ETV Bharat / state

சென்னையில் ஒரே நாளில் 12,199 சுவரொட்டிகள் அகற்றம்!

author img

By

Published : Jul 10, 2021, 7:27 AM IST

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் ஒரே நாளில் 12,199 சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

chennai corporation  posters were removed from chennai  chennai news  chennai latest news  poster removal  chennai poster removal by chennai corporation  chennai poster removal  சென்னை செய்திகள்  சென்னையில் சுவரொட்டிகள் அகற்றும் பணி  சுவரொட்டிகள் அகற்றல்  சென்னை மாநகராட்சியால் சுவரொட்டிகள் அகற்றல்  சுவரொட்டி  சென்னை மாநகராட்சி  மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி  ககன்தீப் சிங் பேடி  chennai corporation commissioner  chennai corporation commissioner Gagandeep Singh Bedi  Gagandeep Singh Bedi
சுவரொட்டிகள் அகற்றல்

சென்னை: சென்னை மாநகரை துாய்மையாக பராமரிக்க சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், திடக்கழிவுகள் அகற்றுதல், சாலை மைய தடுப்புகளில் செடிகள் நட்டு அழகுபடுத்துதல் உள்ளிட்ட பணிகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.

இருப்பினும், பேருந்து நிழற்குடைகள், மாநகராட்சி கட்டடங்கள், பாலங்கள், தெரு பெயர் பலகைகள் உள்ளிட்ட பொது இடங்கள், சுவரொட்டிகளால் மாநகரின் அழகை சீர்க்குலைத்து வருகின்றன.

இதனால் கடந்த ஜூலை 8 ஆம் தேதி, சென்னை பேருந்து நிறுத்த நிழற்குடைகள், அரசு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ள சுவர்களில், சுவரொட்டிகள் ஒட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்திருந்தார்.

சுவரொட்டிகள் அகற்றும் பணி

மேலும் மேலும் மாநகராட்சியின் சார்பில் சுவரொட்டிகளை அகற்றும் வகையில், நாள்தோறும் ஒவ்வொரு மண்டலத்திலும் பேருந்து செல்லும் ஐந்து சாலைகளைத் தேர்வுசெய்து, அங்கு ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் முழுவீச்சில் அகற்றப்படும் என்றார்.

அந்த வகையில், நேற்று (ஜூலை 9) ஒரே நாளில், சென்னையில் உள்ள 15 மண்டலங்களில், சுமார் 12,199 சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதில் வடசென்னை பகுதியில் உள்ள 5 மண்டலங்களில் 2,389 சுவரொட்டிகளும், மத்திய சென்னை பகுதியில் உள்ள 5 மண்டலங்களில் 5,237 சுவரொட்டிகளும், தென் சென்னை பகுதியில் உள்ள 5 மண்டலங்களில் 4,573 சுவரொட்டிகளும் அகற்றப்பட்டு உள்ளது. இதையடுத்து மீண்டும் சுவரொட்டிகள் ஒட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் ஒத்துழைப்பு

பொதுமக்கள் தங்கள் பகுதிக்குள்பட்ட பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தால், அது குறித்த தகவல்களை மாநகராட்சியின் 1913 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகாராகத் தெரிவிக்கலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

மேலும் மாநகராட்சியின் இந்த நடவடிக்கைகளுக்குப் பொதுமக்கள் தங்களின் முழு ஒத்துழைப்பை வழங்கி, சென்னை மாநகரைச் சுத்தமாகவும், அழகாகவும் பராமரிக்கும் வகையில் பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என சென்னை மாநகராட்சி சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அதிமுக முன்னாள் எம்எல்ஏ-க்கள் கட்சியிலிருந்து நீக்கம்

சென்னை: சென்னை மாநகரை துாய்மையாக பராமரிக்க சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், திடக்கழிவுகள் அகற்றுதல், சாலை மைய தடுப்புகளில் செடிகள் நட்டு அழகுபடுத்துதல் உள்ளிட்ட பணிகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.

இருப்பினும், பேருந்து நிழற்குடைகள், மாநகராட்சி கட்டடங்கள், பாலங்கள், தெரு பெயர் பலகைகள் உள்ளிட்ட பொது இடங்கள், சுவரொட்டிகளால் மாநகரின் அழகை சீர்க்குலைத்து வருகின்றன.

இதனால் கடந்த ஜூலை 8 ஆம் தேதி, சென்னை பேருந்து நிறுத்த நிழற்குடைகள், அரசு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ள சுவர்களில், சுவரொட்டிகள் ஒட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்திருந்தார்.

சுவரொட்டிகள் அகற்றும் பணி

மேலும் மேலும் மாநகராட்சியின் சார்பில் சுவரொட்டிகளை அகற்றும் வகையில், நாள்தோறும் ஒவ்வொரு மண்டலத்திலும் பேருந்து செல்லும் ஐந்து சாலைகளைத் தேர்வுசெய்து, அங்கு ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் முழுவீச்சில் அகற்றப்படும் என்றார்.

அந்த வகையில், நேற்று (ஜூலை 9) ஒரே நாளில், சென்னையில் உள்ள 15 மண்டலங்களில், சுமார் 12,199 சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதில் வடசென்னை பகுதியில் உள்ள 5 மண்டலங்களில் 2,389 சுவரொட்டிகளும், மத்திய சென்னை பகுதியில் உள்ள 5 மண்டலங்களில் 5,237 சுவரொட்டிகளும், தென் சென்னை பகுதியில் உள்ள 5 மண்டலங்களில் 4,573 சுவரொட்டிகளும் அகற்றப்பட்டு உள்ளது. இதையடுத்து மீண்டும் சுவரொட்டிகள் ஒட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் ஒத்துழைப்பு

பொதுமக்கள் தங்கள் பகுதிக்குள்பட்ட பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தால், அது குறித்த தகவல்களை மாநகராட்சியின் 1913 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகாராகத் தெரிவிக்கலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

மேலும் மாநகராட்சியின் இந்த நடவடிக்கைகளுக்குப் பொதுமக்கள் தங்களின் முழு ஒத்துழைப்பை வழங்கி, சென்னை மாநகரைச் சுத்தமாகவும், அழகாகவும் பராமரிக்கும் வகையில் பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என சென்னை மாநகராட்சி சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அதிமுக முன்னாள் எம்எல்ஏ-க்கள் கட்சியிலிருந்து நீக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.