சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அதிகளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக சுங்கத்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. அதனடிப்படையில், அவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது இலங்கையைச் சேர்ந்த பயணி சாதிக்(45) என்பவரை அலுவலர்கள் சோதனை செய்தனர். அதில், உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இதன் மூலம் 17 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 387 கிராம் தங்கத்தை அவரிடம் அலுவலர்கள் கைப்பற்றினர்.
அதேபோல், துபாயிலிருந்து சென்னை வந்த சென்னையை சேர்ந்த சொர்ணமூர்த்தி (25) என்பவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். முன்னுக்கு பின் முரணாக அவர் பேசியதால் உடமைகளை சோதனை செய்தபோது ஸ்பீக்கர் பெட்டியில் தங்கத்தை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அவரிடமிருந்து 12 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 290 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது.
சுங்கத்துறை அலுவலர்களின் அதிரடி நடவடிக்கையின் மூலம் 2 பேரிடம் இருந்து ரூ. 29 லட்சத்து 61 ஆயிரம் மதிப்புள்ள 677 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: திமிரு இருந்தா மோதிப் பாரு திமிலை நீயும் தொட்டு பாரு...!