ETV Bharat / state

அம்பத்தூரில் ரவுடிகள் அடாவடி: மாவுக்கட்டு போட்டு கட்டுக்குள் வைத்த காவல் துறை!

அம்பத்தூரில் சில நாள்களாக ஐந்துக்கும் மேற்பட்ட பொதுமக்களை வெட்டி அடவாடி செய்துவந்த இரண்டு ரவுடிகளை அப்பகுதி காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

author img

By

Published : Feb 8, 2022, 1:54 PM IST

அம்பத்தூரில் ரவுடிகள் அடாவடி; மாவுகட்டு போட்டு கட்டுக்குள் வைத்த காவல் துறை!
அம்பத்தூரில் ரவுடிகள் அடாவடி; மாவுகட்டு போட்டு கட்டுக்குள் வைத்த காவல் துறை!

சென்னை:சென்னை அம்பத்தூரை அடுத்த சண்முகபுரம் பகுதியில் கட்டட வேலை செய்துவருபவர் மாணிக்கம் (53), அவர் பிப்ரவரி 6 அன்று நாய்களுக்கு பிஸ்கட் வாங்க அருகிலுள்ள கடைக்கு வந்துள்ளார். அப்போது ஆட்டோவில் வந்த இருவர் தங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டிருந்தனர். இதனைக் கண்டு சமாதானம் செய்யச் சென்றுள்ளார்.

அப்பொழுது சண்டையிட்டுக் கொண்டிருந்த இருவரும் தாங்கள் மறைத்துவைத்திருந்த கத்தியால் மாணிக்கத்தைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் மாணிக்கத்திற்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து ஆட்டோவில் வந்த இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். போகும் வழியில் அதே பகுதியில் உள்ள திமுக பிரமுகர் ஸ்ரீராம் என்பவரின் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடியை அடித்து நொறுக்கியுள்ளனர்.

இதேபோன்று புண்ணிய குமார் (50) என்பவரையும் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் அவருக்கு வலது காலில் வெட்டு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அங்கிருந்த பிரபாகரன் (30) என்பவரையும், வினோத் குமார் (35) என்பவரையும் வெட்டியுள்ளார்கள். இதில் அவருக்கு வலது, இடது கைகளில் வெட்டு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்பத்தூர் காவல் துறை விசாரணை மேற்கொண்டனர்.

காவல் துறைக்குக் கிடைத்த தகவல்!

இந்த நிலையில் வில்லிவாக்கம் சிட்கோ நகர்ப் பகுதியில் இருவர் கத்தியுடன் சுற்றுவதாக அம்பத்தூர் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது, சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த வில்லிவாக்கம் காவல் துறையினர் துரத்தி ஒருவரை மடக்கிப் பிடித்து, மற்றொரு ரவுடி தப்பி ஓடிவிட்டார்.

பிடிபட்ட ரவுடியிடம் விசாரணை செய்ததில் அம்பத்தூர் கள்ளிக்குப்பம் அருள் நகர் முருகம்பேடு பகுதியைச் சேர்ந்த கணேசன் என்கின்ற கணேஷ் குமார் என்பதும், இவர் மீது அம்பத்தூர் காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி போன்ற வழக்குகள் பல நிலுவையில் உள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

தப்பி ஓடிய மற்றொரு ரவுடி ரேசர் கணேசன் என்பவர் மீது பட்டாபிராம் திருநின்றவூர் வில்லிவாக்கம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் இவர்கள் அப்பகுதி சரித்திர பதிவேடு குற்றவாளிகள்.

பிடிபட்ட நபரிடம் நடத்திய விசாரணையில் அம்பத்தூர் பகுதியில் பொதுமக்களை வெட்டியது இருவர்தான் எனவும் தெரியவந்துள்ளது. ரவுடி ஒருவரைக் கைதுசெய்துள்ள நிலையில் தப்பி ஓடிய ரவுடி ரேசர் கணேஷை காவல் துறையினர் தேடிவந்தனர்.

தப்பி ஓடிய ரவுடி கால் ஒடிந்த நிலையில் பிடிபட்டார்!

இந்நிலையில் தப்பி ஓடிய ரேசர் கணேசனை அம்பத்தூர் தனிப்படை காவல் துறை தீவிரமாகத் தேடிவந்தது. இந்நிலையில் நேற்று காவல் துறையினருக்கு ரவுடி ரேசர் கணேசன் புழல் அருகே பதுங்கி இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து காவல் துறையினர் அங்குப் பதுங்கி இருந்த ரவுடி ரேசர் கணேசனைப் பிடிக்க முயன்றனர், அவர்களிடம் சிக்காமல் இருக்க அங்கிருந்து தப்பி ஓட்டியுள்ளார்.

இதில் அவரது இடது கால் முறிவு ஏற்பட்டது. இதன் பின்னர் அவரைக் கைதுசெய்து மருத்துவமனைக்கு அனுப்பி மாவுக்கட்டுப் போட்டுக் காவல் நிலையம் அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இரண்டு ரவுடிக்கும் மாவுக்கட்டு

சம்பவத்தில் தொடர்புடைய ஒருவர் வில்லிவாக்கம் காவல் துறையால் கைதுசெய்யப்பட்டு கையில் மாவு கட்டுப் போடப்பட்டது. இதனைத் தொடர்ந்து அம்பத்தூரில் ஒருவர் பிடிக்கப்பட்டு காலில் மாவுக்கட்டு போடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னை புறநகர்ப் பகுதிகளில் ரவுடிஸம் செய்யும் நபர்கள் நன்கு கவனிக்கப்பட்டு மாவுக்கட்டு போடப்படும் எனக் காவல் துறை எச்சரிக்கைவிடுத்துள்ளது. பொதுமக்களை அச்சுறுத்தித் தாக்குதலில் ஈடுபட்ட இரண்டு ரவுடிகள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது அப்பகுதி மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 'அந்த பயம் இருக்கட்டும்...' - ஏடிஎஸ்பிக்கு பயந்து சரணடைந்த ரவுடிகள்!

சென்னை:சென்னை அம்பத்தூரை அடுத்த சண்முகபுரம் பகுதியில் கட்டட வேலை செய்துவருபவர் மாணிக்கம் (53), அவர் பிப்ரவரி 6 அன்று நாய்களுக்கு பிஸ்கட் வாங்க அருகிலுள்ள கடைக்கு வந்துள்ளார். அப்போது ஆட்டோவில் வந்த இருவர் தங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டிருந்தனர். இதனைக் கண்டு சமாதானம் செய்யச் சென்றுள்ளார்.

அப்பொழுது சண்டையிட்டுக் கொண்டிருந்த இருவரும் தாங்கள் மறைத்துவைத்திருந்த கத்தியால் மாணிக்கத்தைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் மாணிக்கத்திற்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து ஆட்டோவில் வந்த இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். போகும் வழியில் அதே பகுதியில் உள்ள திமுக பிரமுகர் ஸ்ரீராம் என்பவரின் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடியை அடித்து நொறுக்கியுள்ளனர்.

இதேபோன்று புண்ணிய குமார் (50) என்பவரையும் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் அவருக்கு வலது காலில் வெட்டு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அங்கிருந்த பிரபாகரன் (30) என்பவரையும், வினோத் குமார் (35) என்பவரையும் வெட்டியுள்ளார்கள். இதில் அவருக்கு வலது, இடது கைகளில் வெட்டு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்பத்தூர் காவல் துறை விசாரணை மேற்கொண்டனர்.

காவல் துறைக்குக் கிடைத்த தகவல்!

இந்த நிலையில் வில்லிவாக்கம் சிட்கோ நகர்ப் பகுதியில் இருவர் கத்தியுடன் சுற்றுவதாக அம்பத்தூர் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது, சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த வில்லிவாக்கம் காவல் துறையினர் துரத்தி ஒருவரை மடக்கிப் பிடித்து, மற்றொரு ரவுடி தப்பி ஓடிவிட்டார்.

பிடிபட்ட ரவுடியிடம் விசாரணை செய்ததில் அம்பத்தூர் கள்ளிக்குப்பம் அருள் நகர் முருகம்பேடு பகுதியைச் சேர்ந்த கணேசன் என்கின்ற கணேஷ் குமார் என்பதும், இவர் மீது அம்பத்தூர் காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி போன்ற வழக்குகள் பல நிலுவையில் உள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

தப்பி ஓடிய மற்றொரு ரவுடி ரேசர் கணேசன் என்பவர் மீது பட்டாபிராம் திருநின்றவூர் வில்லிவாக்கம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் இவர்கள் அப்பகுதி சரித்திர பதிவேடு குற்றவாளிகள்.

பிடிபட்ட நபரிடம் நடத்திய விசாரணையில் அம்பத்தூர் பகுதியில் பொதுமக்களை வெட்டியது இருவர்தான் எனவும் தெரியவந்துள்ளது. ரவுடி ஒருவரைக் கைதுசெய்துள்ள நிலையில் தப்பி ஓடிய ரவுடி ரேசர் கணேஷை காவல் துறையினர் தேடிவந்தனர்.

தப்பி ஓடிய ரவுடி கால் ஒடிந்த நிலையில் பிடிபட்டார்!

இந்நிலையில் தப்பி ஓடிய ரேசர் கணேசனை அம்பத்தூர் தனிப்படை காவல் துறை தீவிரமாகத் தேடிவந்தது. இந்நிலையில் நேற்று காவல் துறையினருக்கு ரவுடி ரேசர் கணேசன் புழல் அருகே பதுங்கி இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து காவல் துறையினர் அங்குப் பதுங்கி இருந்த ரவுடி ரேசர் கணேசனைப் பிடிக்க முயன்றனர், அவர்களிடம் சிக்காமல் இருக்க அங்கிருந்து தப்பி ஓட்டியுள்ளார்.

இதில் அவரது இடது கால் முறிவு ஏற்பட்டது. இதன் பின்னர் அவரைக் கைதுசெய்து மருத்துவமனைக்கு அனுப்பி மாவுக்கட்டுப் போட்டுக் காவல் நிலையம் அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இரண்டு ரவுடிக்கும் மாவுக்கட்டு

சம்பவத்தில் தொடர்புடைய ஒருவர் வில்லிவாக்கம் காவல் துறையால் கைதுசெய்யப்பட்டு கையில் மாவு கட்டுப் போடப்பட்டது. இதனைத் தொடர்ந்து அம்பத்தூரில் ஒருவர் பிடிக்கப்பட்டு காலில் மாவுக்கட்டு போடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னை புறநகர்ப் பகுதிகளில் ரவுடிஸம் செய்யும் நபர்கள் நன்கு கவனிக்கப்பட்டு மாவுக்கட்டு போடப்படும் எனக் காவல் துறை எச்சரிக்கைவிடுத்துள்ளது. பொதுமக்களை அச்சுறுத்தித் தாக்குதலில் ஈடுபட்ட இரண்டு ரவுடிகள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது அப்பகுதி மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 'அந்த பயம் இருக்கட்டும்...' - ஏடிஎஸ்பிக்கு பயந்து சரணடைந்த ரவுடிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.