ETV Bharat / state

ஆரோவில் பகுதியில் 3 வெண்கல சிலைகள் பறிமுதல்: ஜெர்மன் தம்பதியிடம் விசாரணை

ஆரோவில் பகுதியில் 3 வெண்கல சிலைகளை பறிமுதல் செய்த போலீசார் ஜெர்மன் நாட்டு தம்பதியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

author img

By

Published : Nov 8, 2022, 10:42 AM IST

வெண்கல சிலைகள் பறிமுதல்
வெண்கல சிலைகள் பறிமுதல்

சென்னை: இரும்பை அடுத்த ஆரோவில் பகுதியில் உள்ள யந்த்ரா சமூகத்தில் வசிக்கும் ஜெர்மன் நாட்டு தம்பதியின் வீட்டில் பழங்கால சிலைகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நீதிமன்ற உத்தரவு பெற்று நேற்று (நவ. 7) அவர்களது வீட்டில் சோதனை மேற்கொள்ள சென்றனர்.

அப்போது, ஜெர்மன் நாட்டு தம்பதியான பாப்போ பிங்கல் மற்றும் மோனா பிங்கல் ஆகியோர் போலீசாரை தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை மீறி போலீசார் வீட்டிற்குள் சென்று சோதனை நடத்திய போது சிலைகள் ஏதும் கிடைக்கவில்லை. மீண்டும் சோதனை வேட்டை நடத்திய போது, ஹாலிவுட் திரைப்படத்தில் வருவது போல வீட்டின் முதல் தளத்திற்கு செல்லக்கூடிய படிக்கட்டுகள் மறைத்து கட்டப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

பின்னர் முதல் தளத்தில் உள்ள படுக்கையறையின் மேல் மாடியில் ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த மூன்று பழங்கால வெண்கல சிலைகளை போலீசார் கண்டுபிடித்தனர். கண்டுபிடிக்கப்பட்ட நடராஜ், அம்மன், சந்திரசேகரர் ஆகிய மூன்று சிலைகளுக்கு முறையான ஆவணங்கள் எதுவும் தம்பதியிடம் இல்லாததால் அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டதற்கான ஆவணங்களில் தம்பதி கையெழுத்திடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இரும்பை விஏஓ ராஜா மற்றும் கிராம உதவியாளர் சுகுமார் ஆகியோர் முன்னிலையில் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட மூன்று சிலைகளும் சோழர் காலத்தை சேர்ந்தவை எனவும் சர்வதேச சந்தைகளில் பல கோடி மதிப்புடையவை எனவும் போலீசார் தெரிவித்தனர்.

தம்பதி சில காட்சிப் பொருட்களை பெற்று தனது வளாகத்தில் அருங்காட்சியகம் அமைக்க திட்டமிட்டிருந்ததாகவும், பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் 30 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கியதாகவும் விசாரணையில் தம்பதி தெரிவித்துள்ளனர். மேலும் பாப்போ பிங்கல் கட்டட நிபுணர் என்பதால் ஹாலிவுட் திரைப்பட தரத்தில் ரகசிய அறைகளை அமைத்து வீட்டை கட்டி இருப்பதும் தெரியவந்துள்ளது.

இந்த தம்பதி சிலைகளை கடத்தி வந்தனரா, இந்த சிலைகள் யாரிடம் இருந்து வாங்கப்பட்டது என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: திருவண்ணாமலை ஐப்பசி மாத கிரிவலம்; லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்..

சென்னை: இரும்பை அடுத்த ஆரோவில் பகுதியில் உள்ள யந்த்ரா சமூகத்தில் வசிக்கும் ஜெர்மன் நாட்டு தம்பதியின் வீட்டில் பழங்கால சிலைகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நீதிமன்ற உத்தரவு பெற்று நேற்று (நவ. 7) அவர்களது வீட்டில் சோதனை மேற்கொள்ள சென்றனர்.

அப்போது, ஜெர்மன் நாட்டு தம்பதியான பாப்போ பிங்கல் மற்றும் மோனா பிங்கல் ஆகியோர் போலீசாரை தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை மீறி போலீசார் வீட்டிற்குள் சென்று சோதனை நடத்திய போது சிலைகள் ஏதும் கிடைக்கவில்லை. மீண்டும் சோதனை வேட்டை நடத்திய போது, ஹாலிவுட் திரைப்படத்தில் வருவது போல வீட்டின் முதல் தளத்திற்கு செல்லக்கூடிய படிக்கட்டுகள் மறைத்து கட்டப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

பின்னர் முதல் தளத்தில் உள்ள படுக்கையறையின் மேல் மாடியில் ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த மூன்று பழங்கால வெண்கல சிலைகளை போலீசார் கண்டுபிடித்தனர். கண்டுபிடிக்கப்பட்ட நடராஜ், அம்மன், சந்திரசேகரர் ஆகிய மூன்று சிலைகளுக்கு முறையான ஆவணங்கள் எதுவும் தம்பதியிடம் இல்லாததால் அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டதற்கான ஆவணங்களில் தம்பதி கையெழுத்திடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இரும்பை விஏஓ ராஜா மற்றும் கிராம உதவியாளர் சுகுமார் ஆகியோர் முன்னிலையில் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட மூன்று சிலைகளும் சோழர் காலத்தை சேர்ந்தவை எனவும் சர்வதேச சந்தைகளில் பல கோடி மதிப்புடையவை எனவும் போலீசார் தெரிவித்தனர்.

தம்பதி சில காட்சிப் பொருட்களை பெற்று தனது வளாகத்தில் அருங்காட்சியகம் அமைக்க திட்டமிட்டிருந்ததாகவும், பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் 30 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கியதாகவும் விசாரணையில் தம்பதி தெரிவித்துள்ளனர். மேலும் பாப்போ பிங்கல் கட்டட நிபுணர் என்பதால் ஹாலிவுட் திரைப்பட தரத்தில் ரகசிய அறைகளை அமைத்து வீட்டை கட்டி இருப்பதும் தெரியவந்துள்ளது.

இந்த தம்பதி சிலைகளை கடத்தி வந்தனரா, இந்த சிலைகள் யாரிடம் இருந்து வாங்கப்பட்டது என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: திருவண்ணாமலை ஐப்பசி மாத கிரிவலம்; லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.