ETV Bharat / state

தமிழில் அறிவிப்பு செய்வது சலுகை இல்லை; உரிமை - தங்கர் பச்சான் - விமான நிலையம்

விமான நிலையங்களிலும் விமானத்திலும் தமிழில் அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என இயக்குநர் தங்கர் பச்சான் வலியுறுத்தியுள்ளார்.

thankar bachan
author img

By

Published : Sep 17, 2019, 7:20 PM IST

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, "இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னையிலிருந்து மதுரைக்கு விமானத்தில் பயணம் செய்து திரும்பிய நிகழ்வு பெரும் வேதனையை அளித்தது.

தமிழ்நாட்டின் எந்த ஊருக்கும் விமானத்தில் பயணித்தாலும் விமான நிலையத்தை கடந்து வெளியேறும்வரை வேற்று நாட்டிலோ, வேற்று மாநிலத்திலோ இருப்பது போலவே நான் உணர்கிறேன்.

தமிழ்நாட்டிற்குள் விமானத்தில் பயணிப்பவர்களில் நூற்றுக்கு தொண்ணூறு பேர் தமிழைப் பேசுபவர்களாகவும் தாய் மொழியாகக் கொண்டவர்களாகவும் இருந்தும் எந்த ஒரு அறிவிப்பும் தமிழில் செய்வதில்லை. மாறாக பெரும்பாலானோருக்கு விளங்காத இந்தியிலும் ஆங்கிலத்திலுமே அறிவிப்பு செய்து கொண்டிருக்கிறார்கள். இதனால் பயணிகளுக்கு அவர்கள் என்ன கூறுகின்றனர் என்பது விளங்கவில்லை.

இது குறித்து நான் ஏற்கனவே கண்டித்துள்ளேன். இந்தப் பயணத்தின்போதும் இது குறித்து விமான பணிப்பெண்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே அறிவிப்பு செய்ய ஆணை பிறப்பித்திருக்கிறார்கள் எனப் பதில் சொன்னார்கள்.

சென்னை சென்டரல் ரயில் நிலையத்தின் பெயரை மாற்றிய பிரதமர் அப்போது விமானங்களிலும் தமிழில் அறிவிப்பு செய்யப்படும் என்று கூறினார். ஆனால் இன்றுவரை அது செயல்படுத்தப்படவில்லை.

பிரிட்டிஷ் விமானத்திலும் ஏர் ஃபிரான்ஸ் விமானத்திலும் தமிழில் அறிவிப்பு செய்யும்போது கோவை, மதுரை, திருச்சி ஊர்களுக்கு செல்லும் விமானம் இந்தி, ஆங்கிலத்தில் அறிவிப்பு செய்வது ஏன்?

மக்களவையில் தமிழ்நாட்டு உறுப்பினர்கள் பதிவியேற்பின்போது தமிழில் பதவியேற்றனர். சில தினங்களாக இந்தி திணிப்புக்கு எதிராக அனைத்து அரசியில் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து போராட இருப்பதாக தெரிவித்தனர்.

இவர்கள் முதலில் தமிழ்நாட்டில் வந்து செல்லும் விமானங்களில் தமிழில் அறிவிப்பு செய்யும்வரை அப்படிப்பட்ட விமானங்களில் பயணம் செய்ய மாட்டோம் என அறிவிக்க வேண்டும்.

தமிழில் அறிவிப்பு செய்யச் சொல்லி மத்திய அரசிடம் கேட்பது சலுகை அல்ல; உரிமை என்பதை இனியாவது அனைவரும் உணருங்கள்" எனத் தெரிவித்திருந்தார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, "இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னையிலிருந்து மதுரைக்கு விமானத்தில் பயணம் செய்து திரும்பிய நிகழ்வு பெரும் வேதனையை அளித்தது.

தமிழ்நாட்டின் எந்த ஊருக்கும் விமானத்தில் பயணித்தாலும் விமான நிலையத்தை கடந்து வெளியேறும்வரை வேற்று நாட்டிலோ, வேற்று மாநிலத்திலோ இருப்பது போலவே நான் உணர்கிறேன்.

தமிழ்நாட்டிற்குள் விமானத்தில் பயணிப்பவர்களில் நூற்றுக்கு தொண்ணூறு பேர் தமிழைப் பேசுபவர்களாகவும் தாய் மொழியாகக் கொண்டவர்களாகவும் இருந்தும் எந்த ஒரு அறிவிப்பும் தமிழில் செய்வதில்லை. மாறாக பெரும்பாலானோருக்கு விளங்காத இந்தியிலும் ஆங்கிலத்திலுமே அறிவிப்பு செய்து கொண்டிருக்கிறார்கள். இதனால் பயணிகளுக்கு அவர்கள் என்ன கூறுகின்றனர் என்பது விளங்கவில்லை.

இது குறித்து நான் ஏற்கனவே கண்டித்துள்ளேன். இந்தப் பயணத்தின்போதும் இது குறித்து விமான பணிப்பெண்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே அறிவிப்பு செய்ய ஆணை பிறப்பித்திருக்கிறார்கள் எனப் பதில் சொன்னார்கள்.

சென்னை சென்டரல் ரயில் நிலையத்தின் பெயரை மாற்றிய பிரதமர் அப்போது விமானங்களிலும் தமிழில் அறிவிப்பு செய்யப்படும் என்று கூறினார். ஆனால் இன்றுவரை அது செயல்படுத்தப்படவில்லை.

பிரிட்டிஷ் விமானத்திலும் ஏர் ஃபிரான்ஸ் விமானத்திலும் தமிழில் அறிவிப்பு செய்யும்போது கோவை, மதுரை, திருச்சி ஊர்களுக்கு செல்லும் விமானம் இந்தி, ஆங்கிலத்தில் அறிவிப்பு செய்வது ஏன்?

மக்களவையில் தமிழ்நாட்டு உறுப்பினர்கள் பதிவியேற்பின்போது தமிழில் பதவியேற்றனர். சில தினங்களாக இந்தி திணிப்புக்கு எதிராக அனைத்து அரசியில் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து போராட இருப்பதாக தெரிவித்தனர்.

இவர்கள் முதலில் தமிழ்நாட்டில் வந்து செல்லும் விமானங்களில் தமிழில் அறிவிப்பு செய்யும்வரை அப்படிப்பட்ட விமானங்களில் பயணம் செய்ய மாட்டோம் என அறிவிக்க வேண்டும்.

தமிழில் அறிவிப்பு செய்யச் சொல்லி மத்திய அரசிடம் கேட்பது சலுகை அல்ல; உரிமை என்பதை இனியாவது அனைவரும் உணருங்கள்" எனத் தெரிவித்திருந்தார்.

Intro:நாங்கள் கேட்பது சலுகை அல்ல உரிமைBody:திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான் விமான நிலையங்களில் தமிழில் அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி பத்திரிகை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த செய்தியில்

2 நாட்களுக்கு முன் சென்னையிலிருந்து மதுரைக்கு விமானத்தில் பயணம் செய்து திரும்பிய நிகழ்வு பெரும் வேதனையை அளித்தது. தமிழகத்தின் எந்த ஊர்களுக்கு விமானத்தில் பயணித்தாலும் விமான நிலையத்தின் வெளி வாயிலைக்கடந்து வெளியேறும்வரை ஏதோ வேற்று நாட்டிலோ, வேற்று மாநிலத்திலோ இருப்பது போலவே நான் உணர்கிறேன்.
தமிழகத்திற்குள் விமானத்தில் பயணிப்பவர்களில் நூற்றுக்கு தொண்ணூறு பேர் தமிழைப் பேசுபவர்களாகவும், தாய் மொழியாகக் கொண்டவர்களாகவும் இருந்தும் எந்த ஒரு அறிவிப்பும் தமிழில் செய்வதில்லை. மாறாக பெரும்பாலானோருக்கு விளங்காத இந்தியிலும், ஆங்கிலத்திலுமே அறிவிப்பு செய்து கொண்டிருக்கிறார்கள். பயணிப்பவர்களும் அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பது விளங்காமல் போனாலும் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் டெல்லி நாடாளுமன்றத்தில் தமிழக உறுப்பினர்கள் தாய்மொழிப் பற்றுடன் தமிழில் பேசி பதவி ஏற்றுக்கொண்டதை ஊடகங்களில் கண்டும், படித்தும் நாமெல்லாம் புளகாங்கிதம் அடைந்தோம். பலகட்சிகளில் உள்ள இத்தகைய அரசியல்வாதிகள்தான் சட்ட மன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், அமைச்சர்களாகவும், எதிர்க்கட்சிக் காரர்களாகவும் இருக்கிறார்கள். இவர்கள் ஒருவரும் இதுவரை விமானத்தில் அறிவிப்பு செய்ததை எதிர்த்து கண்டித்தது
ஆனால் பலமுறை நான் என் எதிர்ப்புகளை தெரிவித்திருக்கிறேன். நேற்றும் முன்பு போலவே தமிழில் அறிவிப்பு செய்யாததை எதிர்த்து காரணம் கேட்டேன். பணிப்பெண்கள் தமிழில் பேசுபவர்களாக இருந்தும் தங்களுக்கு இந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே அறிவிப்பு செய்ய ஆணை பிறப்பித்திருக்கிறார்கள் என பதில் சொன்னார்கள்.
ஒன்றரை மணி நேர பயணத்துக்கிடையில் அடிக்கடி திடீர் திடீரென பாதுகாப்பு எச்சரிக்கைகளை நமக்குப்புரியாத மொழிகளிலேயே அறிவிக்கிறார்கள். பெரும்பாலான பயணிகளுக்கு புரியும் தாய் மொழி தமிழிலும் அறிவிப்பைச் செய்தால் எந்த மாதிரியான இழப்பு ஏற்படும் என்பதை இந்த நிறுவனங்களும், அரசாங்கமும் நமக்கு விளக்க வேண்டிய கடமை இருக்கின்றது.
மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டு பல மாநிலங்கள் ஒன்று சேர்ந்து இந்திய ஒன்றியமாக இருந்து செயல் படுகின்ற நடுவண் அரசுக்கு அந்தந்த மாநிலங்களுக்கான மொழியையும், அதைச்சார்ந்த மக்களையும் மதித்து ஆட்சி செய்ய வேண்டிய கடமையும், அறமும் இருக்கின்றது. அதன் அடிப்படையில் இனியாவது தமிழகத்திற்குள் மற்றும் தமிழகத்திற்கு வந்து செல்லும் எந்த விமானமாக இருந்தாலும் தமிழிலும் அறிவிப்பு செய்வதை கட்டாயமாக்கும் ஆணையை உடனடியாக பிறப்பிக்க வேண்டும்.

சில மாதங்களுக்கு முன் பிரதமர் மோடி அவர்கள் தமிழகத்திற்கு வந்திருந்த பொழுது சென்னை மத்திய இரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரைச் சூட்டியதுடன் விமானங்களில் இனி தமிழிலும் அறிவிப்பு செய்ய நடவடிக்கை மேற்கொள்வதாக அறிவித்தார். நாம் அனைவரும் அதை எண்ணி மகிழ்ந்தோம். ஆனால் இன்றுவரை அது நிறைவேறவில்லை. பிரிட்டிஷ் விமானத்தில் இலண்டனிலும், ஏர் ப்ரான்ஸ் விமானத்தில் பாரிஸிலும் தமிழில் அறிவிப்பு செய்யும் பொழுது கோயம்புத்தூர்,மதுரை,திருச்சி,சேலம் போன்ற ஊர்களுக்கு செல்லும் விமானகளில் இந்தி,ஆங்கிலத்தில் அறிவிப்பு செய்வதும் அதை தமிழ் மக்களாகிய நாமெல்லாம் கண்டும் காணாமல் காதை மூடிக்கொண்டு பயணித்துக் கொண்டிருப்பதும் இன்னும் தொடரத்தான் வேண்டுமா என்பதே என் கேள்வி?
ஊடகங்களில் சில நாட்களாக ஏறக்குறைய தமிழகத்தின் அனைத்து அரசியல்வாதிகளும், தலைவர்களும் இந்தி திணிப்பு செய்தால் உயிரைக்கூட விடத்தயார் என எச்சரிக்கை விடுத்து போராடப்போவதாக கூறிக்கொண்டிருக்கிறார்கள். முதலில் இவர்கள் தமிழகம் மற்றும் தமிழகத்திற்கு வந்து செல்லும் விமானங்களில் தமிழில் அறிவிப்பு செய்யும் வரை அப்படிப்பட்ட விமானங்களில் பயணம் செய்ய மாட்டோம் என அறிவிக்க வேண்டும்.




Conclusion:நாம் தமிழில் அறிவிப்பு செய்யச் சொல்லி மத்திய அரசிடம் கேட்பது சலுகை அல்ல உரிமை என்பதை இனியாவது அனைவரும் உணருங்கள்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.