ETV Bharat / state

நீதிபதி தஹில் ரமாணி பணியிடமாறுதல் வழக்கு - விசாரணை ஒத்திவைப்பு

author img

By

Published : Sep 18, 2019, 12:46 PM IST

சென்னை: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணியை பணியிடமாறுதல் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்துள்ளது.

chennai high court

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணி, மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு பணியிடமாறுதல் செய்ய உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்தது. இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி தஹில் ரமாணி, தனது பதவியை ராஜினாமா செய்து குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பினார்.

அதைத் தொடர்ந்து அவர் நீதிமன்ற விசாரணைகளில் பங்கெடுக்கவில்லை. இந்நிலையில், தஹில் ரமாணியின் பணியிடமாறுதல் பரிந்துரைக்கு தடைவிதிக்கக் கோரி, வழக்கறிஞர் கற்பகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தை சார்ந்தது, அங்கு வழக்குத் தொடராமல் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், தலைமை நீதிபதியை பணியிடமாறுதல் செய்வது தொடர்பாக உச்ச நீதிமன்ற கொலிஜியம் நீதித் துறை உத்தரவை பிறப்பிக்கவில்லை, அது நிர்வாக உத்தரவு எனவே இந்த வழக்கை உயர் நீதிமன்றம் விசாரிக்கலாம் என பதிலளித்தார்.

இதனைத்தொடர்ந்து நீதிபதிகள், இந்த மனு விசாரணைக்கு உகந்ததுதானா? என்பது குறித்து விசாரித்து, இவ்விசாரணைக்கு பட்டியலிட பதிவுத் துறைக்கு உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணி, மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு பணியிடமாறுதல் செய்ய உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்தது. இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி தஹில் ரமாணி, தனது பதவியை ராஜினாமா செய்து குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பினார்.

அதைத் தொடர்ந்து அவர் நீதிமன்ற விசாரணைகளில் பங்கெடுக்கவில்லை. இந்நிலையில், தஹில் ரமாணியின் பணியிடமாறுதல் பரிந்துரைக்கு தடைவிதிக்கக் கோரி, வழக்கறிஞர் கற்பகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தை சார்ந்தது, அங்கு வழக்குத் தொடராமல் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், தலைமை நீதிபதியை பணியிடமாறுதல் செய்வது தொடர்பாக உச்ச நீதிமன்ற கொலிஜியம் நீதித் துறை உத்தரவை பிறப்பிக்கவில்லை, அது நிர்வாக உத்தரவு எனவே இந்த வழக்கை உயர் நீதிமன்றம் விசாரிக்கலாம் என பதிலளித்தார்.

இதனைத்தொடர்ந்து நீதிபதிகள், இந்த மனு விசாரணைக்கு உகந்ததுதானா? என்பது குறித்து விசாரித்து, இவ்விசாரணைக்கு பட்டியலிட பதிவுத் துறைக்கு உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.

Intro:Body:சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது தானா என்பது குறித்த விசாரணைக்காக வழக்கை பட்டியலிட பதிவுத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி, மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்தது. இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி தகில் ரமானி, தனது பதவியை ராஜினாமா செய்து குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்பினார். அதைத் தொடர்ந்து அவர் நீதிமன்ற விசாரணைகளில் பங்கெடுக்கவில்லை.

இந்த பின்னணியில் தஹில் ரமானியின் இடமாற்ற பரிந்துரைக்கு தடை விதிக்க கோரி வழக்கறிஞர் கற்பகம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டவர் மற்றொரு உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்வது அனுமதிக்கப்பட்டதா?

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் பணி மாற்ற முடிவு குடியரசுத் தலைவரால் மேற்கொள்ளப்படுகிறது அல்லது உச்சநீதிமன்ற கொலிஜியத்தால் மேற்கொள்ளப்படுகிறதா?
தலைமை நீதிபதி ஒப்புதல் அளிக்காவிட்டாலும் இடமாற்றம் செய்ய முடியுமா? பணி ஓய்வு பெறவுள்ள நிலையில் தலைமை நீதிபதியை பணி மாற்றம் செய்ய முடியுமா? என்பன உள்ளிட்ட கேள்விகளை மனுதாரர் எழுப்பியுள்ளார்.

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்து கொள்ள கோரி, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் பிரபாகரன், நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வில் முறையிட்டார்.

அதற்கு, உச்ச நீதிமன்றத்தை நாடாமல், உயர் நீதிமன்றத்தை அணுகியது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், தலைமை நீதிபதியை இடமாற்றம் செய்வது தொடர்பாக உச்ச நீதிமன்ற கொலிஜியம் நீதித்துறை உத்தரவை பிறப்பிக்க வில்லை எனவும், அது நிர்வாக உத்தரவு என்பதால் இந்த வழக்கை உயர்நீதிமன்றம் விசாரிக்கலாம் எனவும், மனு விசாரணைக்கு உகந்தது தான் என வாதிட தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, இந்த மனு விசாரணைக்கு உகந்தது தானா? என்பது குறித்த விசாரணைக்காக, மனுவை விசாரணைக்கு பட்டியலிட, பதிவுத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.