ETV Bharat / state

உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் காலி பணியிடங்களுக்கு இன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

author img

By

Published : Nov 15, 2019, 4:30 PM IST

-professor-job

கல்லூரிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 2 ஆயிரத்து 331 (2,331) உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இந்தப் பணியிடங்களுக்கு, அக்டோபர் 4ஆம் தேதி முதல் நவம்பர் 15ஆம் தேதி வரை, ’www.trb.tn.nic.in’ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும், சான்றிதழ் சரிபார்க்கும் தேதி மற்றும் இடம், பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் லதா இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர் காலிப்பணியிடங்களுக்கு இன்று மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். இன்று மதியம் 12 மணி வரை 44 ஆயிரத்து 667 விண்ணப்பதாரர்கள் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 33 ஆயிரத்து 128 விண்ணப்பதாரர்கள் மட்டும் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தினை சமர்ப்பித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பணி அனுபவச் சான்றிதழ்கள் பெற்றிராத விண்ணப்பதாரர்கள் இம்மாத இறுதிக்குள் சான்றிதழ்களைப் பெற்றுத் தயாராக வைத்துக்கொள்ளவேண்டும்.சான்றிதழ் பதிவேற்றம் செய்வதற்குரிய தேதி விபரம், விண்ணப்பதாரர்களின் செல்ஃபோன் எண்ணிற்கு எஸ்.எம்.எஸ் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கப்படும். மேலும், கல்வியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிப்பவர்களிடமிருந்து கூடுதல் விபரங்கள் தேவைப்படுவதால், அதைப்பதிவு செய்ய டிசம்பர் முதல் வாரத்தில் வாய்ப்பு வழங்கப்படும்” என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: டீச்சர் எங்களவிட்டு போகாதீங்க - கேரளாவில் ஒரு பாசப்போராட்டம்

கல்லூரிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 2 ஆயிரத்து 331 (2,331) உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இந்தப் பணியிடங்களுக்கு, அக்டோபர் 4ஆம் தேதி முதல் நவம்பர் 15ஆம் தேதி வரை, ’www.trb.tn.nic.in’ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும், சான்றிதழ் சரிபார்க்கும் தேதி மற்றும் இடம், பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் லதா இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர் காலிப்பணியிடங்களுக்கு இன்று மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். இன்று மதியம் 12 மணி வரை 44 ஆயிரத்து 667 விண்ணப்பதாரர்கள் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 33 ஆயிரத்து 128 விண்ணப்பதாரர்கள் மட்டும் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தினை சமர்ப்பித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பணி அனுபவச் சான்றிதழ்கள் பெற்றிராத விண்ணப்பதாரர்கள் இம்மாத இறுதிக்குள் சான்றிதழ்களைப் பெற்றுத் தயாராக வைத்துக்கொள்ளவேண்டும்.சான்றிதழ் பதிவேற்றம் செய்வதற்குரிய தேதி விபரம், விண்ணப்பதாரர்களின் செல்ஃபோன் எண்ணிற்கு எஸ்.எம்.எஸ் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கப்படும். மேலும், கல்வியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிப்பவர்களிடமிருந்து கூடுதல் விபரங்கள் தேவைப்படுவதால், அதைப்பதிவு செய்ய டிசம்பர் முதல் வாரத்தில் வாய்ப்பு வழங்கப்படும்” என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: டீச்சர் எங்களவிட்டு போகாதீங்க - கேரளாவில் ஒரு பாசப்போராட்டம்

Intro:கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு
மாலை 5 மணி வரை மட்டுமே விண்ணப்பம்


Body:கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு
மாலை 5 மணி வரை மட்டுமே விண்ணப்பம்

சென்னை,

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் காலி பணியிடங்களுக்கு இன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

கல்லூரிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2331 உதவி விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

இந்த பணியிடத்திற்கு அக்டோபர் 4 ஆம் தேதி முதல் நவம்பர் 15 ந் தேதி மாலை 5 மணி வரை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் தேதி மற்றும் இடம் பின்னர் அறிவிக்கப்படும் என ஏற்கனவே ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் லதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு இன்று மாலை 5 மணி வரை விண்ணப்பம் செய்யலாம்.
இன்று மதியம் 12 மணி வரை 44 ஆயிரத்து 667 விண்ணப்பதாரர்கள் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 33 ஆயிரத்து 128 விண்ணப்பதாரர்கள் மட்டுமே உரிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தினை சமர்ப்பித்துள்ளனர்.

எனவே வேலை தேடுபவர்கள் இன்று மாலை 5 மணியுடன் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு முடிவடைகிறது. அதன் பிறகு புதிதாக யாரும் விண்ணப்பிக்க முடியாது. ஏற்கனவே விண்ணப்பித்தவர்களுக்கு மட்டும் முன் அனுபவ சான்றிதழ் பெற கால தாமதம் ஏற்படுவதை கருத்தில்கொண்டு பணி அனுபவ சான்றிதழ் மற்றும் பதிவேற்றம் செய்திட பின்னர் வாய்ப்பு வழங்கப்படும்.
எனது பணி அனுபவம் சான்றுகளை பெறமுடியாத விண்ணப்பதாரர்கள் இந்த மாத இறுதிக்குள் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கையொப்பமிட்ட சான்றிதழ்களை பெற்று தயாராக வைத்துக்கொள்ளவேண்டும்.

சான்றிதழ் பதிவேற்றம் செய்வதற்குரிய தேதிகளை விண்ணப்பதாரர்களின் செல்போன் எண்ணிற்கு எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் அனுப்பிவைக்கும். அதன்பிறகு எந்த வாய்ப்பும் வழங்கப்பட மாட்டாது.

மேலும் கல்வியியல் கல்லூரிகளில் வேலைக்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து மேலும் சில கூடுதல் விபரங்கள் தேவைப்படுகிறது. அந்த விபரங்களை பதிவு செய்ய டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் வாய்ப்பு வழங்கப்படும். கூடுதலாக ஆசிரியர் தேர்வு வாரியம் கேட்ட விபரங்களை ஆன்லைன் விண்ணப்பத்தில் ஏற்கனவே பதிவு செய்தவர்கள் மீண்டும் பதிவு செய்திட கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். அவர்கள் கூடுதலாக பதிவு செய்ய வேண்டிய விபரங்கள் குறித்து அவர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டு உள்ளது என அதில் கூறியுள்ளார்.



பல்வேறு தரப்பினரிடமிருந்து கால நீட்டிப்பு செய்ய வேண்டிய ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கோரிக்கைகள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் காலத்தை நீட்டிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. தற்போது விண்ணப்பங்களை நவம்பர் 15 ஆம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்திட கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.


தேர்வர்களின் ஆசிரியர் பயிற்சி பணி அனுபவத்திற்கு 15 மதிப்பெண்களும், கல்வித் தகுதிக்கு 9 மதிப்பெண்களும், அவர்களுக்கு நேர்காணலின்போது 10 மதிப்பெண்கள் 34 மதிப்பெண்கள் அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.