ETV Bharat / state

நீதிமன்ற அவமதிப்பில் சிக்க வேண்டாம்... அதிகாரிகளுக்கு இறையன்பு அறிவுரை

author img

By

Published : Jul 7, 2022, 12:35 PM IST

Updated : Jul 7, 2022, 12:49 PM IST

நீதிமன்ற உத்தரவுகளை குறித்த காலத்துக்குள் அமல்படுத்த வேண்டும் என அனைத்து துறை அதிகாரிகளுக்கும், மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தி, தலைமைச் செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவுகளை குறித்த காலத்துக்குள் அமல்படுத்த வேண்டும் என அனைத்து துறை அதிகாரிகளுக்கும் தலைமைச் செயலாளர் கடிதம்
நீதிமன்ற உத்தரவுகளை குறித்த காலத்துக்குள் அமல்படுத்த வேண்டும் என அனைத்து துறை அதிகாரிகளுக்கும் தலைமைச் செயலாளர் கடிதம்

சென்னை: நீதிமன்ற உத்தரவுகளை குறித்த காலத்தில் அமல்படுத்த வேண்டும் எனவும், அதன் மூலம் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தவிர்க்கலாம் எனவும் வழக்கு ஒன்றில் தலைமை நீதிபதி அமர்வு தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்தியிருந்தது. மேலும், நீதிமன்ற உத்தரவுகளை குறித்த காலத்தில் அமல்படுத்த முடியாவிட்டால் மேல் முறையீடு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தவிர்க்க, நீதிமன்ற உத்தரவுகளை குறித்த காலத்தில் அமல்படுத்த வேண்டும் எனவும், இல்லாவிட்டால் மேல் முறையீடு செய்ய வேண்டும் எனவும் அனைத்து துறை அதிகாரிகளுக்கும், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் அனுப்பியுள்ளதாக தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், தலைமை நீதிபதி அமர்வில் இன்று (ஜூலை 7) தெரிவித்தார்.

மேலும், அந்த கடித நகலையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதை தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி மாலா அமர்வு ஏற்றுக் கொண்டது.

இதையும் படிங்க: மாட்டுக்கறி புகைப்படத்திற்கு காவல்துறை போட்ட ட்வீட்; சர்ச்சையை தொடர்ந்து விளக்கம் - முழு விவரம்

சென்னை: நீதிமன்ற உத்தரவுகளை குறித்த காலத்தில் அமல்படுத்த வேண்டும் எனவும், அதன் மூலம் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தவிர்க்கலாம் எனவும் வழக்கு ஒன்றில் தலைமை நீதிபதி அமர்வு தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்தியிருந்தது. மேலும், நீதிமன்ற உத்தரவுகளை குறித்த காலத்தில் அமல்படுத்த முடியாவிட்டால் மேல் முறையீடு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தவிர்க்க, நீதிமன்ற உத்தரவுகளை குறித்த காலத்தில் அமல்படுத்த வேண்டும் எனவும், இல்லாவிட்டால் மேல் முறையீடு செய்ய வேண்டும் எனவும் அனைத்து துறை அதிகாரிகளுக்கும், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் அனுப்பியுள்ளதாக தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், தலைமை நீதிபதி அமர்வில் இன்று (ஜூலை 7) தெரிவித்தார்.

மேலும், அந்த கடித நகலையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதை தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி மாலா அமர்வு ஏற்றுக் கொண்டது.

இதையும் படிங்க: மாட்டுக்கறி புகைப்படத்திற்கு காவல்துறை போட்ட ட்வீட்; சர்ச்சையை தொடர்ந்து விளக்கம் - முழு விவரம்

Last Updated : Jul 7, 2022, 12:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.