ETV Bharat / state

108 ஆம்புலன்ஸ் வர தாமதம்: குழந்தை உயிரிழப்பு - chennai anbluence late baby died

சென்னை: திருநின்றவூர் அருகே 108 ஆம்புலன்ஸ் நான்கு மணி நேரம் தாமதமாக வந்ததால் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: திருநின்றவூர் அருகே 108 ஆம்புலன்ஸ் நான்கு மணி நேரம் தாமதமாக வந்ததால் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: திருநின்றவூர் அருகே 108 ஆம்புலன்ஸ் நான்கு மணி நேரம் தாமதமாக வந்ததால் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
author img

By

Published : Jun 28, 2020, 3:47 AM IST

திருநின்றவூர் அடுத்த பாக்கம் கிராமத்தில் வசித்து வருபவர் கட்டிட தொழிலாளியான மாரி. இவரது மனைவி முனியம்மா. இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டு கடந்த நிலையில், மாரி மனைவி முனியம்மாள் 7 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டத்தால், அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அழைத்து சென்றுள்ளனர்.

108 ஆம்புலன்ஸ் வர தாமதம்: குழந்தை உயிரிழப்பு

அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த சில மணி நேரத்தில் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் மருத்துவமனை எடுத்துச் செல்ல 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுக்கப்பட்டது. மேலும் ஆம்புலன்ஸ் நான்கு மணி நேரம் காலதாமதமாக வந்துள்ளது. இதனையடுத்து குழந்தை மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு, மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்டது.

இதில் குழந்தை வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே குழந்தை இறந்ததற்கு காரணம் 108 ஆம்புலன்ஸ் காலதாமதமாக வந்ததே என்று கூறி அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இதே போன்று சம்பவம் நடக்காமல் இருக்க திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:பிறந்த ஒரு மணி நேரத்தில் வீதியில் வீசப்பட்ட பெண் குழந்தை; வேலூரில் கொடூரம்

திருநின்றவூர் அடுத்த பாக்கம் கிராமத்தில் வசித்து வருபவர் கட்டிட தொழிலாளியான மாரி. இவரது மனைவி முனியம்மா. இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டு கடந்த நிலையில், மாரி மனைவி முனியம்மாள் 7 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டத்தால், அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அழைத்து சென்றுள்ளனர்.

108 ஆம்புலன்ஸ் வர தாமதம்: குழந்தை உயிரிழப்பு

அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த சில மணி நேரத்தில் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் மருத்துவமனை எடுத்துச் செல்ல 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுக்கப்பட்டது. மேலும் ஆம்புலன்ஸ் நான்கு மணி நேரம் காலதாமதமாக வந்துள்ளது. இதனையடுத்து குழந்தை மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு, மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்டது.

இதில் குழந்தை வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே குழந்தை இறந்ததற்கு காரணம் 108 ஆம்புலன்ஸ் காலதாமதமாக வந்ததே என்று கூறி அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இதே போன்று சம்பவம் நடக்காமல் இருக்க திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:பிறந்த ஒரு மணி நேரத்தில் வீதியில் வீசப்பட்ட பெண் குழந்தை; வேலூரில் கொடூரம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.