ETV Bharat / state

உணவில் மயக்கமருந்து கலந்து பணம் நகைகள் கொள்ளை! - சமையல்காரர் கைது!

author img

By

Published : Nov 20, 2019, 2:19 PM IST

சென்னை: கீழ்ப்பாக்கம்தில் குடும்பத்தினருக்கு மயக்க மருந்து கொடுத்து 15 சவரன் நகைகளையும் 30 ஆயிரம் ரூபாய் பணத்தையும் சுருட்டிச் சென்ற சமையல்காரர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பிடிபட்டார்.

Home servant theft gold and money

சென்னை கீழ்ப்பாக்கம் ஹால்ஸ் ரோடு பகுதியைச் சேர்ந்த எண்ணெய் வியாபாரி சீனிவாசலு(54). இவருடைய வீட்டில் நேபாளத்தைச் சேர்ந்த சுஜன் என்பவர் 2016-2017 ஆண்டுகளில் சமையல்காரராக பணி செய்தார். பின்னர் அந்த வேலையை விட்டுவிட்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள மரச்சாமான் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் சுஜன் நேற்றிரவு சீனிவாசலு வீட்டிற்குச் சென்று அவர்களுடன் நட்பாகப் பேசிக்கொண்டிருந்தார். பின்னர் அவர்களுக்கு உணவு சமைத்துக் கொடுத்தார். அந்த உணவை சாப்பிட்ட சிறிது நேரத்தில் குடும்பத்தில் உள்ள அனைவரும் மயங்கி உள்ளனர். பின்னர் வீட்டிலிருந்த 15 சவரன் நகைகளையும் 30 ஆயிரம் ரூபாய் பணத்தையும் சுஜன் கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.

மயக்கம் தெளிந்தவுடன் இந்தச் சம்பவம் தொடர்பாக கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் சீனிவாசலு புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்திவந்தனர். இந்நிலையில், சுஜன் தப்பித்துச் செல்வதற்காக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் விரைந்து சென்று அவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தையும் 15 சவரன் நகைகளையும் காவல் துறையினர் மீட்டனர்.

இதையும் படிக்க: 'என்னடா இது தங்கத்துக்குப் பதிலா தக்காளி' - பாகிஸ்தானில் விநோதத் திருமணம்!

சென்னை கீழ்ப்பாக்கம் ஹால்ஸ் ரோடு பகுதியைச் சேர்ந்த எண்ணெய் வியாபாரி சீனிவாசலு(54). இவருடைய வீட்டில் நேபாளத்தைச் சேர்ந்த சுஜன் என்பவர் 2016-2017 ஆண்டுகளில் சமையல்காரராக பணி செய்தார். பின்னர் அந்த வேலையை விட்டுவிட்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள மரச்சாமான் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் சுஜன் நேற்றிரவு சீனிவாசலு வீட்டிற்குச் சென்று அவர்களுடன் நட்பாகப் பேசிக்கொண்டிருந்தார். பின்னர் அவர்களுக்கு உணவு சமைத்துக் கொடுத்தார். அந்த உணவை சாப்பிட்ட சிறிது நேரத்தில் குடும்பத்தில் உள்ள அனைவரும் மயங்கி உள்ளனர். பின்னர் வீட்டிலிருந்த 15 சவரன் நகைகளையும் 30 ஆயிரம் ரூபாய் பணத்தையும் சுஜன் கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.

மயக்கம் தெளிந்தவுடன் இந்தச் சம்பவம் தொடர்பாக கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் சீனிவாசலு புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்திவந்தனர். இந்நிலையில், சுஜன் தப்பித்துச் செல்வதற்காக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் விரைந்து சென்று அவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தையும் 15 சவரன் நகைகளையும் காவல் துறையினர் மீட்டனர்.

இதையும் படிக்க: 'என்னடா இது தங்கத்துக்குப் பதிலா தக்காளி' - பாகிஸ்தானில் விநோதத் திருமணம்!

Intro:Body:வேலை செய்த வீட்டில் குடும்பத்தினருக்கு மயக்க மருந்து கொடுத்து 15 அரை சவரன் நகை மற்றும் 30ஆயிரம் பணம் திருட்டு.

சென்னை கீழ்ப்பாக்கம் ஹால்ஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசலு (54).இவர் சவுகார்ப்பேட்டையில் எண்ணெய் விற்பனை செய்யும் தரகராக பணியாற்றி வருகிறார். இவருடைய வீட்டில் நேபாளத்தை சேர்ந்த சுஜன் என்பவர் கடந்த 2016 மற்றும் 2017 ஆண்டுகளில் பணிப்புரிந்து உள்ளார்.பின்னர் வேலையை விட்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள சோபா கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு சுஜன் சீனிவாசலு வீட்டிற்கு வந்து குடும்பத்துடன் சிறிது நேரம் பேசியுள்ளார்.மேலும் குடும்பத்தினருக்கு சுஜன் உணவு சமைத்தும் கொடுத்துள்ளார். பின்னர் அந்த உணவை சாப்பிட்டதும் சிறிது நேரத்தில் குடும்பத்தில் உள்ள அனைவரும் மயங்கி உள்ளனர். பின்னர் சுஜன் வீட்டிலிருந்த 15அரை சவரன் நகை மற்றும் 30ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளார்.

பின்னர் மயக்கம் தெளிந்தவுடன் இந்த சம்பவம் தொடர்பாக கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில் வழக்குபதிவு செய்து விசாரணை செய்த போலிசார் சுஜன் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தப்பித்து செல்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலிசார் விரைந்து சுஜனை கைது செய்தனர்.
மேலும் அவரிடமிருந்து 20ஆயிரம் ரூபாய் மற்றும் 15அரை சவரன் நகையை போலிசார் மீட்டனர்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.