ETV Bharat / state

எதிரிகளை போல், துரோகிகளையும் ஒரு கை பார்க்கவேண்டும்: டிடிவி தினகரன்

author img

By

Published : Aug 4, 2019, 10:51 PM IST

திருவள்ளூர்: மக்கள் விரும்பாத, புறக்கணிக்கப்பட்ட கட்சியாக அதிமுக இன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

ttv dinakaran ammk function

திருவள்ளூர் மத்திய மாவட்ட அமமுக சார்பில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் அமமுகவில் இணையும் விழா பூந்தமல்லி வேலப்பன் சாவடியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டர். இந்நிகழ்ச்சியில் அதிமுக, பாமக, தேமுதிக, ரஜினி மக்கள் மன்றம் ஆகிய கட்சிகளை சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் டி.டி.வி. தினகரன் முன்னிலையில் அமமுகவில் இணைந்தனர். அப்போது தொண்டர்களால் அவருக்கு வீரவாள், ஜெயலலிதா உருவசிலை பரிசளிக்கப்பட்டது.

பின்னர் பேசிய டி.டி.வி தினகரன், "ஜெயலலிதா நம்மோடு இல்லை என்றாலும், அவருடைய திருவுருவத்தையும், திருப்பெயரையும், கொள்கைகளையும் தாங்கியிருக்கிற இயக்கமாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அவர்களால் உருவாக்கப்பட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருப்பார்கள் ஜெயலலிதாவையும், அவருடைய கொள்கையும் மறந்துவிட்டார்கள்.

அவர்கள் வகுத்து தந்த பாதையை விட்டு கட்சியையும், ஆட்சியையும் வேறு திசையில் அழைத்துச் செல்கிறார்கள் என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாகதெரியும். அவர்கள் மத்தியிலே ஆள்பவர்களின் துணையோடு ஆட்சியும், கட்சியையும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் விரும்பாத, மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஒரு கட்சியாக அதிமுக இன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

டி.டி.வி.தினகரன் பேச்சு

நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தோல்வியடைந்த பிறகு இயக்கம் அழிந்துவிடும் என்று சில நிர்வாகிகள் விலகி செல்கிறார்கள். இவர்கள் சுயநலத்திற்காக கட்சியை விட்டு விலகிச்செல்கின்றனர். ஆனால் உண்மையான தொண்டர்கள் கட்சியில் தான் இருக்கிறார்கள். வேலூர் தேர்தலை கண்டு அமமுக பயந்து விட்டது என்று பேசுகிறார்கள். கட்சியை பதிவு செய்யும் வேலையில் உள்ளோம் கட்சியை பதிவு செய்து, சின்னத்தை பெற்றபின் அடுத்து எந்த தேர்தல் வந்தாலும் நாம் போட்டியிடுவோம்.

இந்த தேர்தல் தோல்வி எப்படி ஏற்பட்டது என்பது உங்களுக்கு தெரியும்.ச வருங்காலத்தில் நாம் எல்லா தேர்தலிலும் வெற்றி பெறுவோம் என்பது உறுதி. எதிரிகளை போல் துரோகிகளையும் ஒரு கை பார்க்க வேண்டும்"என்று தெரிவித்தார்.

திருவள்ளூர் மத்திய மாவட்ட அமமுக சார்பில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் அமமுகவில் இணையும் விழா பூந்தமல்லி வேலப்பன் சாவடியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டர். இந்நிகழ்ச்சியில் அதிமுக, பாமக, தேமுதிக, ரஜினி மக்கள் மன்றம் ஆகிய கட்சிகளை சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் டி.டி.வி. தினகரன் முன்னிலையில் அமமுகவில் இணைந்தனர். அப்போது தொண்டர்களால் அவருக்கு வீரவாள், ஜெயலலிதா உருவசிலை பரிசளிக்கப்பட்டது.

பின்னர் பேசிய டி.டி.வி தினகரன், "ஜெயலலிதா நம்மோடு இல்லை என்றாலும், அவருடைய திருவுருவத்தையும், திருப்பெயரையும், கொள்கைகளையும் தாங்கியிருக்கிற இயக்கமாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அவர்களால் உருவாக்கப்பட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருப்பார்கள் ஜெயலலிதாவையும், அவருடைய கொள்கையும் மறந்துவிட்டார்கள்.

அவர்கள் வகுத்து தந்த பாதையை விட்டு கட்சியையும், ஆட்சியையும் வேறு திசையில் அழைத்துச் செல்கிறார்கள் என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாகதெரியும். அவர்கள் மத்தியிலே ஆள்பவர்களின் துணையோடு ஆட்சியும், கட்சியையும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் விரும்பாத, மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஒரு கட்சியாக அதிமுக இன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

டி.டி.வி.தினகரன் பேச்சு

நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தோல்வியடைந்த பிறகு இயக்கம் அழிந்துவிடும் என்று சில நிர்வாகிகள் விலகி செல்கிறார்கள். இவர்கள் சுயநலத்திற்காக கட்சியை விட்டு விலகிச்செல்கின்றனர். ஆனால் உண்மையான தொண்டர்கள் கட்சியில் தான் இருக்கிறார்கள். வேலூர் தேர்தலை கண்டு அமமுக பயந்து விட்டது என்று பேசுகிறார்கள். கட்சியை பதிவு செய்யும் வேலையில் உள்ளோம் கட்சியை பதிவு செய்து, சின்னத்தை பெற்றபின் அடுத்து எந்த தேர்தல் வந்தாலும் நாம் போட்டியிடுவோம்.

இந்த தேர்தல் தோல்வி எப்படி ஏற்பட்டது என்பது உங்களுக்கு தெரியும்.ச வருங்காலத்தில் நாம் எல்லா தேர்தலிலும் வெற்றி பெறுவோம் என்பது உறுதி. எதிரிகளை போல் துரோகிகளையும் ஒரு கை பார்க்க வேண்டும்"என்று தெரிவித்தார்.

Intro:மத்தியிலே ஆள்பவர்கள் துணையோடு இந்த ஆட்சியும், கட்சியையும் ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் விரும்பாத ஒரு ஆட்சியும் மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஒரு கட்சியாக அதிமுகவும் இன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது மாற்று கட்சியினர் அமமுகவில் இனையும் விழாவில் டி.டி.வி.தினகரன் பேச்சு.
Body:திருவள்ளூர் மத்திய மாவட்ட அமமுக சார்பில் அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., ரஜினி மக்கள் மன்றம் ஆகிய மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் அமமுகவில் இணையும் விழா வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் மண்டபத்தில் மாவட்ட செயலாளர் லக்கி முருகன் தலைமையில் நடைபெற்றது. இதில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் முன்னிலையில் மாற்று கட்சியை சேர்ந்த 2 ஆயிரம் பேர் அமமுகவில் இனைத்து கொண்டனர். இதில் வீர வாள், ஜெயலலிதா உருவ சிலை உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது.
Conclusion:இதையடுத்து டி.டி.வி.தினகரன் பேசுகையில் : இந்த திருமண மண்டபம் என்றாலே ஜெயலலிதா அவர்கள் பொதுக்குழுவை பல ஆண்டுகள் இங்கு நடத்தியது நம் அனைவருக்கும் தெரியும் கட்சியின் பொறுப்புகளில் நான் இருந்த போது இங்கு நடந்த பொதுக் குழுவில் நானும் பலமுறை கலந்து கொண்டிருக்கிறேன்.
ஜெயலலிதா நம்மோடு இல்லை என்றாலும் அவருடைய திருவுருவத்தையும், திருப்பெயரையும், கொள்கைகளையும் தாங்கியிருக்கிற இயக்கமாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அவர்களால் உருவாக்கப்பட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருப்பார்கள் ஜெயலலிதாவையும், அவருடைய கொள்கையும் மறந்துவிட்டார்கள். அவர்கள் வகுத்து தந்த பாதையை விட்டு கட்சியையும், ஆட்சியையும் வேறு திசையில் அழைத்துச் செல்கிறார்கள் என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும். அவர்கள் மத்தியிலே ஆள்பவர்கள் துணையோடு இந்த ஆட்சியும், கட்சியையும் ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் விரும்பாத ஒரு ஆட்சி மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஒரு கட்சியாக அதிமுகவும் இன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த ஆட்சியும் ஜெயலலிதாவின் பெயரைச் சொல்லி மக்கள் விரும்பாத ஆட்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பாராளுமன்றத் தேர்தலில் நாம் தோல்வியுற்றாலும் அதற்குப் பிறகு இந்த இயக்கம் அழிந்துவிடும் என்று நிர்வாகிகள் சிலர் விலகி செல்கிறார்கள். என்றெல்லாம் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் தினமும் ஒருவரை தங்கள் கட்சிக்கு இழுக்கின்ற வேலையில் ஈடுபட்டு வருகின்றனர் சிலர் இந்த இயக்கத்தை விட்டு சென்றிருக்கலாம் அவர்கள் சென்றதால் இந்த இயக்கத்திற்கு ஏதாவது சேதாரம் இருக்கிறதா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும் பதவியில் இருந்தவர்கள் சென்றார்கள். தொண்டர்கள் யாராவது சென்றார்களா சுயநலத்திற்காக சென்றுவிட்டார்கள் கட்சியும், ஆட்சியும் மீட்டெடுக்க வந்தவர்கள் போல் காட்டிக் கொண்டார்கள். இந்த பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு ஓடி விட்டார்கள் என்பதுதான் உண்மை, உண்மையான தொண்டர்கள் இங்குதான் இருக்கிறார்கள். முன்பு இருந்ததை விட திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டம் எழுச்சியாக உள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில் பதவி தருகிறேன் என்று பல்வேறு ஆசைவார்த்தைகள் கூறி இழுத்து வருகின்றனர். வேலூர் தேர்தலை கண்டு அமமுக பயந்து விட்டது என்று பேசுகிறார்கள் கட்சியை பதிவு செய்யும் வேலையில் உள்ளோம் பதிவு பெற்ற கட்சியாகவும், சின்னத்தை பெற்று எந்த தேர்தல் வந்தாலும் நாம் போட்டியிடுவோம் இந்த தேர்தல் தோல்வி எப்படி ஏற்பட்டது என்பது உங்களுக்கு தெரியும், வருங்காலத்தில் நாம் எல்லா தேர்தலிலும் வெற்றி பெறுவோம் என்பது உறுதி, அதிமுகவுடன், அமமுகவினருக்கு எந்த தொடர்பும் இல்லை, நக்குத் திமுக எதிரியை போல் துரோகிகளையும் ஒரு கை பார்க்க வேண்டும் என்று தெரிவித்தார். உடன் முன்னாள் எம்.எல்.ஏ.வெற்றிவேல், சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.