ETV Bharat / state

தமிழ்நாட்டில் 282 பேருக்கு H1N1 வைரஸ் பாதிப்பு : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

author img

By

Published : Sep 17, 2022, 6:36 AM IST

தமிழ்நாட்டில் 282 பேர் H1N1 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 282 நபர்களுக்கு H1N1 வைரஸ் பாதிப்பு
தமிழ்நாட்டில் 282 நபர்களுக்கு H1N1 வைரஸ் பாதிப்பு

சென்னை: சென்னையில் மாதவரம் பகுதியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 37 பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை மக்கள் மற்றும் நலவாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா ஆகியோர் துவக்கி வைத்தனர்.

முன்னதாக மாதவரம் பகுதியில் இயங்கும் பள்ளிகளுக்கு உணவு தயாரிக்கும் இடத்திலிருந்து உணவை, விநியோக செய்யும் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

அப்போது பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், கடந்த அதிமுக ஆட்சியில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது என்பது ஒரு போலியான வாதம், தன்னார்வல தொண்டு நிறுவனங்கள் மூலம் ஓரிரு பள்ளிகளில் மட்டுமே இத்திட்டம் தொடங்கப்பட்டு சில நாட்களில் முடிவுக்கு வந்தது. மிகவும் சுகாதார முறையில் இந்த உணவுகள் தயாரிக்கப்பட்டு, பள்ளிகளுக்கு அனுப்பப்பட சென்னை மாநகராட்சி சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு வழங்கப்படும் இந்த காலை உணவு திட்டத்திற்காக மகளிர் சுய உதவி குழு உறுப்பினருக்கு தனியாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது, தயாரிக்கப்படும் உணவு தரம் மற்றும் தயாரிப்பிடம் தொடர்ந்து உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. 2020இல் கொண்டு வரப்பட்ட தேசிய கல்விக்கொள்கையில் காலை உணவுத் திட்டம் இருக்கிறது என்று சொன்னால், அப்போதே ஏன் தமிழ்நாட்டில் திட்டத்தை தொடங்கவில்லை, அப்போது அதிமுக தான் ஆட்சியில் இருந்தது. அப்போது தொடங்காமல், இப்போது பேசுகின்றனர்.

தமிழ்நாட்டில் 282 பேர் H1N1 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 13 குழந்தைகள் மட்டுமே அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த ஜனவரி முதல் தற்போது வரை 9 குழந்தைகள் H1N1 வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இந்த மாதம் மட்டும் 9 பேர் உயிரிழந்திருப்பதாகக் கூறி பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம். H1N1 வைரஸில் இருந்து தற்காத்துக் கொள்ள வீட்டுக்குள்ளும் முகக்கவசம் அணிய வேண்டும்.

வெள்ளிக்கிழமைகளில் கிச்சடி வழங்கப்படும் என்ற அரசு அறிவிப்பின்படி மாணவர்களுக்கு ஒரு இனிப்பு மற்றும் கிச்சடி இன்று வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மேயர் பிரியா, முதலமைச்சரால் சட்டமன்ற பேரவை 110 விதியின் கீழ் சிற்றுண்டி திட்டம் கொண்டு வரப்பட்டு, 1 முதல் 5 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு துவங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி உட்பட்ட 37 பள்ளிகளில் இந்த திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் சுதர்சனம், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் பேடி, மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: போராட்டத்தில் ஈடுபட முயன்ற கிராம சுகாதார செவிலியர்கள் கைது

சென்னை: சென்னையில் மாதவரம் பகுதியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 37 பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை மக்கள் மற்றும் நலவாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா ஆகியோர் துவக்கி வைத்தனர்.

முன்னதாக மாதவரம் பகுதியில் இயங்கும் பள்ளிகளுக்கு உணவு தயாரிக்கும் இடத்திலிருந்து உணவை, விநியோக செய்யும் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

அப்போது பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், கடந்த அதிமுக ஆட்சியில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது என்பது ஒரு போலியான வாதம், தன்னார்வல தொண்டு நிறுவனங்கள் மூலம் ஓரிரு பள்ளிகளில் மட்டுமே இத்திட்டம் தொடங்கப்பட்டு சில நாட்களில் முடிவுக்கு வந்தது. மிகவும் சுகாதார முறையில் இந்த உணவுகள் தயாரிக்கப்பட்டு, பள்ளிகளுக்கு அனுப்பப்பட சென்னை மாநகராட்சி சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு வழங்கப்படும் இந்த காலை உணவு திட்டத்திற்காக மகளிர் சுய உதவி குழு உறுப்பினருக்கு தனியாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது, தயாரிக்கப்படும் உணவு தரம் மற்றும் தயாரிப்பிடம் தொடர்ந்து உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. 2020இல் கொண்டு வரப்பட்ட தேசிய கல்விக்கொள்கையில் காலை உணவுத் திட்டம் இருக்கிறது என்று சொன்னால், அப்போதே ஏன் தமிழ்நாட்டில் திட்டத்தை தொடங்கவில்லை, அப்போது அதிமுக தான் ஆட்சியில் இருந்தது. அப்போது தொடங்காமல், இப்போது பேசுகின்றனர்.

தமிழ்நாட்டில் 282 பேர் H1N1 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 13 குழந்தைகள் மட்டுமே அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த ஜனவரி முதல் தற்போது வரை 9 குழந்தைகள் H1N1 வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இந்த மாதம் மட்டும் 9 பேர் உயிரிழந்திருப்பதாகக் கூறி பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம். H1N1 வைரஸில் இருந்து தற்காத்துக் கொள்ள வீட்டுக்குள்ளும் முகக்கவசம் அணிய வேண்டும்.

வெள்ளிக்கிழமைகளில் கிச்சடி வழங்கப்படும் என்ற அரசு அறிவிப்பின்படி மாணவர்களுக்கு ஒரு இனிப்பு மற்றும் கிச்சடி இன்று வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மேயர் பிரியா, முதலமைச்சரால் சட்டமன்ற பேரவை 110 விதியின் கீழ் சிற்றுண்டி திட்டம் கொண்டு வரப்பட்டு, 1 முதல் 5 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு துவங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி உட்பட்ட 37 பள்ளிகளில் இந்த திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் சுதர்சனம், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் பேடி, மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: போராட்டத்தில் ஈடுபட முயன்ற கிராம சுகாதார செவிலியர்கள் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.