்பாட்டுச் சூழலில் தொடர்ந்து குழந்தைகள் வளர வழிவகுக்கும்.

இந்த திட்டத்தினைச் செயல்படுத்த மாவட்டப் பணிக்குழுக்களை உருவாக்கும் அறிவிப்பையும் வரவேற்கிறோம். அந்தக் குழுவில் மாவட்டக் குழந்தை நலக் குழும உறுப்பினர், சைல்டுலைன், குழந்தைகளுக்குப் பணியாற்றி வரும் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும்.

கண்காணிக்கும் பொறுப்பு

இந்தத் திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்படும் குழந்தைகளையும், குடும்பங்களையும் தொடர் கண்காணிப்பு செய்யும் பொறுப்பினை ஏற்கெனவே உள்ள கிராம மற்றும் வார்டு அளவிலான குழந்தைப் பாதுகாப்பு குழுக்கள் வசம் ஒப்படைக்க வேண்டும்.

ஒவ்வொரு குழந்தைக்கும் ஒருங்கிணைந்த முழுமையான மேம்பாட்டிற்கு வழிகாட்டும் வகையில், அந்தப் பகுதியில் உள்ள பணி செய்யும் தொண்டு நிறுவனத்துடன் வழிகாட்டும் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்.

குழந்தைகள் வாழத் தகுதியான ஒரு சூழலை உருவாக்க அரசின் ஒவ்வொரு முயற்சிக்கும் ஆதரவளித்து, தோள் கொடுப்போம்’எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆப்ஜெக்டிவ் டைப் கேள்விகள்- பள்ளிக்கல்வித்துறைக்கு கடிதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.