ETV Bharat / state

இனி கிளினிக்குகளை நடத்த இந்திய மருத்துவ கவுன்சில் அல்லது ஆயுஷ் துறை பரிந்துரை அவசியம் - சென்னை உயர் நீதிமன்றம்

author img

By

Published : Apr 7, 2023, 10:42 PM IST

சமூக மருத்துவ சேவை மற்றும் மருந்துகளுக்கான டிப்ளமோ முடித்தவர்கள் இந்திய மருத்துவ கவுன்சில் அல்லது ஆயுஷ் துறை பரிந்துரை இல்லாமல் கிளினிக்குகளை நடத்த உரிமையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இனி கிளினிக்களை நடத்த இந்திய மருத்துவ கவுன்சில் அல்லது ஆயுஷ் துறை பரிந்துரை அவசியம்
இனி கிளினிக்களை நடத்த இந்திய மருத்துவ கவுன்சில் அல்லது ஆயுஷ் துறை பரிந்துரை அவசியம்

சென்னை: சமூக மருத்துவ சேவைகள் மற்றும் அத்தியாவசிய மருந்துகள் பிரிவில் இரண்டாண்டு டிப்ளமோ படித்தவர்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் நடத்தி வருகின்றனர். தங்கள் பணியில் அரசும் காவல் துறையும் தலையிடுவதாக கூறியதை தடுக்க வேண்டுமென கணேசன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்குகள் நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் தமிழ்நாடு கிளினிக்குகள் நிறுவனங்கள் ஒழுங்குமுறை சட்டத்தின்படி அரசு அனுமதி பெற்றுதான் கிளினிக்குகள் நடத்த முடியும் என்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி தகுதியை பெற்று அதை சம்பந்தப்பட்ட கவுன்சில்களில் பதிவுசெய்தால் மட்டுமே அந்த கிளினிக்குகளை நடத்த முடியும் என தெரிவிக்கப்பட்டது.

அரசு தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஏற்கனவே மதுரை கிளையில் ஒரு வழக்கில், டிப்ளமோ முடித்தவர்கள் கிளினிக்குகளை நடத்த முடியாது என்ற உத்தரவை சுட்டிக்காட்டி இந்திய மருத்துவ கவுன்சில் அல்லது ஆயுஷ் துறை பரிந்துரை இல்லாமல், தமிழ்நாடு முழுவதும் கிளினிக்குகளை நடத்த மனுதாரர்களுக்கு உரிமையில்லை எனக் கூறி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஜல்லிக்கட்டு ஒன்று தான் நாட்டு மாடுகளை காக்கிறது.. 400 ஆண்டு பழமையான சந்தையில் விவசாயிகள் தரும் சிறப்பு தகவல்கள்!

சென்னை: சமூக மருத்துவ சேவைகள் மற்றும் அத்தியாவசிய மருந்துகள் பிரிவில் இரண்டாண்டு டிப்ளமோ படித்தவர்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் நடத்தி வருகின்றனர். தங்கள் பணியில் அரசும் காவல் துறையும் தலையிடுவதாக கூறியதை தடுக்க வேண்டுமென கணேசன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்குகள் நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் தமிழ்நாடு கிளினிக்குகள் நிறுவனங்கள் ஒழுங்குமுறை சட்டத்தின்படி அரசு அனுமதி பெற்றுதான் கிளினிக்குகள் நடத்த முடியும் என்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி தகுதியை பெற்று அதை சம்பந்தப்பட்ட கவுன்சில்களில் பதிவுசெய்தால் மட்டுமே அந்த கிளினிக்குகளை நடத்த முடியும் என தெரிவிக்கப்பட்டது.

அரசு தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஏற்கனவே மதுரை கிளையில் ஒரு வழக்கில், டிப்ளமோ முடித்தவர்கள் கிளினிக்குகளை நடத்த முடியாது என்ற உத்தரவை சுட்டிக்காட்டி இந்திய மருத்துவ கவுன்சில் அல்லது ஆயுஷ் துறை பரிந்துரை இல்லாமல், தமிழ்நாடு முழுவதும் கிளினிக்குகளை நடத்த மனுதாரர்களுக்கு உரிமையில்லை எனக் கூறி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஜல்லிக்கட்டு ஒன்று தான் நாட்டு மாடுகளை காக்கிறது.. 400 ஆண்டு பழமையான சந்தையில் விவசாயிகள் தரும் சிறப்பு தகவல்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.