மக்கள் நல்வாழ்வுத் துறை கரோனா வைரஸ் கண்காணிப்பு குறித்த தகவல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “தமிழ்நாட்டில் இரண்டு லட்சத்து 10 ஆயிரத்து 538 பயணிகள் விமான நிலையங்களில் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 92 ஆயிரத்து 531 பேர் நேற்று வரை வீட்டில் 28 நாள்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறையின் தொடர் கண்காணிப்பில் இருந்தனர். அவர்களில் 28 நாட்கள் தொடர் கண்காணிப்பினை இன்று 32,075 பேர் முடித்துள்ளனர். தற்போது 92 ஆயிரத்து 814 பேர் 28 நாட்கள் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர்.
மேலும் மருத்துவமனையில் தனி வார்டில் 1,953 பயணிகள் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார். 6,095 பேரின் ரத்த மாதிரிகள் பெறப்பட்டன. இவர்களில் 738 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 4,893 பேருக்கு நோய்த் தொற்று இல்லை என்பது உறுதியாகி உள்ளது. 344 நபர்களின் ரத்தம், சளி பரிசோதனை ஆய்வகங்களில் செய்யப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 48 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 21 நோயாளிகள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மாநாடு ஒன்றில் கலந்துகொண்ட 1,480 பேர் கண்டறியப்பட்டனர். கரோனா தொற்று உறுதியாகியுள்ள 34 மாவட்டங்களின் நிலவரம்...
- சென்னை : 156
- கோயம்புத்தூர் : 60
- திண்டுக்கல் : 46
- திருநெல்வேலி : 40
- தேனி : 39
- திருச்சிராப்பள்ளி : 36
- ஈரோடு : 32
- நாமக்கல் : 33
- ராணிப்பேட்டை : 27
- செங்கல்பட்டு : 24
- மதுரை : 24
- கரூர் : 23
- திருப்பூர் : 22
- விழுப்புரம் : 20
- தூத்துக்குடி : 17
- கடலூர் : 13
- திருவாரூர் : 13
- சேலம் : 13
- திருவள்ளூர் : 13
- தஞ்சாவூர் : 12
- விருதுநகர் : 12
- நாகப்பட்டினம் : 11
- திருப்பத்தூர் : 11
- திருவண்ணாமலை : 9
- கன்னியாகுமரி : 6
- காஞ்சிபுரம் : 6
- வேலூர் : 6
- சிவகங்கை : 5
- நீலகிரி : 4
- ராமநாதபுரம் : 2
- கள்ளக்குறிச்சி : 2
- அரியலூர் : 1
- பெரம்பலூர் : 1 பேருக்கும் என கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளன.