ETV Bharat / state

’மாநகரங்கள் முதல் கிராமங்கள் வரை கிருமிநாசினி தெளிக்க வேண்டும்’ - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு - கிருமிநாசினி

சென்னை: மாநகரங்கள் முதல் கிராமங்கள் வரை அனைத்து இடங்களிலும் கிருமி நாசினி தெளிப்பது தொடர்பாக அறிவுறுத்தல் வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்றம்
உயர் நீதிமன்றம்
author img

By

Published : May 13, 2021, 10:47 PM IST

கோவையைச் சேர்ந்த பூமிராஜ் என்பவர் தொடர்ந்துள்ள பொதுநல மனுவில், ”கடந்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில் கரோனா பரவல் தொடங்கிய நிலையிலிருந்து, கிருமி நாசினி தெளித்து தொற்று பரவாமல் தமிழ்நாடு சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்தது. சிறிய அளவிலான தெளிப்பான், தீயணைப்பு வாகனம், ராட்சத கிரேன், டிரோன் கேமிரா ஆகியவற்றின் மூலம் மருத்துவமனை வளாகங்கள்,சாலை சந்திப்புகள், கோயம்பேடு வணிக வளாகம், நடைபாதை உள்ளிட்ட மக்கள் நடமாடும் பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

கரோனா பரவல் சற்றே குறைந்து தற்போது இரண்டாவது அலை தொடங்கியுள்ள நிலையில், கிருமி நாசினி தெளிக்கும் நடவடிக்கைகளை கடந்த மார்ச் மாதம் முதல் அரசு தொடங்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆஜராகி, சோடியம் ஹைட்ரோ குளோரைடு கரைசலை கிருமி நாசினியாக பயன்படுத்தலாம் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தல் உள்ளதால், அதை பின்பற்ற தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டுமென வாதிட்டார்.

அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி உலக சுகாதார நிறுவனம் வழங்கியுள்ள வழிகாட்டுதல்களின்படி தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், கரோனா நுண்கிருமிகள் காற்றில் கலந்து மனித உடலுக்குள் செல்லும் என்பதால், தடுப்பதற்கு முழுமையாக கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தினர். எனவே, மாநகரப் பகுதி தொடங்கி கிராமங்கள் வரை கிருமிநாசினி தெளிப்பதற்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என்றும், தேவையான பொருள்களை வழங்க வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் பூமிராஜின் வழக்கு குறித்து தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டும் வழக்கு விசாரணையை மே 17ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: ஆட்சிக்கு வந்து என்ன செய்தோம் - முதலமைச்சர் ஸ்டாலின் உரை!

கோவையைச் சேர்ந்த பூமிராஜ் என்பவர் தொடர்ந்துள்ள பொதுநல மனுவில், ”கடந்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில் கரோனா பரவல் தொடங்கிய நிலையிலிருந்து, கிருமி நாசினி தெளித்து தொற்று பரவாமல் தமிழ்நாடு சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்தது. சிறிய அளவிலான தெளிப்பான், தீயணைப்பு வாகனம், ராட்சத கிரேன், டிரோன் கேமிரா ஆகியவற்றின் மூலம் மருத்துவமனை வளாகங்கள்,சாலை சந்திப்புகள், கோயம்பேடு வணிக வளாகம், நடைபாதை உள்ளிட்ட மக்கள் நடமாடும் பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

கரோனா பரவல் சற்றே குறைந்து தற்போது இரண்டாவது அலை தொடங்கியுள்ள நிலையில், கிருமி நாசினி தெளிக்கும் நடவடிக்கைகளை கடந்த மார்ச் மாதம் முதல் அரசு தொடங்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆஜராகி, சோடியம் ஹைட்ரோ குளோரைடு கரைசலை கிருமி நாசினியாக பயன்படுத்தலாம் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தல் உள்ளதால், அதை பின்பற்ற தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டுமென வாதிட்டார்.

அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி உலக சுகாதார நிறுவனம் வழங்கியுள்ள வழிகாட்டுதல்களின்படி தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், கரோனா நுண்கிருமிகள் காற்றில் கலந்து மனித உடலுக்குள் செல்லும் என்பதால், தடுப்பதற்கு முழுமையாக கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தினர். எனவே, மாநகரப் பகுதி தொடங்கி கிராமங்கள் வரை கிருமிநாசினி தெளிப்பதற்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என்றும், தேவையான பொருள்களை வழங்க வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் பூமிராஜின் வழக்கு குறித்து தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டும் வழக்கு விசாரணையை மே 17ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: ஆட்சிக்கு வந்து என்ன செய்தோம் - முதலமைச்சர் ஸ்டாலின் உரை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.