ETV Bharat / state

தொடரும் இருசக்கர வாகனத் திருட்டு; திணறும் காவல் துறை

author img

By

Published : Sep 5, 2019, 10:41 PM IST

சென்னை: ஆதம்பாக்கத்தில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டு வரும் நிலையில், பைக் திருடர்களைப் பிடிக்க காவல் துறையினர் திணறி வருவது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தொடரும் இரு சக்கர வாகன திருட்டு. திணறும் காவல் துறை

சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் இருசக்கர வாகனங்கள் திருடப்படுகிற சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. அந்த வரிசையில் கக்கன் நகர் பிரதான சாலையைச் சேர்ந்தவர் குமார் (47). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவர், தனது விலையுர்ந்த இருசக்கர வாகனத்தை (Royal Enfield) கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி வழக்கம் போல தனது வீட்டு வாசலில் நிறுத்தி வைத்துள்ளார்.

ஆதம்பாக்கத்தில் தொடரும் இரு சக்கர வாகனத் திருட்டு

அடுத்த நாள் காலையில் பார்த்தபோது இருசக்கர வாகனம் மாயமாகி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார், உடனடியாக இது குறித்து ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில், காவல் துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர்.

அதில் அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள், குமாரின் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள ஆதம்பாக்கம் காவல் துறையினர், வாகன திருட்டில் ஈடுபட்ட அந்த மர்ம ஆசாமிகளைத் தேடி வருகின்றனர். இந்த பகுதியில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருட்டு நடைபெற்று வருகின்றன என்றும், சிசிடிவி காட்சிகள் இருந்தும் திருடர்களைப் பிடிக்க முடியவில்லை என்று அப்பகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் இருசக்கர வாகனங்கள் திருடப்படுகிற சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. அந்த வரிசையில் கக்கன் நகர் பிரதான சாலையைச் சேர்ந்தவர் குமார் (47). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவர், தனது விலையுர்ந்த இருசக்கர வாகனத்தை (Royal Enfield) கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி வழக்கம் போல தனது வீட்டு வாசலில் நிறுத்தி வைத்துள்ளார்.

ஆதம்பாக்கத்தில் தொடரும் இரு சக்கர வாகனத் திருட்டு

அடுத்த நாள் காலையில் பார்த்தபோது இருசக்கர வாகனம் மாயமாகி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார், உடனடியாக இது குறித்து ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில், காவல் துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர்.

அதில் அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள், குமாரின் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள ஆதம்பாக்கம் காவல் துறையினர், வாகன திருட்டில் ஈடுபட்ட அந்த மர்ம ஆசாமிகளைத் தேடி வருகின்றனர். இந்த பகுதியில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருட்டு நடைபெற்று வருகின்றன என்றும், சிசிடிவி காட்சிகள் இருந்தும் திருடர்களைப் பிடிக்க முடியவில்லை என்று அப்பகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

Intro:Body:சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் இரு சக்கர வாகனம் தொடர்ந்து திருடு போகிறது. அந்த வரிசையில் கக்கன் நகர் பிரதான சாலையை சேர்ந்தவர் குமார்(47). இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது விலையுர்ந்த இருசக்கர வாகனத்தை (Bullet) கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி ததனது வீட்டு வாசலில் நிறுத்தி உள்ளார்.

அடுத்த நாள் காலையில் பார்த்தபோது இருசக்கர வாகனம் மாயமாகி இருந்ததை கண்டு குமார் அதிர்ச்சி அடைந்துள்ளார்.இது குறித்து ஆதம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அதில் அடையாளம் தெரியாத 2 பேர் குமாரின் இருசக்கர வாகனத்தை திருடி சென்றது தெரியவந்துள்ளது. இது குறித்து ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர். சிசிடிவி காட்சிகள் இருந்தும் திருடர்களை பிடிக்க முடியவில்லை என்று அப்பகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.