ETV Bharat / state

மலேசியாவிலிருந்து கடத்திவரப்பட்ட ரூ.24 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!

author img

By

Published : Oct 7, 2019, 9:18 AM IST

சென்னை: மலேசியாவிலிருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட ரூ.24 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத் துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

gold smuggling

மலேசியாவிலிருந்து சென்னை வந்த பயணி ஒருவர் மீது சந்தேகமடைந்த சுங்க அலுவலர்கள் அவரை விசாரித்துள்ளனர். அப்போது, அவர் முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்ததால் உடமைகளைச் சோதனை செய்தனர்.

தொடர்ந்து, அவர் வைத்திருந்த ஐந்து கையடக்க வானொலிகளை (ரேடியோ) பிரித்துப் பார்த்தபோது அதில் 235 கிராம் எடைகொண்ட தங்கக்கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர். சுமார் ஒன்பது லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இந்தத் தங்கக் கட்டிகளைக் கைப்பற்றிய சுங்க அலுவலர்கள் அதனைக் கடத்திவந்த சென்னையைச் சேர்ந்த முகமது யூசப்பை (29) கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கக் கட்டிகள்
அதேபோன்று, கமலா (52) என்ற பயணி மீது சந்தேகமடைந்த சுங்கத் துறையினர் அவரை தனியறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர். இந்தச் சோதனையில் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்துவைத்து கடத்திவந்ததைக் கண்டுபிடித்தனர். இவரிடமிருந்து 15 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 385 கிராம் தங்கத்தைக் பறிமுதல் செய்தனர்.

இதன்மூலம், நேற்று ஒரேநாளில் 24 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 620 கிராம் எடைகொண்ட தங்கத்தை சுங்கத் துறையினர் கைப்பற்றியுள்ளனர். மேலும், கடத்தல் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: Trichy Gold Heist : லலிதா ஜுவல்லரியில் கொள்ளை: வடமாநில இளைஞர்கள் 5 பேரிடம் விசாரணை

மலேசியாவிலிருந்து சென்னை வந்த பயணி ஒருவர் மீது சந்தேகமடைந்த சுங்க அலுவலர்கள் அவரை விசாரித்துள்ளனர். அப்போது, அவர் முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்ததால் உடமைகளைச் சோதனை செய்தனர்.

தொடர்ந்து, அவர் வைத்திருந்த ஐந்து கையடக்க வானொலிகளை (ரேடியோ) பிரித்துப் பார்த்தபோது அதில் 235 கிராம் எடைகொண்ட தங்கக்கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர். சுமார் ஒன்பது லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இந்தத் தங்கக் கட்டிகளைக் கைப்பற்றிய சுங்க அலுவலர்கள் அதனைக் கடத்திவந்த சென்னையைச் சேர்ந்த முகமது யூசப்பை (29) கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கக் கட்டிகள்
அதேபோன்று, கமலா (52) என்ற பயணி மீது சந்தேகமடைந்த சுங்கத் துறையினர் அவரை தனியறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர். இந்தச் சோதனையில் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்துவைத்து கடத்திவந்ததைக் கண்டுபிடித்தனர். இவரிடமிருந்து 15 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 385 கிராம் தங்கத்தைக் பறிமுதல் செய்தனர்.

இதன்மூலம், நேற்று ஒரேநாளில் 24 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 620 கிராம் எடைகொண்ட தங்கத்தை சுங்கத் துறையினர் கைப்பற்றியுள்ளனர். மேலும், கடத்தல் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: Trichy Gold Heist : லலிதா ஜுவல்லரியில் கொள்ளை: வடமாநில இளைஞர்கள் 5 பேரிடம் விசாரணை

Intro:மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 24 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.Body:மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 24 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.

சென்னை விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் இருந்தனர். அப்போது மலேசியாவில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த முகமது யூசுப் (29) என்பவர் வந்தார். இவர் மீது சந்தேகம் கொண்ட சுங்கத்துறை அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தனர். அப்போது முன்னுக்குபின் முரணாக பேசியதால் உடமைகளை சோதனை செய்தனர். அப்போது 5 கையடக்க ரேடியோக்கள் இருந்தது. அவற்றை பிரித்து பார்த்தபோது அதில் தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். ரூ. 9 லட்சத்தி 26 ஆயிரம் மதிப்புள்ள 235 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

அதுப்போல் மலேசியாவில் இருந்த வந்த விமானத்தில் பயணம் செய்த மலேசியாவை சேர்ந்த கமலா(52) என்பவர் வந்தார். இவர் மீது சந்தேகம் கொண்ட சுங்கத்துறை அதிகாரிகள் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தபோது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இவரிடம் இருந்து ரூ. 15 லட்சத்தி 20 ஆயிரம் மதிப்புள்ள 385 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

மலேசிய பெண் உள்பட 2 பேரிடம் இருந்து ரூ. 24 லட்சத்தி 46 ஆயிரம் மதிப்புள்ள 620 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து
சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.