ETV Bharat / state

'வரும் 17ஆம் தேதி வடகிழக்குப் பருவமழைத் தொடங்க வாய்ப்பு' - வானிலை ஆய்வு மையம்!

author img

By

Published : Oct 13, 2019, 7:05 PM IST

சென்னை : வட கிழக்குப் பருவமழை வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

chennai meteorological center press meet

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், 'நாட்டில் தென்மேற்குப் பருவமழை வடக்கு, மத்தியப் பகுதிகளில் இருந்து படிப்படியாக விலகி விட்டது. இதைத் தொடர்ந்து வரும் அக்டோபர் 17ஆம் தேதி வடகிழக்குப் பருவ மழைத் தொடங்க வாய்ப்புள்ளது எனவும், கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுவையில் வெப்பச்சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது எனவும் தெரிவித்தார்.

மேலும் அவர், 'அதிகபட்சமாக கோபிச்செட்டிபாளையத்தில் 13 செ.மீ மழை பெய்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுவையில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனவும், வட தமிழகத்தில் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையைப் பொறுத்தவரை நகரின் சிலப்பகுதியில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது' எனவும் தெரிவித்தார்.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செய்தியாளர் சந்திப்பு!

இதையும் படிங்க:

9 மாவட்டங்களில் கனமழை - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், 'நாட்டில் தென்மேற்குப் பருவமழை வடக்கு, மத்தியப் பகுதிகளில் இருந்து படிப்படியாக விலகி விட்டது. இதைத் தொடர்ந்து வரும் அக்டோபர் 17ஆம் தேதி வடகிழக்குப் பருவ மழைத் தொடங்க வாய்ப்புள்ளது எனவும், கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுவையில் வெப்பச்சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது எனவும் தெரிவித்தார்.

மேலும் அவர், 'அதிகபட்சமாக கோபிச்செட்டிபாளையத்தில் 13 செ.மீ மழை பெய்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுவையில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனவும், வட தமிழகத்தில் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையைப் பொறுத்தவரை நகரின் சிலப்பகுதியில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது' எனவும் தெரிவித்தார்.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செய்தியாளர் சந்திப்பு!

இதையும் படிங்க:

9 மாவட்டங்களில் கனமழை - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Intro:Body:சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்தர் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், தென் மேற்கு பருவமழை வடக்கு மற்றும் மத்திய இந்தியா பகுதிகளிலுருந்து படி படியாக விலகி வரும் நிலையில் வட கிழக்கு பருவ மழை வருகின்ற அக்டோபர் 17 ஆம் தேதி துவங்க வாய்ப்புள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் வெப்பச்சலனம் காரணமாக ஓர், சில இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கோப்பிசிட்டிபாளையத்தில் 13 செமீ மழை பெய்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஓர், சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகத்தில் உள் மாவட்டங்களில் ஓர் இரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை பொறுத்தவரை நகரின் சில பகுதியில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவித்தார். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.