ETV Bharat / state

சென்னை விமான நிலையத்தில் கட்டுமான பணியாளர் உயிரிழப்பு

சென்னை விமான நிலையத்தில் அஸ்ஸாமைச் சேர்ந்த கட்டுமான பணியாளர் ஒருவர் உயிரிழந்தார். இயற்கை உபாதை கழிக்கச் சென்றபோது இந்தத் துயரம் நேர்ந்துள்ளது.

author img

By

Published : Nov 20, 2021, 1:08 PM IST

c
c

சென்னை விமான நிலையத்தில் நடைபெற்றுவரும் கட்டுமான பணியில், அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த தீபக் பவுல் (34) பணிபுரிந்துவந்தார். இவர் நேற்று (நவம்பர் 19) பணியில் இருந்தபோது வலிப்பு ஏற்பட்டது. இதையடுத்து தீபக்கை அங்கிருந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற தீபக் இன்று அதிகாலை அஸ்ஸாம் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் இயற்கை உபாதை கழிப்பதற்காகச் சென்றபோது மீண்டும் வலிப்பு ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார்.

c
உயிரிழந்த தீபக் பவுல்

இது குறித்து விமான நிலைய அலுவலர்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டது. பின்னர் அங்கு வந்த விமான நிலைய மருத்துவக் குழுவினர் தீபக்கை பரிசோதித்துப் பார்த்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

பின் இது குறித்து தகவலறிந்த விமான நிலைய காவல் துறையினர் தீபக்கின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: சார்ஜாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்தவர் மாயம் - பரிதவித்து நிற்கும் குடும்பம்

சென்னை விமான நிலையத்தில் நடைபெற்றுவரும் கட்டுமான பணியில், அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த தீபக் பவுல் (34) பணிபுரிந்துவந்தார். இவர் நேற்று (நவம்பர் 19) பணியில் இருந்தபோது வலிப்பு ஏற்பட்டது. இதையடுத்து தீபக்கை அங்கிருந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற தீபக் இன்று அதிகாலை அஸ்ஸாம் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் இயற்கை உபாதை கழிப்பதற்காகச் சென்றபோது மீண்டும் வலிப்பு ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார்.

c
உயிரிழந்த தீபக் பவுல்

இது குறித்து விமான நிலைய அலுவலர்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டது. பின்னர் அங்கு வந்த விமான நிலைய மருத்துவக் குழுவினர் தீபக்கை பரிசோதித்துப் பார்த்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

பின் இது குறித்து தகவலறிந்த விமான நிலைய காவல் துறையினர் தீபக்கின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: சார்ஜாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்தவர் மாயம் - பரிதவித்து நிற்கும் குடும்பம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.