ETV Bharat / state

இரவு நேரங்களில் உணவு டெலிவரி செய்வதுபோல் 68 புல்லட் பைக்குகள் திருட்டு!

author img

By

Published : Oct 16, 2020, 4:51 PM IST

சென்னை: இரவு நேரங்களில் உணவு டெலிவரி செய்வதுபோல் புல்லட் இரு சக்கர வாகனங்களைத் திருடும் 4 பேர் கொண்ட கும்பலை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

68-royal-enfielf-bullet-bikes-thefted-in-chennai
68-royal-enfielf-bullet-bikes-thefted-in-chennai

சில மாதங்களுக்கு முன்பு எழும்பூர் காவலர் சரவணனின் புல்லட் வாகனம் திருடு போனது. இதனைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் சென்னையில் 60-க்கும் மேற்பட்ட புல்லட் வாகனங்கள் திருடுபோனது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து கிழக்கு மண்டல இணை ஆணையர் சுதாகர் தலைமையில், உதவி ஆய்வாளர் சுதாகர், தலைமைக் காவலர் சரவணகுமார் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டுவந்தனர்.

கடந்த 4ஆம் தேதி வாட்ஸ் அப் குழு வைத்து புல்லட் திருடும் கும்பலை காவல் துறையினர் கைதுசெய்தனர். சாப்ட்வேர் என்ஜினீயரான முகமது சஃபி, சிபி மற்றும் அமீர்ஜான் ஆகிய மூன்று பேரை தனிப்படையினர் கைதுசெய்தனர்.

வாட்ஸ் அப் குழுவில் வாடிக்கையாளர் கேட்கும் விதத்தில், விரும்பும் ரகத்தில் புல்லட் பைக்குகளை தேடிக் கண்டுபிடித்து திருடும் இந்தக் கும்பல், சென்னையில் மட்டும் 68 புல்லட் பைக்குகளைத் திருடியுள்ளனர். இரண்டு வருடம் புல்லட் பைக்குகளை திருடி தமிழ்நாடு, கேரளாவில் பைக் ரைடர்கள் போல் சென்று விற்பனை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. வாகன திருட்டில் முக்கிய குற்றவாளியான அப்துல்லாஹ் (எ) செல்வக்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள், முகமது சபி பயன்படுத்திய வாட்ஸ் அப் குழுவில் இருந்ததைக் காவலர்கள் கண்டுபிடித்தனர்.

இரவு நேரங்களில் உணவு டெலிவரி செய்வது போல் 68 புல்லட் பைக்கள் திருட்டு

சென்னையில் திருடப்படும் ராயல் என்பீல்டு ரக புல்லட் வாகனங்கள் கேரளா மாநிலம் திருவனந்தபுரம், நெடுமாங்காடு, பளிச்சல் மற்றும் தமிழ்நாட்டின் தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், மதுரை, தேனி போன்ற பகுதிகளில் விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இவர்களைப் பிடிக்க தனிப்படை காவலர்கள், வாட்ஸ் அப் குழுவில் உள்ள ஒவ்வொரு எண்ணையும் சைபர் கிரைம் காவலர்கள் ஆய்வுசெய்து தகவல்களை சேகரித்தனர். குறிப்பாக போலி முகவரி பெயரில் பல எண்கள் வாங்கப்பட்டதால், அந்த எண்கள் செயல்படும்போது கிடைக்கும் சிக்னல்களை அடிப்படையாக வைத்து, இருப்பிடங்களைக் கண்டறிந்து, அந்த எண்ணை வைத்திருக்கும் நபரை காவல் துறையினர் தேடத் தொடங்கினர்.

இந்நிலையில் சைபர் கிரைம் காவல் துறையினர் சிக்னல் அடிப்படையில் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வுசெய்து, இந்தக் கும்பலைச் சேர்ந்த முக்கிய குற்றவாளிகளான ஜமாலுதீன், சையது இப்ராஹிம் ஆகிய இருவரையும் கைதுசெய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் முக்கிய குற்றவாளியான அப்துல்லாஹ் சென்னையில் திருடிய புல்லட் உடன் தஞ்சை செல்லும் வழியில் தங்க சங்கிலியை பறித்தபோது தஞ்சை டவுன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் இருப்பது தெரியவ்ந்தது. மேலும் அவனது கூட்டாளிகளான அமீர், கதிரவன் இருவரும் புல்லட் வாகனங்களை சென்னையில் இருந்து திருடி செல்வதும் கண்டுபிடிக்கப்பட்டது.

சையது இப்ராஹிம், அப்துல்லாஹ் ஆகிய இருவரும் புல்லட் வாகனங்களை கொள்ளை அடிப்பதற்காகவே சென்னை கோட்டை ரயில் நிலையம் அருகே சைனா பஜாரில் யாருக்கும் சந்தேகம் வராத வகையில் செல்போன் கடை வைத்து பிசினஸ் செய்துகொண்டே, வாட்ஸ் அப் குழுவில் கொடுக்கும் ஆர்டரின் பேரில் இரவு நேரங்களில் புல்லட்களை திருடி உள்ளனர்.

திருடுவதற்காக அமீர், முல்லை ஆகிய இருவரையும் தனியார் நிறுவனத்தில் உணவு டெலிவரி பாயாக சேர்த்துவிட்டு, நள்ளிரவில் வாடிக்கையாளர்களுக்குத் தேவைக்கு ஏற்ப புல்லட்களைத் திருடி வந்ததும் தெரியவந்தது. அவர்களை விசாரணை செய்து புல்லட்கள் எந்தெந்த மாவட்டத்தில் விற்பனை செய்யப்பட்டன என்பதை கண்டறிந்து மீட்டு சென்னைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதுவரை கேரளா, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 26 புல்லட்டுகள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து திருடப்பட்ட மற்ற புல்லட் பைக் வாகனங்களையும் தேடும் பணியில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.

மேலும் சிறையில் இருக்கும் அப்துல்லாவை விசாரணை செய்து, அவர் தொடர்புடைய மற்ற நபர்களையும் தேடும் பணி நடந்துவருகிறது. வாட்ஸ் அப் குழுவில் இருக்கும் எண்கள் அனைத்தும் போலி முகவரி கொடுத்து வாங்கப்பட்ட சிம்கார்டுகள் என்பதால், புல்லட் திருடும் கும்பல்களை கைது செய்வது சவால் நிறைந்ததாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் திருடப்பட்ட 42 புல்லட் பைக்குகள் பறிமுதல் செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பாலியல் குற்றவாளிக்கு தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக சாகும் வரை ஆயுள் விதிப்பு

சில மாதங்களுக்கு முன்பு எழும்பூர் காவலர் சரவணனின் புல்லட் வாகனம் திருடு போனது. இதனைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் சென்னையில் 60-க்கும் மேற்பட்ட புல்லட் வாகனங்கள் திருடுபோனது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து கிழக்கு மண்டல இணை ஆணையர் சுதாகர் தலைமையில், உதவி ஆய்வாளர் சுதாகர், தலைமைக் காவலர் சரவணகுமார் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டுவந்தனர்.

கடந்த 4ஆம் தேதி வாட்ஸ் அப் குழு வைத்து புல்லட் திருடும் கும்பலை காவல் துறையினர் கைதுசெய்தனர். சாப்ட்வேர் என்ஜினீயரான முகமது சஃபி, சிபி மற்றும் அமீர்ஜான் ஆகிய மூன்று பேரை தனிப்படையினர் கைதுசெய்தனர்.

வாட்ஸ் அப் குழுவில் வாடிக்கையாளர் கேட்கும் விதத்தில், விரும்பும் ரகத்தில் புல்லட் பைக்குகளை தேடிக் கண்டுபிடித்து திருடும் இந்தக் கும்பல், சென்னையில் மட்டும் 68 புல்லட் பைக்குகளைத் திருடியுள்ளனர். இரண்டு வருடம் புல்லட் பைக்குகளை திருடி தமிழ்நாடு, கேரளாவில் பைக் ரைடர்கள் போல் சென்று விற்பனை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. வாகன திருட்டில் முக்கிய குற்றவாளியான அப்துல்லாஹ் (எ) செல்வக்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள், முகமது சபி பயன்படுத்திய வாட்ஸ் அப் குழுவில் இருந்ததைக் காவலர்கள் கண்டுபிடித்தனர்.

இரவு நேரங்களில் உணவு டெலிவரி செய்வது போல் 68 புல்லட் பைக்கள் திருட்டு

சென்னையில் திருடப்படும் ராயல் என்பீல்டு ரக புல்லட் வாகனங்கள் கேரளா மாநிலம் திருவனந்தபுரம், நெடுமாங்காடு, பளிச்சல் மற்றும் தமிழ்நாட்டின் தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், மதுரை, தேனி போன்ற பகுதிகளில் விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இவர்களைப் பிடிக்க தனிப்படை காவலர்கள், வாட்ஸ் அப் குழுவில் உள்ள ஒவ்வொரு எண்ணையும் சைபர் கிரைம் காவலர்கள் ஆய்வுசெய்து தகவல்களை சேகரித்தனர். குறிப்பாக போலி முகவரி பெயரில் பல எண்கள் வாங்கப்பட்டதால், அந்த எண்கள் செயல்படும்போது கிடைக்கும் சிக்னல்களை அடிப்படையாக வைத்து, இருப்பிடங்களைக் கண்டறிந்து, அந்த எண்ணை வைத்திருக்கும் நபரை காவல் துறையினர் தேடத் தொடங்கினர்.

இந்நிலையில் சைபர் கிரைம் காவல் துறையினர் சிக்னல் அடிப்படையில் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வுசெய்து, இந்தக் கும்பலைச் சேர்ந்த முக்கிய குற்றவாளிகளான ஜமாலுதீன், சையது இப்ராஹிம் ஆகிய இருவரையும் கைதுசெய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் முக்கிய குற்றவாளியான அப்துல்லாஹ் சென்னையில் திருடிய புல்லட் உடன் தஞ்சை செல்லும் வழியில் தங்க சங்கிலியை பறித்தபோது தஞ்சை டவுன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் இருப்பது தெரியவ்ந்தது. மேலும் அவனது கூட்டாளிகளான அமீர், கதிரவன் இருவரும் புல்லட் வாகனங்களை சென்னையில் இருந்து திருடி செல்வதும் கண்டுபிடிக்கப்பட்டது.

சையது இப்ராஹிம், அப்துல்லாஹ் ஆகிய இருவரும் புல்லட் வாகனங்களை கொள்ளை அடிப்பதற்காகவே சென்னை கோட்டை ரயில் நிலையம் அருகே சைனா பஜாரில் யாருக்கும் சந்தேகம் வராத வகையில் செல்போன் கடை வைத்து பிசினஸ் செய்துகொண்டே, வாட்ஸ் அப் குழுவில் கொடுக்கும் ஆர்டரின் பேரில் இரவு நேரங்களில் புல்லட்களை திருடி உள்ளனர்.

திருடுவதற்காக அமீர், முல்லை ஆகிய இருவரையும் தனியார் நிறுவனத்தில் உணவு டெலிவரி பாயாக சேர்த்துவிட்டு, நள்ளிரவில் வாடிக்கையாளர்களுக்குத் தேவைக்கு ஏற்ப புல்லட்களைத் திருடி வந்ததும் தெரியவந்தது. அவர்களை விசாரணை செய்து புல்லட்கள் எந்தெந்த மாவட்டத்தில் விற்பனை செய்யப்பட்டன என்பதை கண்டறிந்து மீட்டு சென்னைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதுவரை கேரளா, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 26 புல்லட்டுகள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து திருடப்பட்ட மற்ற புல்லட் பைக் வாகனங்களையும் தேடும் பணியில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.

மேலும் சிறையில் இருக்கும் அப்துல்லாவை விசாரணை செய்து, அவர் தொடர்புடைய மற்ற நபர்களையும் தேடும் பணி நடந்துவருகிறது. வாட்ஸ் அப் குழுவில் இருக்கும் எண்கள் அனைத்தும் போலி முகவரி கொடுத்து வாங்கப்பட்ட சிம்கார்டுகள் என்பதால், புல்லட் திருடும் கும்பல்களை கைது செய்வது சவால் நிறைந்ததாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் திருடப்பட்ட 42 புல்லட் பைக்குகள் பறிமுதல் செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பாலியல் குற்றவாளிக்கு தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக சாகும் வரை ஆயுள் விதிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.