ETV Bharat / state

Vanathi Srinivasan: சபரிமலை சென்றதன் காரணம் என்ன? - வானதி சீனிவாசன் விளக்கம்!

author img

By

Published : Jul 19, 2023, 4:52 PM IST

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் சென்று வழிபடுவதில் பல்வேறு சிக்கல்கள் இருந்துவரும் நிலையில், பாஜக மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். இது குறித்து நெட்டிசன்கள் விமர்சித்த நிலையில், சபரிமலை பயணம் தொடர்பாக வானதி சீனிவாசன் விளக்கமும் அளித்துள்ளார்.

BJP MLA Vanathi
சபரிமலை

ஹைதராபாத்: கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில், மாதவிடாயை காரணம் காட்டி 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழைய அனுமதிக்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரும் வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பான வழக்கில், கடந்த 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் வழிபடி அனுமதி அளிக்க வேண்டும், மாதவிடாயை காரணம் காட்டி அவர்களுக்கு அனுமதி மறுப்பது சட்டவிரோதம் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதற்கு இந்த தீர்ப்பை கேரள அரசு வரவேற்றது. தீர்ப்பை செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டது. ஆனால், இந்து மத அமைப்புகள், பாஜக மற்றும் ஐயப்ப பக்தர்கள் இந்த தீர்ப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உச்சநீதிமன்ற தீர்ப்பை கேரள அரசு அமல்படுத்த முயன்றபோது பாஜகவினர் கேரள அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தினர். ஐயப்ப பக்தர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் கேரள அரசால் இந்த தீர்ப்பை செயல்படுத்த முடியவில்லை. அதன் பிறகு, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, சபரிமலைக்குச் செல்ல சில பெண்கள் முயற்சித்தபோதும், பக்தர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

இந்த நிலையில், பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன், இருமுடி கட்டிக் கொண்டு சபரிமலைக்கு யாத்திரை மேற்கொண்டார். விரதம் இருந்து மாலை போட்டு, வட கோவையில் உள்ள ஐய்யப்பன் கோயிலில் இருமுடி கட்டிக் கொண்டு, கடந்த 16ஆம் தேதி சபரிமலைக்கு புறப்பட்டார்.

கடந்த 16ஆம் தேதி ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்ட நிலையில், 17ஆம் தேதி வானதி சீனிவாசன் சாமி தரிசனம் செய்துள்ளார். சபரிமலையில் சாமி தரிசனம் செய்த புகைப்படங்களையும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

வானதி சீனிவாசன் சபரிமலையில் சாமி தரிசனம் செய்தது சமூக வலைதளங்களில் தற்போது பேசுபொருளாகியுள்ளது. சபரிமலைக்கு பெண்கள் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த வானதி சீனிவாசன் தற்போது சபரிமலையில் தரிசனம் செய்துள்ளதாக நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர். அவர் சபரிமலைக்கு செல்ல கேரள கம்யூனிஸ்ட் கட்சிதான் காரணம் என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். அதேநேரம், 50 வயதுக்கும் மேற்பட்ட பெண்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்யலாம் என்பதால், 53 வயதான வானதி சீனிவாசன் சபரிமலைக்கு சென்றிருப்பதாகவும் தெரிகிறது.

இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த வானதி சீனிவாசன், "சபரிமலைக்கு செல்ல வேண்டும் என்பது எனது சிறு வயது விருப்பம். நான் புதிதாக ஒன்றும் சபரிமலைக்கு செல்லவில்லை. ஏற்கனவே உள்ள நடைமுறைப்படிதான் சென்றேன். பழைய பழக்க வழக்கங்களை நாம் மதிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: எந்த கடவுளும் தீட்டு பார்ப்பதில்லை: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

ஹைதராபாத்: கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில், மாதவிடாயை காரணம் காட்டி 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழைய அனுமதிக்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரும் வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பான வழக்கில், கடந்த 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் வழிபடி அனுமதி அளிக்க வேண்டும், மாதவிடாயை காரணம் காட்டி அவர்களுக்கு அனுமதி மறுப்பது சட்டவிரோதம் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதற்கு இந்த தீர்ப்பை கேரள அரசு வரவேற்றது. தீர்ப்பை செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டது. ஆனால், இந்து மத அமைப்புகள், பாஜக மற்றும் ஐயப்ப பக்தர்கள் இந்த தீர்ப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உச்சநீதிமன்ற தீர்ப்பை கேரள அரசு அமல்படுத்த முயன்றபோது பாஜகவினர் கேரள அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தினர். ஐயப்ப பக்தர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் கேரள அரசால் இந்த தீர்ப்பை செயல்படுத்த முடியவில்லை. அதன் பிறகு, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, சபரிமலைக்குச் செல்ல சில பெண்கள் முயற்சித்தபோதும், பக்தர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

இந்த நிலையில், பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன், இருமுடி கட்டிக் கொண்டு சபரிமலைக்கு யாத்திரை மேற்கொண்டார். விரதம் இருந்து மாலை போட்டு, வட கோவையில் உள்ள ஐய்யப்பன் கோயிலில் இருமுடி கட்டிக் கொண்டு, கடந்த 16ஆம் தேதி சபரிமலைக்கு புறப்பட்டார்.

கடந்த 16ஆம் தேதி ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்ட நிலையில், 17ஆம் தேதி வானதி சீனிவாசன் சாமி தரிசனம் செய்துள்ளார். சபரிமலையில் சாமி தரிசனம் செய்த புகைப்படங்களையும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

வானதி சீனிவாசன் சபரிமலையில் சாமி தரிசனம் செய்தது சமூக வலைதளங்களில் தற்போது பேசுபொருளாகியுள்ளது. சபரிமலைக்கு பெண்கள் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த வானதி சீனிவாசன் தற்போது சபரிமலையில் தரிசனம் செய்துள்ளதாக நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர். அவர் சபரிமலைக்கு செல்ல கேரள கம்யூனிஸ்ட் கட்சிதான் காரணம் என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். அதேநேரம், 50 வயதுக்கும் மேற்பட்ட பெண்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்யலாம் என்பதால், 53 வயதான வானதி சீனிவாசன் சபரிமலைக்கு சென்றிருப்பதாகவும் தெரிகிறது.

இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த வானதி சீனிவாசன், "சபரிமலைக்கு செல்ல வேண்டும் என்பது எனது சிறு வயது விருப்பம். நான் புதிதாக ஒன்றும் சபரிமலைக்கு செல்லவில்லை. ஏற்கனவே உள்ள நடைமுறைப்படிதான் சென்றேன். பழைய பழக்க வழக்கங்களை நாம் மதிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: எந்த கடவுளும் தீட்டு பார்ப்பதில்லை: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.