ETV Bharat / state

+2 தேர்வு முடிவை வேறு தேதியில் மாற்றவும் - பொன்.ராதாகிருஷ்ணன்

சென்னை: கிறிஸ்தவர்கள் கொண்டாடும் ஈஸ்டர் பண்டிகை தினத்தன்று பன்னிரெண்டாம் தேர்வு முடிவை அன்று வெளியிடாமல் வேறு தேதியில் வெளியிட வேண்டும் என பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

author img

By

Published : Apr 15, 2019, 10:38 PM IST

பொன்.இராதாகிருஷ்ணன்

தமிழ்நாட்டில் கடந்த மாதம் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிவு வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாணவர்கள் அனைவரும் தேர்வு முடிவுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஈஸ்டர் பண்டிகை வர இருப்பதால் தேர்வு முடிவை அன்று வெளியிடாமல் வேறு தேதியில் வெளியிடவேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'மார்ச் 1ஆம் தேதி தொடங்கி மார்ச் 19ஆம் தேதி வரை நடைபெற்ற 12 ஆம் வகுப்பு தேர்வுக்கான முடிவு வரும் ஏப்ரல் 19ஆம் தேதி வெளியிட இருப்பதை அரசு அறிவிப்பின் மூலம் தெரியவந்தது. ஏப்ரல் 19ஆம் தேதி உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவ மக்கள் இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்த நாளை ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடுகின்றனர்.

இந்த ஈஸ்டர் பண்டிகை கிறிஸ்தவ மக்கள் கொண்டாடும் மிக முக்கியமான ஒரு பண்டிகையாகும். அந்த நேரத்தில் தேவாலயங்களில் நடக்கும் பிரார்த்தனை கூட்டங்களில் அதிக எண்ணிக்கையில் கிறிஸ்தவ மக்கள் பங்கு கொள்வார்கள். இதனைக் கருத்தில் கொண்டு 12 ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவை ஏப்ரல் 19ஆம் தேதிக்கு பதிலாக வேறொரு தேதியில் அறிவிக்க வேண்டுமாய் தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறேன்' என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த மாதம் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிவு வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாணவர்கள் அனைவரும் தேர்வு முடிவுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஈஸ்டர் பண்டிகை வர இருப்பதால் தேர்வு முடிவை அன்று வெளியிடாமல் வேறு தேதியில் வெளியிடவேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'மார்ச் 1ஆம் தேதி தொடங்கி மார்ச் 19ஆம் தேதி வரை நடைபெற்ற 12 ஆம் வகுப்பு தேர்வுக்கான முடிவு வரும் ஏப்ரல் 19ஆம் தேதி வெளியிட இருப்பதை அரசு அறிவிப்பின் மூலம் தெரியவந்தது. ஏப்ரல் 19ஆம் தேதி உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவ மக்கள் இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்த நாளை ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடுகின்றனர்.

இந்த ஈஸ்டர் பண்டிகை கிறிஸ்தவ மக்கள் கொண்டாடும் மிக முக்கியமான ஒரு பண்டிகையாகும். அந்த நேரத்தில் தேவாலயங்களில் நடக்கும் பிரார்த்தனை கூட்டங்களில் அதிக எண்ணிக்கையில் கிறிஸ்தவ மக்கள் பங்கு கொள்வார்கள். இதனைக் கருத்தில் கொண்டு 12 ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவை ஏப்ரல் 19ஆம் தேதிக்கு பதிலாக வேறொரு தேதியில் அறிவிக்க வேண்டுமாய் தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறேன்' என அவர் தெரிவித்துள்ளார்.

பன்னிரெண்டாம் தேர்வு முடிவை வேறு தேதியில் வெளியிட வேண்டும் - பொன்.இராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் கடந்த மாதம் 12-ம் வகுப்பு தேர்வு நடைபெற்றது .இந்த தேர்வுக்கான முடிவை வரும் ஏப்ரல் 19-ம் தேதி அன்று வெளிடப்போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது .அன்றைய தேதியில் ஈஸ்டர் பண்டிகை வரவிருப்பதால் தேர்வுக்கான முடிவை அன்று வெளியிடாமல் வேறு தேதியில் வெளியிடவேண்டும் என்று 
மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் தமிழக அரசிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் .இது தொடர்பாக அவர் சார்பில் வெளியிட்டுள்ள அலுவலக 
பத்திரிக்கை செய்தியில் தெரிவித்துளதாவது  :

கடந்த மார்ச் 1 -ம் தேதி தொடங்கி மார்ச் -19 வரை நடைபெற்ற 12 -ஆம் வகுப்பு தேர்வுக்கான முடிவு வரும் ஏப்ரல் 19 -ம் தேதி வெளியிட இருப்பதை அரசு அறிவிப்பின் மூலம் தெரிய வந்தது. ஏப்ரல் 19 -ம் தேதி உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவ மக்கள் இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்த நாளை ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடுகின்றனர். ஈஸ்டர் பண்டிகை கிறிஸ்தவ மக்கள் கொண்டாடும் மிக முக்கியமான ஒரு பண்டிகையாகும். அந்த நேரத்தில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறும். இந்த பிரார்த்தனை கூட்டங்களில் அதிக எண்ணிக்கையில் கிறிஸ்தவ மக்கள் பங்கு கொள்வார்கள். இதனை கருத்தில் கொண்டு 12 -ம் வகுப்புக்கான தேர்வு முடிவை ஏப்ரல் 19 -ம் தேதிக்கு பதிலாக வேறொரு தேதியில் அறிவிக்க வேண்டுமாய் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன். 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார் .

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.