ETV Bharat / state

'யாராக இருந்தாலும், வாயை மூடிக்கொண்டு சும்மா இருந்தால் நல்லது' - அமைச்சர் ஜெயக்குமார் - seeman speech

சென்னை: குடியரசு என நினைத்து வாய்க்கு வந்ததை பேசாமல், அனைவரும் வாயை மூடிக்கொண்டு இருந்தால் நல்லது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார்
author img

By

Published : Oct 18, 2019, 9:15 AM IST

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “நாங்குநேரி, விக்ரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள். நடந்து முடிந்த மக்களவை தேர்தலிலும், சமீபத்தில் நடந்த வேலூர் மக்களவைத் தேர்தலிலும் பார்க்கும் பொழுது 18 விழுக்காட்டிலிருந்து, 48 விழுக்காடு வாக்குகள் கணிசமாக உயர்ந்துள்ளது.

இதனை பார்க்கும் பொழுது இனிமேல் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிதான் இதில் எந்த மாறுபட்ட கருத்துமில்லை. திமுகவைப் பொறுத்தவரைப் பணம் கைகொடுக்கும் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். பணம் நிச்சயமாக அவர்களுக்கு கை கொடுக்காது.

அமைச்சர் ஜெயக்குமார் சென்னை விமான நிலையத்தில் பேட்டி

பொது அமைதி முக்கியம். இந்த ஒற்றுமையை சீர்குலைப்பதற்கும், விஷமத் தன்மையாகவும், கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும் பேசினால், சும்மா இருக்க முடியாது. சீமான் மட்டுமல்ல, யாராக இருந்தாலும் வாயை மூடிக்கொண்டு சும்மா இருந்தால் நல்லது. ஜனநாயகம் என்பதால் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசக்கூடாது” எனக் கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “நாங்குநேரி, விக்ரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள். நடந்து முடிந்த மக்களவை தேர்தலிலும், சமீபத்தில் நடந்த வேலூர் மக்களவைத் தேர்தலிலும் பார்க்கும் பொழுது 18 விழுக்காட்டிலிருந்து, 48 விழுக்காடு வாக்குகள் கணிசமாக உயர்ந்துள்ளது.

இதனை பார்க்கும் பொழுது இனிமேல் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிதான் இதில் எந்த மாறுபட்ட கருத்துமில்லை. திமுகவைப் பொறுத்தவரைப் பணம் கைகொடுக்கும் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். பணம் நிச்சயமாக அவர்களுக்கு கை கொடுக்காது.

அமைச்சர் ஜெயக்குமார் சென்னை விமான நிலையத்தில் பேட்டி

பொது அமைதி முக்கியம். இந்த ஒற்றுமையை சீர்குலைப்பதற்கும், விஷமத் தன்மையாகவும், கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும் பேசினால், சும்மா இருக்க முடியாது. சீமான் மட்டுமல்ல, யாராக இருந்தாலும் வாயை மூடிக்கொண்டு சும்மா இருந்தால் நல்லது. ஜனநாயகம் என்பதால் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசக்கூடாது” எனக் கூறியுள்ளார்.

Intro:அமைச்சர் ஜெயக்குமார் சென்னை விமான நிலையத்தில் பேட்டிBody:அமைச்சர் ஜெயக்குமார் சென்னை விமான நிலையத்தில் பேட்டி

நாங்குநேரி விக்ரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள்

கடந்த பாராளுமன்றத் தேர்தலிலும் சமீபத்தில் நடந்த வேலூர் நாடாளுமன்றத் தேர்தலிலும் பார்க்கும் பொழுது 18 சதவீதத்தில் இருந்து 48 சதவீதம் வாக்குகள் வந்துள்ளது இந்த நிலையை பார்க்கும் பொழுது இனிமேல் தமிழகத்தை பொருத்தவரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிதான் இதில் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை

இரண்டு தொகுதியிலும் மக்களுக்கான நல்ல திட்டங்கள் சென்றடைந்துள்ளது தாலிக்கு தங்கம், மடிக்கணினி, விலையில்லா சைக்கிள் இதுபோன்ற எண்ணற்ற திட்டங்கள் எங்களுக்கு கை கொடுக்கும் என்றார்

திமுகவைப் பொறுத்தவரை பணம் கைக்கொடுக்கும் என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள் பணம் நிச்சயமாக அவர்களுக்கு கை கொடுக்காது

பொது அமைதி முக்கியம் இந்த ஒற்றுமை சீர்குலைப்பதற்கும் விஷமத்தன்மையாகவும் கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும் பேசினால் சும்மா இருக்க முடியாது சீமான் மட்டுமல்ல யாராக இருந்தாலும் வாயை மூடிக்கொண்டு சும்மா இருந்தால் நல்லது ஜனநாயகம் என்பதால் தவறாக பேசக்கூடாது

வறச்சியும் வெல்லத்தையும் திறமையாக சமாளித்து கொண்டிருக்கிறோம் மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது தேங்கிய மழைநீர் களை அப்புறப்படுத்த சென்னை மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறதுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.