ETV Bharat / state

கால்நடை மருத்துவப்படிப்பில் சேர வேண்டுமா? இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

author img

By

Published : Jun 12, 2023, 7:40 AM IST

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இளநிலை பட்டப்படிப்புகளுக்கு 660 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் படிப்பிற்கு இன்று முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

கால்நடை மருத்துவப்படிப்பில் சேர இன்று முதல் ஜூன் 30க்குள் விண்ணப்பிக்கலாம்
கால்நடை மருத்துவப்படிப்பில் சேர இன்று முதல் ஜூன் 30க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு மற்றும் பி.டெக் தொழில்நுட்ப பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்களை மாணவர்கள் இன்று (ஜூன் 12) காலை 10 மணி முதல் ஜூன் 30-ஆம் தேதி மாலை 5 மணி வரை https://adm.tanuvas.ac.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் 12 ம் வகுப்பில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடத்தப்படும்.

மேலும் கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பில் நடப்பாண்டில் தேனி வீரப்பாண்டி, உடுமலைப் பேட்டை கால்நடை மருத்துவக் கல்லூரியில் தலா 40 இடங்கள் என 80 இடங்கள் கூடுதலாக அனுமதிப் பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் சேர்க்கை இடங்கள் 660 என உயர்ந்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் மாணவர் சேர்க்கைக்குழு(இளநிலைப் பட்டப்படிப்பு ) தலைவர் ஒரு அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

அதி, “தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டப்படிப்புகளில் கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பாராமரிப்பு பட்டப்படிப்பில், சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் 120 இடங்களும், நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாடு கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றில் தலா 100 இடங்களும், சேலம் தலைவாசல் கூட்டுரோடு, தேனி வீரப்பாண்டி, உடுமலைப்பேட்டை கால்நடை மருத்துவக்கல்லூரி ஆகியவற்றில் தலா 80 இடங்களும் என 660 இடங்கள் உள்ளது.

உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்பில் (பி.டெக்) கோடுவளி உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் 40 இடங்களும், ஓசூர் மத்திகிரி கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பு (பி.டெக்) 40 இடங்களும், கோடுவளி உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் பால்வளத் தொழில்நுட்ப பட்டபடிப்பில் 20 இடங்களும் நிரப்பட உள்ளது.

இந்த இடங்களில் 15 சதவீதம் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்படும். இதற்கு மாணவர்கள் நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்களே கணக்கில் கொள்ளப்படும். இந்தப் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தின் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் ஜூன் 12 ஆம் தேதி காலை 10 மணி முதல் ஜூன் 30 ஆம் தேதி மாலை 5 மணி வரையில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

பிற வழிகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. மேலும் இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்த பின்னர் மாணவர்கள் தபால் மூலம் விண்ணப்பங்களை அனுப்ப தேவையில்லை” எனவும் அதில் கூறி உள்ளார். விண்ணப்பம் செய்யும் மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் தேதி மற்றும் கலந்தாய்வு நடைபெறும் தேதிகள் குறித்த விபரங்கள் பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.

இதையும் படிங்க: 'மாணவர்களின் எதிர்காலம் சூரியனாய் பிரகாசிக்கட்டும்' - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்து

சென்னை: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு மற்றும் பி.டெக் தொழில்நுட்ப பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்களை மாணவர்கள் இன்று (ஜூன் 12) காலை 10 மணி முதல் ஜூன் 30-ஆம் தேதி மாலை 5 மணி வரை https://adm.tanuvas.ac.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் 12 ம் வகுப்பில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடத்தப்படும்.

மேலும் கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பில் நடப்பாண்டில் தேனி வீரப்பாண்டி, உடுமலைப் பேட்டை கால்நடை மருத்துவக் கல்லூரியில் தலா 40 இடங்கள் என 80 இடங்கள் கூடுதலாக அனுமதிப் பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் சேர்க்கை இடங்கள் 660 என உயர்ந்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் மாணவர் சேர்க்கைக்குழு(இளநிலைப் பட்டப்படிப்பு ) தலைவர் ஒரு அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

அதி, “தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டப்படிப்புகளில் கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பாராமரிப்பு பட்டப்படிப்பில், சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் 120 இடங்களும், நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாடு கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றில் தலா 100 இடங்களும், சேலம் தலைவாசல் கூட்டுரோடு, தேனி வீரப்பாண்டி, உடுமலைப்பேட்டை கால்நடை மருத்துவக்கல்லூரி ஆகியவற்றில் தலா 80 இடங்களும் என 660 இடங்கள் உள்ளது.

உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்பில் (பி.டெக்) கோடுவளி உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் 40 இடங்களும், ஓசூர் மத்திகிரி கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பு (பி.டெக்) 40 இடங்களும், கோடுவளி உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் பால்வளத் தொழில்நுட்ப பட்டபடிப்பில் 20 இடங்களும் நிரப்பட உள்ளது.

இந்த இடங்களில் 15 சதவீதம் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்படும். இதற்கு மாணவர்கள் நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்களே கணக்கில் கொள்ளப்படும். இந்தப் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தின் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் ஜூன் 12 ஆம் தேதி காலை 10 மணி முதல் ஜூன் 30 ஆம் தேதி மாலை 5 மணி வரையில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

பிற வழிகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. மேலும் இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்த பின்னர் மாணவர்கள் தபால் மூலம் விண்ணப்பங்களை அனுப்ப தேவையில்லை” எனவும் அதில் கூறி உள்ளார். விண்ணப்பம் செய்யும் மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் தேதி மற்றும் கலந்தாய்வு நடைபெறும் தேதிகள் குறித்த விபரங்கள் பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.

இதையும் படிங்க: 'மாணவர்களின் எதிர்காலம் சூரியனாய் பிரகாசிக்கட்டும்' - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.