ETV Bharat / state

தினுசு தினுசா தங்கம் கடத்தல்.. சென்னை விமான நிலையத்தில் குருவிகள் சிக்கியது எப்படி? - சென்னை விமான நிலைய சுங்கத்துறை

இலங்கை, குவைத், அபுதாபி நாடுகளில் இருந்து 3 விமானங்களில், சென்னைக்கு கடத்திவரப்பட்ட ஒரு கோடியே 34 லட்சம் மதிப்பிலான 2.5 கிலோ தங்கத்தை சென்னை விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : May 2, 2023, 10:41 AM IST

சென்னை: இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து, ஏர் இந்தியா பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது இலங்கையைச் சேர்ந்த 29 வயது ஆண் பயணி ஒருவர், சுற்றுலா விசாவில் சென்னை வந்தார். அவர் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி உடைமைகளை சோதனையிட்டனர்.

உடைமைகளில் எதுவும் இல்லை. ஆனாலும் சந்தேகம் தீராமல் தனி அறைக்கு அழைத்து சென்று ஆடைகளை களைந்து சோதனையிட்டனர்.அவருடைய ஆடைகள்களுக்குள், 919 கிராம தங்கப் பசை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்து, பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூபாய் 49.35 லட்சம். இதையடுத்து அந்தப் பயணியை கைது செய்தனர்.

அதேபோல், குவைத்தில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் இலங்கை சேர்ந்த 32 வயது பெண் பயணி ஒருவர், சுற்றுலா பயணிகள் விசாவில் குவைத்துக்கு சென்றுவிட்டு சென்னை வழியாக இலங்கை செல்ல வந்திருந்தார்.

சுங்க அதிகாரிகளுக்கு அந்தப் பெண் பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது. அவருடைய சூட்கேஸ் மற்றும் கைப்பையை சோதனை செய்தனர். சூட்கேஸ் மற்றும் கைப்பையில் மறைத்து வைத்திருந்த 20 தங்க வளையல்களை பறிமுதல் செய்தனர். அதன் எடை 805 கிராம். சர்வதேச மதிப்பு ரூ.43.23 லட்சம். இதையடுத்து சுங்க அதிகாரிகள் இலங்கை பெண் பயணியை கைது செய்தனர்‌.

இதனிடையே, அபுதாபியில் இருந்து எத்தியாட் ஏர்லைன்ஸ், பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சென்னையைச் சேர்ந்த 42 வயது ஆண் பயணி ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை முழுமையாக சோதித்தனர் அவருடைய உள்ளாடை களுக்குள் மறைத்து வைத்திருந்த 792 கிராம், தங்கப் பசையை பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ.42.38 லட்சம். அந்தப் பயணியையும் சுங்க அதிகாரிகள் கைது செய்தனர்.

சென்னை விமான நிலையத்தில், சுங்க அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில், இலங்கை, குவைத், அபுதாபி நாடுகளில் இருந்து, சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 1.34 கோடி மதிப்புடைய 2.5 கிலோ தங்கப் பசை, தங்க வளையல்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து, ஒரு பெண் பயணி உட்பட மூன்று பேரை, கைது செய்து விசாரணை நடத்துகின்றனர்.

இதையும் படிங்க: K.Ponmudi: "ஓசி" வரிசையில் "எவ இவ" மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் பொன்முடி!

சென்னை: இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து, ஏர் இந்தியா பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது இலங்கையைச் சேர்ந்த 29 வயது ஆண் பயணி ஒருவர், சுற்றுலா விசாவில் சென்னை வந்தார். அவர் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி உடைமைகளை சோதனையிட்டனர்.

உடைமைகளில் எதுவும் இல்லை. ஆனாலும் சந்தேகம் தீராமல் தனி அறைக்கு அழைத்து சென்று ஆடைகளை களைந்து சோதனையிட்டனர்.அவருடைய ஆடைகள்களுக்குள், 919 கிராம தங்கப் பசை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்து, பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூபாய் 49.35 லட்சம். இதையடுத்து அந்தப் பயணியை கைது செய்தனர்.

அதேபோல், குவைத்தில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் இலங்கை சேர்ந்த 32 வயது பெண் பயணி ஒருவர், சுற்றுலா பயணிகள் விசாவில் குவைத்துக்கு சென்றுவிட்டு சென்னை வழியாக இலங்கை செல்ல வந்திருந்தார்.

சுங்க அதிகாரிகளுக்கு அந்தப் பெண் பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது. அவருடைய சூட்கேஸ் மற்றும் கைப்பையை சோதனை செய்தனர். சூட்கேஸ் மற்றும் கைப்பையில் மறைத்து வைத்திருந்த 20 தங்க வளையல்களை பறிமுதல் செய்தனர். அதன் எடை 805 கிராம். சர்வதேச மதிப்பு ரூ.43.23 லட்சம். இதையடுத்து சுங்க அதிகாரிகள் இலங்கை பெண் பயணியை கைது செய்தனர்‌.

இதனிடையே, அபுதாபியில் இருந்து எத்தியாட் ஏர்லைன்ஸ், பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சென்னையைச் சேர்ந்த 42 வயது ஆண் பயணி ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை முழுமையாக சோதித்தனர் அவருடைய உள்ளாடை களுக்குள் மறைத்து வைத்திருந்த 792 கிராம், தங்கப் பசையை பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ.42.38 லட்சம். அந்தப் பயணியையும் சுங்க அதிகாரிகள் கைது செய்தனர்.

சென்னை விமான நிலையத்தில், சுங்க அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில், இலங்கை, குவைத், அபுதாபி நாடுகளில் இருந்து, சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 1.34 கோடி மதிப்புடைய 2.5 கிலோ தங்கப் பசை, தங்க வளையல்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து, ஒரு பெண் பயணி உட்பட மூன்று பேரை, கைது செய்து விசாரணை நடத்துகின்றனர்.

இதையும் படிங்க: K.Ponmudi: "ஓசி" வரிசையில் "எவ இவ" மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் பொன்முடி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.