ETV Bharat / state

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் எப்போது? - மார்ச்.10-ல் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு!

author img

By

Published : Mar 6, 2023, 1:00 PM IST

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்துவது குறித்து வரும் 10ஆம் தேதி அக்கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தி, பின்னர் அதை பொதுக்குழு மூலம் தீர்மானமாக நிறைவேற்றி தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

CHE
CHE

சென்னை: அதிமுகவின் உச்சபட்ச அதிகாரமாக பொதுச்செயலாளர் பதவி உள்ளது. ஏற்கனவே எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற பெரும் தலைவர்கள் அதிமுகவின் பொதுச்செயலாளர் இருந்தனர். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு பொதுச்செயலாளர் பதவி இல்லாமல் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக ஈபிஎஸ் செயல்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் ஒற்றை தலைமை பிரச்சனை காரணமாக மீண்டும் கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி நீக்கப்பட்டு இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ் தேர்வு செய்யப்பட்டார்.

எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பொதுக்குழு செல்லாது என அறிவிக்க கோரி ஓபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கில் ஒரு நீதிபதி கொண்ட அமர்வு பொதுக்குழு செல்லாது என்றும், இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு பொதுக்குழு செல்லும் என்றும் தீர்ப்பு வழங்கியது.

இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. கடந்த மாதம் 23ஆம் தேதி மேல்முறையீட்டு வழக்கில் பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது. மேலும் பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தில் மனு அளித்துக் கொள்ளும்படி உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

உச்சநீதிமன்றத்தின் இடையீட்டு மனு மூலம் இரட்டை இலையை பெற்ற ஈபிஎஸ் தரப்பினர் உற்சாகமாக இடைத்தேர்தலுக்கான பணிகளை மேற்கொண்டனர். இடைத்தேர்தலில் வெற்றிபெற்று தலைமையை நிரூபிக்கும் நோக்கத்தில் களம் கண்ட ஈபிஎஸ் தரப்பினருக்கு தோல்வி மட்டுமே மிஞ்சியது.

இதன் தொடர்ச்சியாக, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் ஓபிஎஸ்க்கு செல்வாக்கு அதிகமாக உள்ளதாக கூறப்படும் தென்மாவட்டங்களும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஈபிஎஸ் தரப்பினர் திட்டமிட்டுள்ளனர்.

ஏற்கனவே மார்ச் 9ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெறும் அறிவித்த நிலையில், தற்போது மார்ச் 10ஆம் தேதி தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதில், தற்போது இடைக்கால பொதுச்செயலாளராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிச்சாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்வதற்கான தேர்தல் நடத்துவது குறித்து அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தி, பின்னர் அதை பொதுக்குழு மூலம் தீர்மானமாக நிறைவேற்றி தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

தற்போது வரை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்றுதான் ஆவணங்கள் இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. பொதுக்குழு செல்லும் என்றுதான் உச்சநீதிமன்றம் கூறியுள்ளதாகவும், தீர்மானங்கள் குறித்து உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு நடைபெறுவதாலும், எடப்பாடி பழனிச்சாமியை இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரிக்கக்கூடாது என ஓபிஎஸ் தரப்பினர் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "வதந்தி பரப்பியவர்கள் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை" - திருமாவளவன் கோரிக்கை

சென்னை: அதிமுகவின் உச்சபட்ச அதிகாரமாக பொதுச்செயலாளர் பதவி உள்ளது. ஏற்கனவே எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற பெரும் தலைவர்கள் அதிமுகவின் பொதுச்செயலாளர் இருந்தனர். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு பொதுச்செயலாளர் பதவி இல்லாமல் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக ஈபிஎஸ் செயல்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் ஒற்றை தலைமை பிரச்சனை காரணமாக மீண்டும் கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி நீக்கப்பட்டு இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ் தேர்வு செய்யப்பட்டார்.

எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பொதுக்குழு செல்லாது என அறிவிக்க கோரி ஓபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கில் ஒரு நீதிபதி கொண்ட அமர்வு பொதுக்குழு செல்லாது என்றும், இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு பொதுக்குழு செல்லும் என்றும் தீர்ப்பு வழங்கியது.

இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. கடந்த மாதம் 23ஆம் தேதி மேல்முறையீட்டு வழக்கில் பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது. மேலும் பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தில் மனு அளித்துக் கொள்ளும்படி உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

உச்சநீதிமன்றத்தின் இடையீட்டு மனு மூலம் இரட்டை இலையை பெற்ற ஈபிஎஸ் தரப்பினர் உற்சாகமாக இடைத்தேர்தலுக்கான பணிகளை மேற்கொண்டனர். இடைத்தேர்தலில் வெற்றிபெற்று தலைமையை நிரூபிக்கும் நோக்கத்தில் களம் கண்ட ஈபிஎஸ் தரப்பினருக்கு தோல்வி மட்டுமே மிஞ்சியது.

இதன் தொடர்ச்சியாக, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் ஓபிஎஸ்க்கு செல்வாக்கு அதிகமாக உள்ளதாக கூறப்படும் தென்மாவட்டங்களும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஈபிஎஸ் தரப்பினர் திட்டமிட்டுள்ளனர்.

ஏற்கனவே மார்ச் 9ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெறும் அறிவித்த நிலையில், தற்போது மார்ச் 10ஆம் தேதி தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதில், தற்போது இடைக்கால பொதுச்செயலாளராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிச்சாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்வதற்கான தேர்தல் நடத்துவது குறித்து அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தி, பின்னர் அதை பொதுக்குழு மூலம் தீர்மானமாக நிறைவேற்றி தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

தற்போது வரை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்றுதான் ஆவணங்கள் இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. பொதுக்குழு செல்லும் என்றுதான் உச்சநீதிமன்றம் கூறியுள்ளதாகவும், தீர்மானங்கள் குறித்து உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு நடைபெறுவதாலும், எடப்பாடி பழனிச்சாமியை இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரிக்கக்கூடாது என ஓபிஎஸ் தரப்பினர் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "வதந்தி பரப்பியவர்கள் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை" - திருமாவளவன் கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.