ETV Bharat / state

மருத்துவ முகாம்களில் 16,007 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி - சென்னை மாநகராட்சி

author img

By

Published : Aug 4, 2020, 4:45 AM IST

சென்னை: சென்னை முழுவதும் மே மாதம் முதல் நடைபெற்ற மருத்துவ முகாம்களில் 16 ஆயிரத்து 7 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Chennai Medical Camp
Chennai Medical Camp

கரோனா வைரசால் சென்னையில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு அடைகின்றனர். இருப்பினும் குணமடைந்தவரின் சதவீதமும் அதற்கு சரி சமமாக உள்ளது. இந்த நோய்த்தொற்றை குறைப்பதற்காக மாநகராட்சியும் சுகாதாரத் துறையும் பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்குவது, கபசுர குடிநீர் வழங்குவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக தினமும் 15 மண்டலங்களிலும் மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது .மே எட்டாம் தேதி முதல் இன்று வரை மாநகராட்சி சார்பில் மொத்தம் 27 ஆயிரத்து 139 மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளது.

அதில் 15 லட்சத்து 65 ஆயிரத்து 664 நபர்கள் பரிசோதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் பரிசோதிக்கப்பட்ட நபர்களில் 16 ஆயிரத்து 7 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் , இன்று 507 மருத்துவ முகாம்கள் நடைபெற்றது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக தேனாம்பேட்டையில் 60 , அண்ணா நகரில் 56, திருவிக நகரில் 49 மருத்துவ முகாம் நடைபெற்றது.

இன்று நடைபெற்ற 507 மருத்துவ முகாம்களில் மொத்தம் 26 ஆயிரத்து 279 நபர்கள் பரிசோதிக்கப்பட்டன. அதில் 1871 நபர்கள் அறிகுறி இருந்ததால் அருகில் உள்ள கரோனா பரிசோதனை மையத்துக்கு அழைத்துச் சென்றனர். மீதமுள்ள நபர்களுக்கு நோய் எதிர்ப்பு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.

கரோனா வைரசால் சென்னையில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு அடைகின்றனர். இருப்பினும் குணமடைந்தவரின் சதவீதமும் அதற்கு சரி சமமாக உள்ளது. இந்த நோய்த்தொற்றை குறைப்பதற்காக மாநகராட்சியும் சுகாதாரத் துறையும் பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்குவது, கபசுர குடிநீர் வழங்குவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக தினமும் 15 மண்டலங்களிலும் மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது .மே எட்டாம் தேதி முதல் இன்று வரை மாநகராட்சி சார்பில் மொத்தம் 27 ஆயிரத்து 139 மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளது.

அதில் 15 லட்சத்து 65 ஆயிரத்து 664 நபர்கள் பரிசோதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் பரிசோதிக்கப்பட்ட நபர்களில் 16 ஆயிரத்து 7 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் , இன்று 507 மருத்துவ முகாம்கள் நடைபெற்றது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக தேனாம்பேட்டையில் 60 , அண்ணா நகரில் 56, திருவிக நகரில் 49 மருத்துவ முகாம் நடைபெற்றது.

இன்று நடைபெற்ற 507 மருத்துவ முகாம்களில் மொத்தம் 26 ஆயிரத்து 279 நபர்கள் பரிசோதிக்கப்பட்டன. அதில் 1871 நபர்கள் அறிகுறி இருந்ததால் அருகில் உள்ள கரோனா பரிசோதனை மையத்துக்கு அழைத்துச் சென்றனர். மீதமுள்ள நபர்களுக்கு நோய் எதிர்ப்பு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.