ETV Bharat / state

கரோனாவுக்கு பை பை - மீண்டெழுந்த மருத்துவர்!

author img

By

Published : Apr 22, 2020, 8:50 PM IST

சென்னை: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த மருத்துவர் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.

கரோனாவிலிருந்து மீண்ட மருத்துவர்
கரோனாவிலிருந்து மீண்ட மருத்துவர்

சென்னையில் 42 வயதான அரசு பொது மருத்துவர் ஒருவர், கடந்த எட்டாம் தேதி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மூச்சுத் திணறல், சுவாசக் கோளாறு உள்ளிட்ட பிரச்னைகளுடன் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவருக்கு சிறந்த பாதுகாப்பு வசதிகளுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தொடர் சிகிச்சைக்குப் பிறகான பரிசோதனையில் கரோனா தொற்றிலிருந்து, அவர் முற்றிலும் மீண்டது தெரிய வந்ததையடுத்து இன்று அவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

கரோனாவிலிருந்து மீண்ட மருத்துவர்
கரோனாவிலிருந்து மீண்ட மருத்துவர்

அவரை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் முதல்வர் ஜெயந்தி, மருத்துவமனை கண்காணிப்பாளர் நாராயணசாமி உள்ளிட்டோர் வழியனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: சாதுக்கள் கொலை: டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பியது மனித உரிமைகள் ஆணையம்!

சென்னையில் 42 வயதான அரசு பொது மருத்துவர் ஒருவர், கடந்த எட்டாம் தேதி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மூச்சுத் திணறல், சுவாசக் கோளாறு உள்ளிட்ட பிரச்னைகளுடன் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவருக்கு சிறந்த பாதுகாப்பு வசதிகளுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தொடர் சிகிச்சைக்குப் பிறகான பரிசோதனையில் கரோனா தொற்றிலிருந்து, அவர் முற்றிலும் மீண்டது தெரிய வந்ததையடுத்து இன்று அவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

கரோனாவிலிருந்து மீண்ட மருத்துவர்
கரோனாவிலிருந்து மீண்ட மருத்துவர்

அவரை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் முதல்வர் ஜெயந்தி, மருத்துவமனை கண்காணிப்பாளர் நாராயணசாமி உள்ளிட்டோர் வழியனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: சாதுக்கள் கொலை: டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பியது மனித உரிமைகள் ஆணையம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.